இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் நேற்று (19.03.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சலாவுதீன் யூனிட் சார்பாக சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினுடைய மாவட்ட செயலாளர் நியாஸ் கான் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
உடன் டிவிசன் தலைவர் பசிர் அலி மற்றும் நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சுகாதாரமற்ற பகுதிகளை தூய்மை படுத்துவது, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) வழங்குவது மற்றும் தெருமுனைக்கூட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற்றனர்.
You must be logged in to post a comment.