கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா வண்ணாங்குண்டு குருப் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமுகபாதுகாப்புத்திட்ட தாசில்தார்.எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர்.உமாராணி மற்றும் மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இம்முகாமில் 6 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 3பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம் , பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 69 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இம்முகாமில் திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர். முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலரகள் மாரியப்பன், சபரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். வேலாயுதம் உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.