இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் பல்வேறு அலுவல் பணி காரணமாக வெளியூரில் உள்ள காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 6வது புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அரங்குகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள், மூலுகை கண்காட்சி, ஒவிய கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி பட்டறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும். புத்தக படிப்பு என்பது இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கு விப்பதற்காக நடத்தப்படுகிறது. புத்தக வாசிப்பு என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டத்திலும் நடத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.இந்த அறிய வாய்பை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் ஒவ்வொருவரும் புத்தகங்களை நேசித்து வாழ்வில் வளம் பெற வேண்டுமென தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், இராமநாதபுரத்தில் இன்று 6ஆவது புத்தக திருவிழா நடைபெறுகிறது. இராமநாத புரத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக இராமேஸ்வரம் இந்திய திருநாட்டின் நுழைவுப்பகுதியாக இருப்பது பெருமையான ஒன்றாகும். அதேபோல் உலகளவில் பேசப்பட்ட தலைவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த பூமி இது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமாகும். இத்தகைய சிறப்புமிக்க நம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. எல்லோருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து வருகின்றன. அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது இலட்சியம் நிறைவேறும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைக்கும். அது நமக்காக ஏற்படுத்தக்கூடிய நிரந்தர தீர்வு அல்ல. அதே வேலை ஒரு புத்தகத்தை நாம் முழுமையாக படிக்கும் பொழுது அதை அறிந்து கொள்வது மட்டுமின்றி தேவையான நேரங்கள் எல்லாம் பார்த்து சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் புத்தகம் இருந்து வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசே ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவிட்டு நடைபெற்று வருகிறது.இது வெறும் புத்தக கண்காட்சி அல்ல. மாணவ பருவத்தில் நாம் திட்டமிட்ட ஒரு சில புத்தகங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்படும் ஆனால் இது போன்ற விழாக்களின் வாயிலாக பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கப்பெறும் இது போன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தவறாமல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். சில புத்தகங்கள் அதிக விலை என்றால் மாணவர்கள் குழுவாக சேர்ந்து புத்தகம் வாங்கி ஒருவர் பின் ஒருவராக படித்து பயன்பெறலாம். நமது இலக்கு என்பது ஒவ்வொருவரும் புத்தகத்தை வாசிப்பது என்பதை விட ஒவ்வொருவரும் நேசிப்பு தன்மையை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்ற சிறந்த வாசகமாக தேர்வு செய்யப்பட்டு வாசகத்தை எழுதிய கீழக்கரை அமிர்த வித்யாலயா பள்ளி மாணவி சுவாஸ்திகா ஹரிணியை பாராட்டி ரூ.2000/- மதிப்பீட்டில் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் 12.02.2024 வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுவதுடன், தொடர்ந்து கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.டி.பிரபாகரன், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவின் தங்கம் , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
தேசிய செய்திகள்
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் தனியார் மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை நடைபெற்றது. சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இன்றிலிருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியை வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் G.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ,PR நடராஜன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் N. குணசேகரன் முத்து கண்ணன்.K. காமராஜ்A. ராதிகா கோவை மாவட்ட செயலாளர் C. பத்மநாபன்.CITU மாவட்ட தலைவர் மனோகரன் மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ! நடிகர் விஜய்யின் புதிய கட்சி !!
by Baker BAker
written by Baker BAker
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் என்று பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அறிவித்துள்ளார் இது அவரது மக்கள் இயக்க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து இன்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் புதிய கட்டுமான பணியின் ராட்சத இரும்பு கிரேன் முறிந்து இருவர் காயம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியினை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள், கடந்த சில மாதங்களாக விரைவு படுத்தப்பட்ட நிலையில் கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுவே தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த தூக்குப் பாலத்தினை தாங்கி நிற்ககூடிய தூண்கள் அமைக்கும் பணி ஒரு புறம் முடிந்த நிலையில், தற்போது மறுபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ராட்சத இரும்பு கிரேன்கள் கடலின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கட்டுமான பணியில் இருந்த கிரேன்களில் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் நாட்டுப்படகில் பணியாற்றிய உள்ளூர் தொழிலாளர்களான மாரியப்பன், கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ! ரூ.1.58 கோடி உண்டியல் வசூல் !! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் !!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த மாதம் 6ந்தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது 1.51 கோடி கிடைத்திருந்த நிலையில் 24 நாட்களில் மீண்டும் உண்டியல் வசூல் கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தின விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாத சுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்பட உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணைஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 58 லட்சத்தி 38 ஆயிரம் ரூபாய், தங்கம் 70 கிராம், வெள்ளி 12 கிலோ 890 கிராம், வெளிநாட்டு நாணயம் 92 காணிக்கையாக கிடைத்தது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மற்றும் உப கோவில்களில் உள்ள உண்டியல் கடந்த மாதம் 6தேதி திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1.51 கோடி உண்டியல் வருமானம் கிடைத்த நிலையில் 24 நாட்ளுக்கு பின் உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி கிடைத்துள்ளது. இதனால் 24 நாட்களில் ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் மீண்டும் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன் மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன் பிடி விசைப்படகுக்கான வழக்கு வரும் மார்ச் 20 ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்..
by Baker BAker
written by Baker BAker
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. நாளை நம்ம மேட்டுப்பாளையம் பொது மக்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் கிராமங்களில் தங்கும் கோவை மாவட்ட கலெக்டர் மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் பொதுமக்களில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அங்குள்ள அதிகாரிகளிடம் வழங்கலாம் அங்கு பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆகவே நம்ம மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய பேரிடர் மீட்பு தினத்தையொட்டி செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இரத்த தானமுகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழ்க்கரை செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் 31/1/2024 அன்று காலை 10:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை NCC,YRC, SHASC- Rotaract ஆகியோருடன் கீழக்கரை ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தியது. இதில் சதக் டிரஸ்ட் இயக்குனர் S.M.A.J.ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்றார். S.பழனிக்குமார் தாசில்தார் மற்றும் Dr.ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர். Dr.கபீர், செயலாளர்.Er. எபன்,செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மாவட்ட சேர்மன், Dr.S.சுந்தரம், செயலாளர்.m.ரமேஷ்., ரோட்டராக்ட் தலைவர். முகம்மது சஃபி உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
86 மாணாக்கர்கள், இரத்த தானம் வழங்கினர். வரவேற்புரையை கல்லூரி முதல்வர் Dr.ராஜசேகர் மற்றும் நன்றியுரையை Dr.k.தவசிலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் முதல் முகாமானது கீழக்கரை வட்டத்தில் நாளை 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை ஊரில் நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்தல்10.00 மணி முதல் 11.00 மணி வரை தில்லையேந்தல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை இதம்பாடல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் – ஆய்வு செய்தல் 02.30 மணி முதல் 4.30 மணி வரை நகராட்சி அலுவலகம், கீழக்கரை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுகளின் முடிவு குறித்து ஆய்வு கூட்டம் 04.30 மணி முதல் 6.00 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் கீழக்கரை பொதுமக்களுடன் கலந்துரையாடல் மற்றும் மனுக்களை பெறுதல் 06.00 மணிக்கு மேல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு மாணவ, மாணவியர் விடுதி, பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள், பொது போக்குவரத்து, அரசு காப்பகங்கள், பூங்காக்கள் ஆய்வு செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கீழக்கரையில் இரவு தங்கி மறுநாள் காலை 01.02.2024 அன்று 6.00 மணி முதல் 7.00 மணி வரை கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு செய்தல் குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வு செய்தல் கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் 07.00 மணி முதல் 9.00 மணி வரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆய்வு செய்ய உள்ளார். இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது!- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரான யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதோடு, அதற்கெதிராக தனது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான காலியிடங்களை குறைப்பதற்கும், போதுமான இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த காலி பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது; மட்டுமின்றி யுஜிசி யின் வழிகாட்டுதல் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அல்லது சீர்குலைக்கும் சில மறைமுகமான நோக்கங்களை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காலியிடங்களை இடஒதுக்கீடு அல்லாத பொது இடங்களாக மாற்ற பொதுவான தடை உள்ளது. ஆனால், அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், பொதுநலன் கருதி குரூப் ஏ பதவியை காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடத்தை நீக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்கலாம் என யுஜிசியின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வகையான தெளிவற்ற முன்மொழிவு, தகுதியற்றவர்கள் என்ற போர்வையில், இடஒதுக்கீடு பெற்றவர்களைத் தவிர்க்கும் மோசமான நடைமுறைக்கு வழிவகுக்கும். மேலும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான காலி இடங்களை, இடஒதுக்கீடு அல்லாத உயர்சாதியினரை கொண்டு நிரப்பவே வழிவகுக்கும். எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை குறைப்பதற்கு பதிலாக, எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி -க்கான காலியிடங்களை நிரப்ப தகுதி அடிப்படையில் புதுமையான முறையை யுஜிசி ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..
by Askar
written by Askar
எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..
எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினர் அடையாளமாக திகழும் என
ராமநாதபுரத்தில்
நடந்த மனிதநேய வார விழா நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்
பேசினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.01.2024) மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்றார். மனிதநேய வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பேசுகையில்,
மனிதநேயம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்றாகும். காலச்சூழ்நிலையும், நெருக்கடிகளும் தான் வேறுபாடுகளை காண முடிகிறது. அந்த வேறுபாடுகளை அகற்றி எப்பொழுதும் எல்லோரும் எந்த நிலைப்பாட்டிலும் மாறாத வகையில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வாழ வேண்டும் என்பதன் நோக்கம் தான் இந்த மனிதநேய வார விழாவாகும்.
ஒவ்வொருவரும் உங்கள் திறமைகளை பிறருக்காக விட்டு கொடுக்காமல் தனித்துவத்துடன் வாழ்ந்து பிறரின் அன்பை பெற்று வாழ்ந்திடும் வகையில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்று உள்ளீர்கள். உங்களிடையே நல்ல அன்புகளை பகிர்ந்து மனித நேயத்தோடு வாழ நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து வாழும் இடத்தில்தான் சிறந்த சமுதாயத்தின் அடையாளம் துவங்கும். அதை உணர்ந்து அனைவரும் எவ்வித பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் நல் அன்புடன் வாழ்ந்து மனித நேயமிக்க சமுதாயமாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
செங்கபடை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, பழஞ்சிறை ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, வடவயல் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, காட்டுப்பரமக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, நிலையாம்படி ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, பாம்புவிழுந்தான் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், குழு நடன கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று வழங்கினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம்
இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, பேராசிரியர்கள் துரைப்பாண்டி, ஜெயபிரகாஷ், தனி வட்டாட்சியர் வீரராஜ் மற்றும் விடுதி
காப்பாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சமூக ஊடக அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் SMK.சதாம் தலைமையில் சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில பொதுச் செயலாளர் S.அகமது நவவி, மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் A.முஜிபுர் ரஹ்மான் ,மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன்,மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட சமூக ஊடக அணியின் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டம் ..!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவளம், நீர் வளம், கடல் வளம், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தி மண்ணுரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் வளத்தை பாதிக்கும் இத்திட்டத்துக்கு திமுக அரசு துணை போகாமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும். கடந்தகால திமுக ஆட்சியில் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, பின்னர் படித்து பார்க்காமல் கையெழுத்திட்டதாக கூறிய வரலாறை அனைவரும் அறிவோம். அதேபோல இவ்விவகாரத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், உடனடியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்துக்கு அனுமதியை மறுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட கோரியும், வைகை படுகையான ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், இதற்காக ஒரு சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தும் “மண்ணின் மைந்தர்கள்” அமைப்பினர் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள் வரத்து இந்த ஆண்டு இல்லை !பறவைகள் கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் வனத்துறை சார்பில் சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த ஆண்டுகளை விட இந்த சீசனில் தனுஷ்கோடியில் பிளமிங்கோ பறவைகள் வலசை வரவில்லை என தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்; தனுஷ்கோடி, முனைக்காடு, வாலிநோக்கம், சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலங்களில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஸ் சுதாகர், ராமநாதபுரம் வனசரகர், சென்னை, மதுரை சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 50 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இந்த கணக்கெடுப்பின் போது சரணாலயங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நீர்நிலை பகுதியில் பறவைகள் அதிகளவு கண்டறியப் பட்டுள்ளது. வாலிநோக்கம், கீழக்கரை பகுதியில் உள்ள கண்மாய்களில் பிளமிங்கோ மற்றும் மல்லல், ஆர் எஸ் மங்கலம், உத்தரகோசமங்கை, கண்மாய்களில் அதிகமான பறவைகள் கணக்கிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் இரண்டு மூன்று முறை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கமாக தனுஷ்கோடி பகுதிகளுக்கு பிளமிங்கோ பறவைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை வலசை வருவது வழக்கம்.ஆனால் கடந்தாண்டு பிளமிங்கோ பறவைகள் மிகவும் கால தாமதமாக வலசை வந்த நிலையில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பிளமிங்கோ பறவை வரவில்லை. அதே போல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தனுஷ்கோடி பகுதியில் ஒரு பிளமிங்கோ பறவை கூட கண்டறியப்படவில்லை என பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.நத்தை கொத்தி நாரை, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் கொக்குகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு கணக்கெடுப்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது என ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை..
மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன் விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விக்கிரமங்கலத்தில்108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான ஆண் குழந்தை..
சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் சக்கரப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி அழகம்மாள் வயது 23. இவர் கர்ப்பணியாக இருந்தார். நேற்று அதிகாலை வலி ஏற்பட்டு விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து 108 மூலமாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு டிரைவர் பிரகாஷ் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் அழகம்மாளை மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். கீழமாத்தூர் அருகே சென்ற பொழுது அழகம்மாளுக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் அஜித்குமார் மற்றும் டிரைவர் பிரகாஷ் ஆகியோர் அழகம்மாளுக்கு பிரசவம் பார்த்தனர் இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது அங்கிருந்து திரும்பி விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகம்மாளையும் 108 பிறந்த குழந்தையும் சேர்த்தனர். சுகமாக குழந்தையை பெற்றெடுத்த 108 பணியாளர்களை உறவினர்கள் பாராட்டி நன்றிய தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் சுதந்திர போராட்ட தலைவரும் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய வருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 பிறந்தநாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.கீரந்தை வீரப்பெருமாள் தலைமை வகித்தார், மாவட்ட முதன்மை செயலாளர் தீபக் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் புலிப்படை மாநில செயலாளர் கமுதி முத்துராமலிங்கம்,மதுரை இளைய நேதாஜி சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் யோகநாதன், டாக்டர் மதிவாணன் அவர்கள்,முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட அமைப்பு செயலாளர் பொன்முத்துராமலிங்கம், நேதாஜி பவுன்டேசன் மாயக்கிருஷ்ணன், நேதாஜி சமூக நல அறக்கட்டளை ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு தேச நலனில் நேதாஜியின் பங்களிப்பு, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய காரணம், தேசப்பக்தி போன்ற பல்வேறு தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவரணி மத்திய குழு உறுப்பினர் வெள்ளைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட பொருளாளர் பாரதி, தொழிற்சங்க செயலாளர் வாசுதேவன், முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் பாலாஜி ஆகியோர் எற்பாடு செய்தார்கள், தேவர் மீடியா மகேஸ்வரன்,நேதாஜி சுபாஷ் சேனை, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், ஆகிய பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை வட்டாச்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின விழப்புணர்வு பேரணி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை சந்திப்பிலிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி சீதக்காதி சாலை வழியாக கீழக்கரை நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் சிறுவர் சிறுமியர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..
by Askar
written by Askar
ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்..
ராமநாதபுரம், ஜன.25 -இராமநாதபுரம்
மாவட்ட ஊர்க்காவல் படைக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு (ஆண்கள் மட்டும்) பிப்.17 ல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பி, நல்ல உடற்தகுதி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விருப்பமுள்ளோர், தங்களது
மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ஆகிய வற்றுடன் பிப்.17 ல்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராக வேண்டும். மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோர பகுதியில் வசிக்கும் இளைஞர் தேர்வு செய்யப்படுவர். ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவு அலுவலகத்தில் பிப்.5 முதல் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிப். 11 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..
by Askar
written by Askar
திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மணமக்கள் வீட்டார்..
மதுரை நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமக்கள் வீட்டார் போல் நுழைந்து , அங்கிருந்து மணமக்கள் அறைக்குள் புகுந்து நகைகளை திருடிய நபரை மணமக்கள் வீட்டார் பிடித்து தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இத் திருடன் மதுரை புது மாகாளிப்பட்டி சாலையில் பீட்டர் மகன் வில்லியம் (வயது 42 ) தையற் தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. திருடன் வில்லியம் கடந்த மாதம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருணாச்சலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நுழைந்து அங்கிருந்த மணமக்கள் உறவினர் லட்சுமி என்ற பெண்ணின் கைப்பையிலிருந்த 3 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளதை, அங்கிருந்த சிசிடிவி கேமரா-வில் பதிவானதை வைத்து, தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்,
மீண்டும் அதே திருமண மண்டபத்தில் அதே திருடன் வந்து, கைவரிசை காட்ட முயற்சித்த போது, அவனது புகைப்படத்தை ஏற்கனவே வீடியோ வைரல் ஆனதை வைத்து, அங்கிருந்த மணமக்கள் உறவினர்கள் வில்லியத்தை கையும், கனவுமாக பிடித்து, அவனது கைகளை கட்டி தெப்பக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இத்திருடன் திருமண மண்டபங்களை மட்டுமே குறிவைத்து, மணமுடிக்கும் நேரத்தில் அனைவரின் கவனமும் மணமேடையில் இருக்கும் தருணத்தில் தனது கைவரிசையை காட்டுவது தொடர்கதையாகி வந்த நிலையில்,
தற்போது சிசிடிவி காட்சியை வைத்து நகை திருடன் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தெப்பக்குளம் காவல் நிலையத்தினர் தொடர் திருட்டில் ஈடுபட்ட வில்லியத்திடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வில்லியத்திற்கு திருமண மண்டபங்களில் உள்ள ஊழியர்களிடம் தொடர்புகளை வைத்துக்கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.