ராமநாதபுரம் ஜன 16, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த இரண்டு விசைப்படைகளும் அதிலிருந்து 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் தாழ்;வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு புறப்பட்டனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும், அதிலிருந்த விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 மீனவர்களை கைது செய்து மன்னார் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடற்படை முகாமில் மீனவர்களுக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளித்து பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 18 பேரும் நாளை புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படையினரால் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் புதுக்கோட்டை, நாகை ராமநாதபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category:
தேசிய செய்திகள்
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் R.N ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு இருப்பதுவெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்தூத்துக்குடி வெள்ளம் மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ராபிஸ்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தகுந்த இழப்பீடு அரசு வழங்க வேண்டும்மீட்பு பணியில் முதல் அணியாக நிற்கும் மீனவர் மீட்பு படைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மீனவர் மீட்பு படைக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள முக துவார மண் அடைப்பை உயிரை பணயம் வைத்து நீக்கி பல்லாயிரம் உயிர்களை காத்த 13 மீனவர்களுக்கு அரசு விருது வழங்கிய கௌரவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர். தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வருகை புரிந்த ஆளுநர் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் ஆளுநர் R.N ரவி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகையை முன்னிட்டு ஆளுநருக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன் தலைமையில் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாவெல் முன்னிலையில் கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், பெரியார் பேரவையின் காளிதாஸ் செல்வம், வரதன், நித்திஷ், சாம் செல்வராசு ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினார். ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு , மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை , ஆளுநர் என்கிற அதிகார அமைப்பை ஒழித்துக் கட்டுவோம், உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் :- அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகிறார். சமீப காலமாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் போது வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்பதே சரி என்றும், தமிழ்நாடு அரசே ஏற்க மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ராமஜென்ம பூமி என்றும் உண்மைக்கு புறம்பாக பேசுவதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கும், சட்டத்திற்கு விரோதமாகவும் தனி அரசாங்கத்தை நடத்த நினைக்கும் ஆளுனரின் இச்செயல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றனார். இப்போராட்டத்தில் சிவகங்கை திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து ,ஆதித்தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் க .பாஸ்கரன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், ஆதித்தமிழர் மாவட்ட செயலாளர் உதயகுமார் , இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் தமிழ்மாறன் , செங்கொடி , தமிழக மக்கள் முன்னணி இலங்கேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..
by Askar
written by Askar
மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி..
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில், தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேட்டுப்பட்டி ரூபன்&கோ மோகன் சார்பில் முதல் பரிசு ரூபாய் 6,001 வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி திமுக கிளைச் செயலாளர் விஜயன் சார்பில் இரண்டாவது பரிசாக 5,001 வழங்கப்பட்டது. ஊராட்சிச்
செயலர் தெய்வேந்திரன் சார்பில் 4,001 மூன்றாவது பரிசும், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் சார்பில் 3,001 நான்காவது பரிசும் வழங்கப்பட்டது. மற்றும் மாணிக்கம்பட்டி ரத்னாஸ் சார்பில் கோப்பைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை, 66,மேட்டுப்பட்டி சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்..
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தை திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் இதன்படி வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் உடைந்து போன மர சாமான்கள் போன்றவற்றை போகிப் பண்டிகை என்று தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி வாகனங்களில் பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுகள் சேகரிப்பு மையங்களிலும் கழிவுகளை கொடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது பேரூராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் ஒலிபெருக்கி மூலம் கழிவுகளை ஒப்படைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது மேலும்சுற்றுச்சூழலை பாதுகாக்க சோழவந்தான் பேரூராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் செயல் அலுவலர் செல்வகுமார் சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் துணைத்தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும்வார்டு உறுப்பினர்கள் சுய உதவி குழுக்கள் பேரூராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் மலைச்சாமி டெங்கு பணியாளர் தங்கப்பாண்டி உட்பட பலர்கலந்து கொண்டனர்..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..
by Askar
written by Askar
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி ஜனவரி-15 அன்று நடைபெறுவது வழக்கம். முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., கடந்த எட்டாம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்கல் நடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்றது. ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் விழா மேடை பார்வையாளர் மேடை மற்றும் செய்தியாளர் மேடை சிசிடிவி கேமரா பொருத்தும் பணி போன்றவற்றை மதுரை மாநகராட்சி நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் செயற்பொறியாளர் மாலதி ஆய்வு செய்தார்.
தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும், பணி பரிசு பொருட்கள் வைக்கும் இடம், சிறப்பு விருந்தினர்கள் மேடை பார்வையாளர் மேடை, வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம், காளைகளை பரிசோதனை செய்யும் இடம், காளைகளை அழைத்து வரும் இடம் மாடுகள் சேகரிக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் தற்போது கம்பு கட்டும் பணிகள் இன்று மாலைக்குள் முடிவு பெறும்.
மேலும் மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை பதிவு செய்ய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நடமாடும் கழிப்பறை, குடிநீர் தொட்டிகள், எல் இ டி திரையரங்குகள் என அனைத்து வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்குவதற்காக பேரிக்காடு அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு 2400 காளைகள் முன்பதிவு செய்துள்ளனர்.
1318 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ப முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் தேர்வுக்காக தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம் காத்திருக்கிறது..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் நடந்த ஆன்மிக மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் 1897 ஜன.25 ஆம் தேதி ராமநாதபுரம் வருகை புரிந்ததாகவும் . அவர் உரையாற்றிய கேணிக்கரை பகுதியில் விவேகானந்தர் ஸ்தூபி விளக்கு தூண் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விவேகானந்தர் நண்பர்கள் குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தர் ஸ்தூபிக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் நண்பர் குழு சார்பில் டாக்டர் மனோஜ் குமார் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இந்த விவேகானந்தர் ஸ்தூபிக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு
by syed abdulla
written by syed abdulla
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை, அரசின் கருணை அடிப்படையிலான விடுதலை நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றது. மதுரையில் நடந்த மாநாட்டிலும் தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகும் பட்சத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கடந்த சிறைக்கைதிகளை மாநில அரசே பரிசீலனை செய்து விடுதலை தொடர்பான உத்தரவினை அறிவிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432 (5) யின் படி தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தியது.
மேலும், 33 முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளில் 20 பேரை மட்டும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதுவும் கிடப்பில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 13 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த 13 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு மறுத்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த 13 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர். இன்றைய தினம் அவர்களின் 12 பேர் நீதிமன்றம் மூலமாக சாதாரண விடுப்பினை பெற்றுள்ளனர்.
இதுவரையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை அல்லது பரோல் விடுப்பு என்பது நீதிமன்றம் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.
ஆகவே, நீதிமன்ற நிவாரணங்களை கடந்து, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மற்றும் பரோல் விடுப்பை மாநில அரசே சாத்தியப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், மறுபக்கம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு அதற்கு தடையாக இருக்கின்றது என்பது ஏமாற்றும் செயலாக தெரிகின்றது.
ஆகவே, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை ஏமாற்றும் வகையில் கண்துடைப்பாக இல்லாமல், அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இந்த விவகாரத்தில் கடைசி ஆயுள் சிறைவாசி விடுதலை செய்யப்படும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் யானை மீட்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நகர கழக செயலாளர் எம்.கே.முருகன், முன்னாள் நகர கழக செயலாளர் கிட்டுராஜா உள்ளிட்ட கடையநல்லூர் நகர அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..
by Askar
written by Askar
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது..
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுதல்
செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுதல்
சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை மீறி அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல்
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
சரக்கு வாகனங்களில் அதிக பாரங்களை ஏற்றி செல்லுதல்
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல்
என்பன உள்ளிட்ட விதிமுறை மீறல் செய்பவர்களுடைய ஓட்டுநர் உரிமம் குறைந்தபட்சம்
மூன்று மாதத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்படும்
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தி இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் மற்றும் உதவி ஆணையாளர் செல்வின்குமார் போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக் கணேஷ்ராம், நந்தகுமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தார்ஜூஸ் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..
by Askar
written by Askar
மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் இனி வேளாண்மைக் கடன் சங்கம் மூலம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா திங்களன்று ஐந்து மாநிலங்களில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய ஜன் ஔஷதி கேந்திரங்களின் செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை விநியோகித்தார். “பிரதமர் ஜன் ஔஷதி கேந்திராக்களில் கிடைக்கும் மலிவு மற்றும் உயர்தர மருந்துகள் பிஏசிஎஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ள வறியவர்களைச் சென்றடையும் என்று ஷா அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மற்றும் உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், பிஏசிஎஸ் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் செயல்முறையை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக அறியப்பட்ட ஷா, நாடு முழுவதும் 2,373 PACS இல் ஜன் ஔஷதி கேந்திராக்களை நிறுவுவதை மேற்பார்வையிடுகிறார்.
ஷாவின் தொலைநோக்கு நடவடிக்கை, மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகளின் பயன்கள் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பிஏசிஎஸ் மூலம் நீட்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது. முன்னதாக, முக்கியமாக நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களின் முதன்மைப் பயனாளிகளாக நகர்ப்புற ஏழைகள் இருந்தனர்.
மோடி அரசாங்கத்தின் கீழ், குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் இந்தியாவின் மருந்துத் துறையை உலகளாவிய தலைவராக உயர்த்தியுள்ளன. உலகிற்கு மருந்துகளை அனுப்பும் இந்தியா, அதன் மக்கள்தொகைக்கு மருந்துகளை வாங்குவதற்கு தேசம் போராடிய அதன் கடந்த காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. அமித் ஷாவின் கொள்கைகள் பாரதீய ஜன் ஔஷதி கேந்திராக்கள் மூலம் 60 கோடிக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட நபர்களைச் சென்றடையும் வகையில், ஜெனரிக் மருந்துகளின் விநியோகத்தை முறைப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மோடியின் ஆட்சியில் கிராமப்புறங்களில் சுகாதாரம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, கூட்டு முயற்சிகளில் வலுவான கவனம் செலுத்துகிறது. தற்போது, குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கிராமப்புறங்களில் சுமார் 2,300 பிஏசிஎஸ் மலிவு விலையில் மருந்துகளை விநியோகித்து வருகிறது.
பிஏசிஎஸ் மூலம் ஜன் ஔஷதி கேந்திராக்களின் வரம்பை விரிவுபடுத்தும் உறுதியுடன், ஒத்துழைப்பு அமைச்சகத்துடன், ஷா ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் வகையில், 2 லட்சம் புதிய பிஏசிஎஸ்களை நிறுவுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை 10.01.2024 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையேற்று திருவேங்கடம் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் நியாய விலைக் கடையில் வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 658 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,71,543 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.5266 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பயன் பெறுவார்கள். இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன் சோங்கம் ஐடக் சிரு, மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, திருவேங்கடம் தாசில்தார் பாஸ்கரன், கூட்டுறவுச் சங்கங்களின் தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளர்/இணைப்பதிவாளர் ராஜேஷ், துணைப்பதிவாளர் (பொவிதி) செல்வி. ரா.திவ்யா, கூட்டுறவு சார்பதிவாளர் சி.கு.விஜயகுமார், சங்கச் செயலாளர் ஆ.விஜய ராஜகுரு, மாவட்ட கூட்டறவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விமன் இந்தியா (WIM) மூவ்மென்ட் மாவட்டத் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்து செய்தி
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் (WIM) விமன் இந்தியா மூவ்மென்ட் கிழக்கு மாவட்டம் தலைவர் ரம்ஜான் பேகம் பி.காம் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : பில்கிஸ் பானு வழக்கு -11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை பலஉண்மைகளை மறைத்து மோசடி மூலம் குஜராத் அரசால் விடுதலை செய்வதற்காக உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன 11 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . இந்த அதிரடியானஉச்சநீதிமன்ற தீர்ப்பை விமன் இந்தியா மூவ்மெண்ட் வரவேற்கிறது. பல வருடங்களுக்கு மேலாக நீதி வேண்டிசட்டம் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது 11 கொடுங் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து உரிய தண்டனையை காவல்துறையும் நீதிதுறையும் வழங்க வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் வலியுறுத்துகிறது . காலம் கடந்து வந்த இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இறுதியாக நீதியே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்கலை இடையே செஸ் போட்டி: 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.11 – அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி இடையே ஆடவர் செஸ் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்ககிடையேயான ஆடவர் செஸ் போட்டி பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் அழகப்பா பல்கலை இணைப்பு பெற்ற 20 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி சுற்று நிறைவில் 4 ஆம் இடம் பிடித்த கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அழகப்பா கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார், அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமரன், பரமக்குடி அரசு கலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் (பொ)ஆகியோர் பரிசு வழங்கினர். நான்காம் இடம் பிடித்த வீரர்கள், உடற்கல்வி இயக்குனர் தவசி லிங்கம் ஆகியோரை முஹமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் ஹமீத் இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹமது, செயல் திட்ட அலுவலர் விஜயகுமார் , முதல்வர் ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுநிலை நீட் தேர்வு 2024 ,வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
by syed abdulla
written by syed abdulla
முதுநிலை நீட் தேர்வு 2024 ,
வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, முதுநிலை நீட் தேர்வை எழுதுகின்றனர்.
இதற்கான தேர்வு வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு 2024 வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்களின் கட் ஆப் குறித்த விவரங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூபாய் 1000 பொங்கல் பரிசு.!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி அறிக்கை..
by syed abdulla
written by syed abdulla
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000/- வழங்கி உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் அறிக்கை..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிக சிறப்பாக கொண்டாட ரூ.1000/- யுடன் பொங்கல் தொகுப்பு அடங்கிய பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்று நன்றியைத் தெரிவித்து கொள்கிறது அதேநேரத்தில் அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ 1000/- வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தோம் , அதாவது அரசு ஊழியர்கள் வீடுக்கட்ட கடன் பிள்ளைகளின் கல்விக்கடன் உட்பட பல சுமைகளை கடந்து தான் குனும்பத்தை நடத்துகிறார்கள் என சுட்டிக்காட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000/- துடன் பொங்கல் தொகுப்பை வழங்கிட இந்தியாவின் முன்மாதரி முதலமைச்சராக திகழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைதரதோம் அதனை கனிவுடன் ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ . 1000/- வழங்க உத்தரவு பிறப்பித்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.ஸ்.டாலின்
அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழிர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார்.
ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர் சிவாஜி, மாவட்ட துணை தலைவர் சுடலைக்காசி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரபாபு , மீனவ மகளிர் சங்க நிர்வாகி சகாயம் பீட்டர், கிராம தலைவர்கள் நம்புராஜன், பாலசுப்ரமணியன், தவசியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூன்று கிராம மக்களுக்கு 6 மாத த்திற்குள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 3 கிராமங்களையும் வனத்துறை வசம் இருந்து வருவாய்த்துறை கற்கும் வகை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களின் பயன்பாட்டில் உள்ள வீடுகள் சேதமடைந்தால் புதுப்பிக்க வனத்துறை இடையூறு செய்வதில்லை
உறுதி அளிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
by syed abdulla
written by syed abdulla
சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம் ஏற்ப்பட்டது இந்த பள்ளத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் இராஜபாளையம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியாக காணப்படுகிறது நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாததால் பொதுமக்கள் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழந்து கை, கால் உடைந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது பல அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், நடத்தினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைதான் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது நகராட்சியால் இராஜபாளையத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்க்காகத்தான் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் ஆனால் இராஜபாளையத்தில் மட்டும் போக்குவரத்து காவலர்கள் சாலையில் உள்ள குண்டும் குழியை நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்
சம்மந்தபட்ட நகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து காவலர்களை அவர்கள் பணியை சிறப்பாக செய்ய சம்மந்தபட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை (லிங்க்) கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அருகில் உள்ள பெட்டியில் எண்ணை (கேப்சா) பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அதன் பிறகு மின்கட்டணத்தைச் செலுத்தி விடலாம். இதன்மூலம், நுகர்வோர் மின்கட்டணத்தை எளிதாகச் செலுத்தலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!
by Askar
written by Askar
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில் தொடர்புடைய, 11 குற்றவாளிகளுக்கு 2008ஆம் ஆண்டில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது (12 பேரில் ஒருவர் இறந்து போனார்)
இதனிடையே, பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகள் குஜராத் அரசால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் பூர்த்தி செய்தது, வயது, குற்றத்தின்தன்மை, சிறையில் நன்நடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிறை அறிவுரை குழுவின் பரிந்துரைப்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மாநில பொதுமன்னிப்பு கொள்கையின் அடிப்படையிலும் விடுவிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்தது.
குஜராத் மாநில அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகர்தனா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனு செல்லுபடியாகும் என கூறியது. மேலும், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.