இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உச்சிப்புளி வேளாண்மை துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை / இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பாலாஜி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் மண் வளம் மேம்பாடு பற்றியும் உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாடு பற்றியும் இயற்கை வளத்தை தக்க வைத்து பயிர் வறட்சியை தாங்கி வளரும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் அதன் செயல்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் விஜய்குமார் பேசுகையில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் பற்றியும் மண்வளம் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் மண் வளம் நீர்வளம் பாதுகாக்கப்பட்டு என்றும் நஞ்சில்லா உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரித்து செலவினம் குறைத்து கூடுதல் வருமானம் ஈட்டும் என்று கூறினார். இப்பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் மா.பவித்ரன் ஆகியோர் செய்தனர்.
Category:
தேசிய செய்திகள்
மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் சிஐடியு சங்கம் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு !
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செய்வதற்கு முழு உடல் பரிசோதனை செய்து தர கோரி சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயணம் வழிகாட்டி குழு ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜாவை இரு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து புனித ஹஜ் பயணம் செய்வதற்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.. உடனே மருத்துவர் மனோகரன் மருத்துவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி புரிந்த அரசு மருத்துவர்கள் , சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயண வழிகாட்டி குழு ஆகியோர் வாழ்த்துக்களின் பாராட்டுகளையும் புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாத்தான்குளம் கிராமத்தில் தென்னை நார் தொழில்துறை கருத்தரங்கம்!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளம் கிராமத்தில தென்னை நார் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு கருத்தரங்கில் கலந்து கொண்டு தெரியவிக்கையில் கயிறு வாரியம் மூலம் இப்பகுதி பெண்கள் 100க்கு மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோர் ஆக உருவாகி உள்ளனர். நமது நாட்டில் 14 மாநிலங்களில் கயிறு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. வருடத்திற்கு 14 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மூலம் கயிறு உற்பத்தி நம் நாட்டினுடைய தேவை மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நம் நாட்டினுடைய வளர்ச்சி மேன்மைப்படும் என்றும் தெரிவித்தார். கருத்தரங்கில் சாத்தான்குளம் ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் தொழில் முனைவோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவிப்பை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டித்தும் , வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய கோரியும் , பணிநீக்க ஆணையினை வீட்டின் சுவர்முன்பு ஒட்டி வருவாய்த் துறையினரை அவமானப்படுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி நடைபெற்றது. மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை !தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவிக்கையில் :- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை கண்டிகைத்தது என்றும் அரசியல் காரணங்களுக்காகவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும், மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளையும், சிறுபான்மை சமூகம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை பாசிச பாஜக அரசு ஏவிவிட்டு வருகின்றது. சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசு தற்போது என்.ஐ.ஏ.-வை ஏவிவிட்டு வருகின்றது. தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாத வழக்குகளை விசாரித்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அரசியல் பழிவாங்கும் கருவியாக ஆட்சியாளர் களால் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என்று செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை, 2 படகுடன்
சிறைபிடித்த இலங்கை கடற்படை..
ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் 492 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. பகல் பொழுதில் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்த படகுகளில் 2 விசைப்படகு மீனவர்கள்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் 2 படகுகளை சுற்றி வளைத்தனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவரது படகில் தொழிலுக்குச் சென்ற
ராபர்ட், ஜான்சன், சாமுவேல், லெனின், கேபா, ரஞ்சித், லிஸ்டன், லவுசன், இளங்கோ, ஆசோன், சாமுவேல், மெல்சன்,
தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது படகில் தொழிலுக்குச் சென்ற பெக்கர்(எ) ஜான் பிரிட்டோ, மார்ட்டின் மணி, சிதம்பரம், ஆரோன், டைமன் பிரபாகரன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஸ், சூசை, இன்னோசன். அருளானந்த பாஸ்கர், ஆக்லஸ் என 23 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன் துறை கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரிக்கின்றனர். இதன் பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ! தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவித்துள்ளார் அவர் செய்தி குறிப்பின் தெரிவித்ததாவது. மாவட்டத்தில் இதுநாள் வரை காலம் காலமாக வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த சூழ்நிலையில் தற்பொழுது முதுநிலையினை தவிர்த்து விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்து முதுநிலைப்படி பணியிடம் வழங்கப்படவேண்டும் என்றும் ,கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுத்த பணியினை வருவாய் ஆய்வாளர் முன்னின்று செய்து முடித்த பின்னர் எவ்வித விளக்கமும் பெறாமல் தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் ,தற்காலிக பணிநீக்க ஆணையினை வீட்டின் சுவர்முன்பு ஒட்டி வருவாய்த் துறையினரை அவமானப்படுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 03.02.2023 முதல் நடைபெறும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக நாளை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பணிப்புறக்கணிப்பு செய்து அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தின் இடத்திலேயே அமர்ந்து தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் ! நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரைக்கு இலங்கை யிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை,மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வரை நிறுத்த சொல்லும் போது அவர் வேகமாக தப்பி ஓடினார். இதனை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர். பின் வண்டியை சோதனை செய்தபோது சுமார் 4.634 கிராம் எடையுள்ள 916 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தையும், ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நம்புராஜன் என்பவரை கைது செய்து அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின் கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் நாளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை செய்தார். அவரே நேரில் சந்தித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுக மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரஹ்மான் மரக்காயர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியதாவது : மண்டபம் பேரூராட்சியில் நிரந்தரமான பேருந்து நிலையம் இல்லை மீன்வளர்ச்சி துறைக்கு சொந்தமான இடம் உண்டு அந்த இடத்தை பேருந்து நிலையத்திற்க்கு வழங்கினால் மண்டபம் மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரிகள் சங்கம் நகர் வர்த்தக சங்கம் மீனவர்சங்கங்ளின் கோரிக்கையாக உள்ளது எனவே தாங்கள் முயற்சித்து அவ்விடத்தை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக மீனவர்களை மோடி, அண்ணாமலை ஏமாற்றி விட்டனர் ! INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் பேட்டி ! !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியினை மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை, எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் மயமான 205 மீனவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முதல்வர் அளித்த உறுதி அடிப்படையில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மீனவர்களுக்கான நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு மீட்பு மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக மோடி, அண்ணாமலை, என பலரும் வாக்குறுதி அளித்த நிலையில் அதற்கான நடவடிக்கையை இதுவரை மத்திய அரசு எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வசம் உள்ள படகுகளை மீட்டு கொடுக்காமல் மீனவர்களை ஏமாற்றி விட்டார். எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது அவர்களது வாழ்வாதாரம் மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை என இதன் மூலம் தெரிய வருவதாக அனிதா ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் புதிதாக அமைய உள்ள INDIA கூட்டணி தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டி இலங்கை வசமுள்ள படகுகளை உடனடியாக மீட்கவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும் அதற்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுப்பார் என்றார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (இராமநாதபுரம்) , நாசர்கான் (இராமேஸ்வரம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மீன்வளத்துறை பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் , ஜெயக்குமார் சிவக்குமார் , அப்துல்காதர் ஜெய்லாணி, மீனவர் நல வாரிய உறுப்பினர் என்.ஜெ.போஸ், பி.சேசு ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் பல்வேறு அலுவல் பணி காரணமாக வெளியூரில் உள்ள காரணத்தினால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 6வது புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அரங்குகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து படித்து பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள், மூலுகை கண்காட்சி, ஒவிய கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி பட்டறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும். புத்தக படிப்பு என்பது இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கு விப்பதற்காக நடத்தப்படுகிறது. புத்தக வாசிப்பு என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டத்திலும் நடத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.இந்த அறிய வாய்பை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன் ஒவ்வொருவரும் புத்தகங்களை நேசித்து வாழ்வில் வளம் பெற வேண்டுமென தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், இராமநாதபுரத்தில் இன்று 6ஆவது புத்தக திருவிழா நடைபெறுகிறது. இராமநாத புரத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக இராமேஸ்வரம் இந்திய திருநாட்டின் நுழைவுப்பகுதியாக இருப்பது பெருமையான ஒன்றாகும். அதேபோல் உலகளவில் பேசப்பட்ட தலைவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த பூமி இது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமாகும். இத்தகைய சிறப்புமிக்க நம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. எல்லோருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து வருகின்றன. அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது இலட்சியம் நிறைவேறும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் மையமாக்கப்பட்ட தகவல்கள் நமக்கு கிடைக்கும். அது நமக்காக ஏற்படுத்தக்கூடிய நிரந்தர தீர்வு அல்ல. அதே வேலை ஒரு புத்தகத்தை நாம் முழுமையாக படிக்கும் பொழுது அதை அறிந்து கொள்வது மட்டுமின்றி தேவையான நேரங்கள் எல்லாம் பார்த்து சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் புத்தகம் இருந்து வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசே ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவிட்டு நடைபெற்று வருகிறது.இது வெறும் புத்தக கண்காட்சி அல்ல. மாணவ பருவத்தில் நாம் திட்டமிட்ட ஒரு சில புத்தகங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்படும் ஆனால் இது போன்ற விழாக்களின் வாயிலாக பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கப்பெறும் இது போன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தவறாமல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். சில புத்தகங்கள் அதிக விலை என்றால் மாணவர்கள் குழுவாக சேர்ந்து புத்தகம் வாங்கி ஒருவர் பின் ஒருவராக படித்து பயன்பெறலாம். நமது இலக்கு என்பது ஒவ்வொருவரும் புத்தகத்தை வாசிப்பது என்பதை விட ஒவ்வொருவரும் நேசிப்பு தன்மையை உருவாக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்ற சிறந்த வாசகமாக தேர்வு செய்யப்பட்டு வாசகத்தை எழுதிய கீழக்கரை அமிர்த வித்யாலயா பள்ளி மாணவி சுவாஸ்திகா ஹரிணியை பாராட்டி ரூ.2000/- மதிப்பீட்டில் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று முதல் 12.02.2024 வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுவதுடன், தொடர்ந்து கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கே.டி.பிரபாகரன், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவின் தங்கம் , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் தனியார் மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை நடைபெற்றது. சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இன்றிலிருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியை வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் G.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ,PR நடராஜன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் N. குணசேகரன் முத்து கண்ணன்.K. காமராஜ்A. ராதிகா கோவை மாவட்ட செயலாளர் C. பத்மநாபன்.CITU மாவட்ட தலைவர் மனோகரன் மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ! நடிகர் விஜய்யின் புதிய கட்சி !!
by Baker BAker
written by Baker BAker
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் என்று பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அறிவித்துள்ளார் இது அவரது மக்கள் இயக்க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து இன்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் புதிய கட்டுமான பணியின் ராட்சத இரும்பு கிரேன் முறிந்து இருவர் காயம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியினை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள், கடந்த சில மாதங்களாக விரைவு படுத்தப்பட்ட நிலையில் கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுவே தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த தூக்குப் பாலத்தினை தாங்கி நிற்ககூடிய தூண்கள் அமைக்கும் பணி ஒரு புறம் முடிந்த நிலையில், தற்போது மறுபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ராட்சத இரும்பு கிரேன்கள் கடலின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கட்டுமான பணியில் இருந்த கிரேன்களில் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் நாட்டுப்படகில் பணியாற்றிய உள்ளூர் தொழிலாளர்களான மாரியப்பன், கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ! ரூ.1.58 கோடி உண்டியல் வசூல் !! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் !!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த மாதம் 6ந்தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது 1.51 கோடி கிடைத்திருந்த நிலையில் 24 நாட்களில் மீண்டும் உண்டியல் வசூல் கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தின விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ராமநாத சுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்பு கோவில் உள்பட உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணைஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 58 லட்சத்தி 38 ஆயிரம் ரூபாய், தங்கம் 70 கிராம், வெள்ளி 12 கிலோ 890 கிராம், வெளிநாட்டு நாணயம் 92 காணிக்கையாக கிடைத்தது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மற்றும் உப கோவில்களில் உள்ள உண்டியல் கடந்த மாதம் 6தேதி திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1.51 கோடி உண்டியல் வருமானம் கிடைத்த நிலையில் 24 நாட்ளுக்கு பின் உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி கிடைத்துள்ளது. இதனால் 24 நாட்களில் ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் மீண்டும் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன் மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன் பிடி விசைப்படகுக்கான வழக்கு வரும் மார்ச் 20 ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்..
by Baker BAker
written by Baker BAker
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. நாளை நம்ம மேட்டுப்பாளையம் பொது மக்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் கிராமங்களில் தங்கும் கோவை மாவட்ட கலெக்டர் மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் பொதுமக்களில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அங்குள்ள அதிகாரிகளிடம் வழங்கலாம் அங்கு பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆகவே நம்ம மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதி மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய பேரிடர் மீட்பு தினத்தையொட்டி செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இரத்த தானமுகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழ்க்கரை செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் 31/1/2024 அன்று காலை 10:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை NCC,YRC, SHASC- Rotaract ஆகியோருடன் கீழக்கரை ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தியது. இதில் சதக் டிரஸ்ட் இயக்குனர் S.M.A.J.ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்றார். S.பழனிக்குமார் தாசில்தார் மற்றும் Dr.ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர். Dr.கபீர், செயலாளர்.Er. எபன்,செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மாவட்ட சேர்மன், Dr.S.சுந்தரம், செயலாளர்.m.ரமேஷ்., ரோட்டராக்ட் தலைவர். முகம்மது சஃபி உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
86 மாணாக்கர்கள், இரத்த தானம் வழங்கினர். வரவேற்புரையை கல்லூரி முதல்வர் Dr.ராஜசேகர் மற்றும் நன்றியுரையை Dr.k.தவசிலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் முதல் முகாமானது கீழக்கரை வட்டத்தில் நாளை 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை ஊரில் நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்தல்10.00 மணி முதல் 11.00 மணி வரை தில்லையேந்தல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை இதம்பாடல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் – ஆய்வு செய்தல் 02.30 மணி முதல் 4.30 மணி வரை நகராட்சி அலுவலகம், கீழக்கரை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுகளின் முடிவு குறித்து ஆய்வு கூட்டம் 04.30 மணி முதல் 6.00 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் கீழக்கரை பொதுமக்களுடன் கலந்துரையாடல் மற்றும் மனுக்களை பெறுதல் 06.00 மணிக்கு மேல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு மாணவ, மாணவியர் விடுதி, பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள், பொது போக்குவரத்து, அரசு காப்பகங்கள், பூங்காக்கள் ஆய்வு செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கீழக்கரையில் இரவு தங்கி மறுநாள் காலை 01.02.2024 அன்று 6.00 மணி முதல் 7.00 மணி வரை கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு செய்தல் குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வு செய்தல் கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் 07.00 மணி முதல் 9.00 மணி வரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆய்வு செய்ய உள்ளார். இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது!- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரான யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதோடு, அதற்கெதிராக தனது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான காலியிடங்களை குறைப்பதற்கும், போதுமான இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த காலி பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது; மட்டுமின்றி யுஜிசி யின் வழிகாட்டுதல் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அல்லது சீர்குலைக்கும் சில மறைமுகமான நோக்கங்களை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காலியிடங்களை இடஒதுக்கீடு அல்லாத பொது இடங்களாக மாற்ற பொதுவான தடை உள்ளது. ஆனால், அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், பொதுநலன் கருதி குரூப் ஏ பதவியை காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடத்தை நீக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்கலாம் என யுஜிசியின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வகையான தெளிவற்ற முன்மொழிவு, தகுதியற்றவர்கள் என்ற போர்வையில், இடஒதுக்கீடு பெற்றவர்களைத் தவிர்க்கும் மோசமான நடைமுறைக்கு வழிவகுக்கும். மேலும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான காலி இடங்களை, இடஒதுக்கீடு அல்லாத உயர்சாதியினரை கொண்டு நிரப்பவே வழிவகுக்கும். எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை குறைப்பதற்கு பதிலாக, எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி -க்கான காலியிடங்களை நிரப்ப தகுதி அடிப்படையில் புதுமையான முறையை யுஜிசி ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.