ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தீவை சுற்றி வரும் சவாலான கயாகிங் சாகச பயணம் இரண்டாவது நாளாக ஓலைக்குடா கடற்கரையில் இருந்து துவங்கியது இந்த பயணத்தின் போது டெவில் பாயிண்ட் லைட் ஹவுஸ் வில்லுண்டு தீர்த்தம் போன்ற பல்வேறு கடல் பகுதிகளை கடந்து சென்றனர் அவர்களின் பயணத்தின் இடையே பாம்பன் பாலத்தில் உள்ள ஐ சி ஜி எஸ் மண்டபத்தின் கட்டளை குழுவினர் வரவேற்று உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாம்பன் தூக்கு பாலம் வழியாக கயாக்கிங் வீரர்கள் கடந்து சென்று குந்து கால் துறைமுகத்தில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மீனவர்களுடன் சமூகத் தொடர்புடன் இரண்டாவது நாள் பயணம் நிறைவு பெற்றது . இந்த பயணத்தின் நோக்கம் கடலோர பாதுகாப்பு நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கடலின் பாதுகாப்பை குறித்து விழிப்புணர்வை கடலோர மக்களிடையே பரப்புவதற்காக என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
Category:
தேசிய செய்திகள்
இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம் ! கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு !!வேலை நிறுத்தம் தொடரும் !!!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதியை ஏற்ற மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதை அடுத்து மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் விடுவிக்கப்படாவிட்டால் மீனவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நடை பயணம் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடரும் என தெரிவித்தனர். மீனவர்களின் நடை பயணம் காரணமாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடை பயணம் செல்லும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக ராமேஸ்வரம் மரைன் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மரைன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் சாலை விதியை கடைப்பிடித்த ஓட்டுனருக்கு பாராட்டு சான்றிதழ் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 34-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலை விதிகளை சீரிய முறையில் கடைபிடித்த போக்குவரத்து துறை வருவாய் துறை மருத்துவ துறை தீயணைப்பு துறை மற்றும் சிறப்பாக விழிப்புணர் ஏற்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு ,மாவட்ட தனி துணை ஆட்சியர் சுந்தரவல்லி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பாலைக்குடி சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களை மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பகுதியில் வசிக்கும் வைரசெல்வம் , ரமேஷ் , முகமது , முத்துகிருஷ்ணன் , சரவணகுமார் ஆகியோர் ஓமன் நாட்டில் அல்மசீரா என்ற இடத்தில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றுள்ளதாகவும் , தொழிலுக்குச் சென்ற இடத்தில் படகு உரிமையாளர் உரிய கூலி தர மறுத்ததையொட்டி சொந்த ஊர் திரும்பிட பாஸ்போட்களை தர மறுத்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அவர்களில் குடுப்பத்தினர்கள் இணைந்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு வழங்கினர். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பமாகும். எங்கள் பகுதியில் மீன்பிடி மிகவும் நெருக்கடிக்குள்ளானதை தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக எனது கணவர் ஓமன் நாட்டில் ஒப்பந்த கூலியாக தொழில் செய்வதற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் வேலை செய்ததற்கு கூலி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கேள்வி கேட்டால் நாட்டிற்கு உன்னை அனுப்ப மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் எங்களுக்கு அச்சம் ஏற்படுவதாலும் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத பட்சத்தில் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வழி இல்லாத நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம் எனவே எங்கள் கணவரை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதிய விவாசாய பெண் ! மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி ஆட்சியரிடம் மனு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மனைவி சகாயமாதா வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் மோட்டாரை 40 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொண்டதால் நெற்பயிர்கள் கருகி சாவியானது என்றும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பியை கண்டித்தும் கருகி சாவியான நெற்பயிர் மற்றும் இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி பத்திரத்தோடு மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு உடன் பத்திரத்தையும் வழங்குவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் .: எனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தேன். நெல்லுக்கு அங்குள்ள ஊரணியிலிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த மோட்டார் திருடு போய்விட்டது. இது குறித்து ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மோட்டாரை திருடி சென்றவரை பிடித்து அவரிடம் இருந்து குடிநீர் மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர் ஆனால் உரிய விசாரணை நடத்தி குடிநீர் பம்பு செட் மோட்டாரை என்னிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதால் தன்னுடைய நெற்பயிர் முழுவதும் கருகி சாவி ஆகி போனது என்றார். மேலும் தன்னுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி திருட்டு போன மோட்டாரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்ததற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைத்து இருந்தால் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியிருப்பேன் நெற்பயிர்கள் கருவி சாவியாக போய்யிருக்காது என்று கூறி கருகிய நெற்பயிர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து பம்பு செட்டு மோட்டார் இல்லாமல் தன்னால் இனி விவசாயம் செய்ய முடியாது என்று கூறி இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரத்தோடு வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் முத்துக்குமார் ( வயது37/24) என்பவர் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்துவிட்டார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் தன் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் வல்லந்தை கிராமத்தில் பரமக்குடி சார ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் மகாலில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவாக்க கல்வி இயக்ககம் இணைந்து மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்தினார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விரிவாக்கக் கல்வி இயக்குனர் முனைவர் முருகன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளல் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக வேளாண்மை தொழில்நுட்ப பயன்பட ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஷேக் என் மீரான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்த விவசாயி ராமர் என்பவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி இணை பேராசிரியர் தா பிரபு ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் ராம்குமார் தஞ்சாவூர் வேளாண்மை கல்வி இணை பேராசிரியர் வ ராமமூர்த்தி ராமநாதபுரம் விற்பனை குழு செயலாளர் ராஜா கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெகதீசன் நன்றியுரை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த போலீசார்..
மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த, 12ம் தேதி மாலை எனது மகன் ரக்ஸன் பிரணவை, அழைத்து கொண்டு வண்டியூர் தேவர்நகர் அருகே உள்ள ஸ்கேட்டிங் வகுப்பிற்கு சென்றேன். மகனை வகுப்பில் விட்டுவிட்டு, நானும் எனது, மகளும் காரில் இருந்தோம். மாலை, 5:15 மணியளவில் எனது மகன் தானாக தலையை முட்டிக் கொண்டதில், லேசான காயம் ஏற்பட்டதாக கூறி, அங்கு ஸ்கேட்டிங் பயிற்சியாளராக பணிபுரியும் உதயகுமார் (21) என்பவர் என்னிடம் வந்து கூறினார்.
நான், பதறிச் சென்று பார்த்தபோது எனது மகன் ரக்ஸன் வலியால் துடித்து கொண்டிருந்தான். அவனது, முகத்தில் வீக்கம் மற்றும் இரு பக்கங்களிலும் கைத்தடம் பதிந்த காயம் இருந்தது பற்றி, உதயகுமாரிடம் கேட்டபோது, ரக்ஸன் கோவத்துடன் தங்களை தாக்க முயன்றதாகவும், அதனால் அவனை, போர்வையில் சுற்றி இருட்டு அறையில் அடைத்து வைத்ததாகவும் கூறினார்.
அதேநேரம், என் மகனிடம் கேட்டபோது, இருட்டறையில் அடைத்து வைத்தபோது, தன்னை விடுவிக்குமாறு கேட்டும், அதை கண்டுகொள்ளாமல் உதயகுமார் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதால், காயம் ஏற்பட்டதாக ரக்ஸன் கூறினான். இதையடுத்து, ரக்ஸனை தாக்கியது பற்றி, உதயகுமாரிடம் நான் கேட்டபோது அவர் என்னை தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு பதிந்த, அண்ணா நகர் போலீசார் ஸ்கேட்டிங் பயிற்சியாளரான ராமநாதபுரம், பரமக்குடி, சத்திரக்குடி, அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த உதயகுமார் (21) என்பவரை கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணியில் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 600 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பதறாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் நிழல் தரும்மரங்கள் இப்பகுதியில் மிகவும் குறைவாக இருப்பதாலும் கடற்கரைப்பகுதியான இங்கு அதிகமான உவர்ப்பு தன்மை இருப்பதால் தினந்தோறும் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் எடுத்து வந்து மரங்களை வளர்க்க இக்குழு முயன்று வருகின்றனர். இதில் மாமரங்கள், வாழை புங்கன், அத்தி, மாதுளை, கொய்யா, சப்போட்டா, போன்ற பழக்கன்றுகளும் தென்னை, நீர்மருது சீத்தாப்பழம், போன்ற மரங்களை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகை விடுவிக்க கோரி மனு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகை விடுவிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனிசாமி மாவட்ட செயலாளர் நயிமுதீன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் நசுருதீன் ஆகியோர் இணைந்து மனு வழங்கினார். அதில் தெரிவித்ததாவது 2022-23, 2023-24ஆம் ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட தொகைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் உத்தரவுப்படி 1ஆம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும் என்றும் மூன்று வகையான சான்றிதழ்களை ஆய்வு செய்து புதுப்பித்தல் தொடர் அங்கீகார ஆணை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சுமார் 300 கிலோ எடை கொண்ட இறந்த பெண் டால்பின் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளத் திட்டுகள், கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, பாலூட்டி இனத்தைச் சார்ந்த ஆவுளியா என்று அழைக்கப்படும் கடல் பசு, டால்பின் போன்ற அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் சமீப காலமாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடலில் ஆழமான பகுதியில் வாழும் கடல் பசு, டால்பின், புள்ளி திமிங்கலம் உள்ளிட்டவைகள் கரை ஓரங்களில் மீன் பிடியில் ஈடுபடும் சிறுதொழில் மீனவர்களின் வலையில் அதிக அளவு உயிருடன் சிக்கி பின் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடலில் மீண்டும் விடப்பட்டு வருகிறது. இதனிடையே ராமேஸ்வரம் அருகே வில்லூண்டி வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை பெண் டால்பின் ஒன்று உயிரிழந்து கிடப்பதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்டபம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர்.கரை ஒதுங்கிய பெண் டால்பின் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் சுற்றளவும் சுமார் 300 கிலோ எடையும் கொண்டது. மேலும் வயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் பகுதி வெளியே தெரிந்தது. எனவே இந்த டால்பின் மீனவர்கள் வலையில் அல்லது படகின் பின்புறம் உள்ள என்ஜின் விசிறியில் பட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணியில் வேளாண்மை துறையின் தொழில்நுட்ப வேளாண்மை முகாம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வேளாண்மை துறை சார்பில் சேதுக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஞ்சதாங்கி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வேளாண்மை முகாம் திட்டத்தின் கீழ்பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) சுப்ரமணியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களான ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை நேர்த்தி செய்தல், மற்றும் கலை நிர்வாகம் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுடைய நெற்பயிருக்கு நெல் நுண்ணூட்டம் விட வேண்டியது அவசியம் மற்றும் மண் பரிசோதனை செய்து அதற்கு தேவையான அளவு உரம் பயன்படுத்துமாறு திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் பரிந்துரை வழங்கினார் . நெல் அறுவடை பின் அரசு மூலம் நிர்ணயம் செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) விற்பனை செய்து வரும் லாபத்தை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி மற்றும் நல் விதை தேர்வு செய்யும் முறை பற்றி செயல் முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. வயல்வெளியில் நன்மை தீமை செய்யும் பூச்சிகள் அடையாளம் காணும் முறைகள் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ச.ஜோசப் மற்றும் உதவி வேளாண் அலுவலர் ம.ப முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ! மீனவர்கள் மீது அக்கறை காட்டாத பாஜக அரசு 2024 வீட்டுக்கு அனுப்பப்படும் ராமேஸ்வரத்தில் ஆர் எஸ் பாரதி பேட்டி !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக இதுவரை தமிழக முதல்வர் 35 கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் மீனவர்கள் மீது அக்கறை இல்லாத பாஜக அரசு 2024 வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் இலங்கை அரசுடைமையாக்கபட்டு வருவதை கண்டித்தும், இலங்கை அரசின் கைது நடவடிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருவதை கண்டித்தும் மீனவர் கைது தொடர்பாக இதுவரை 35 முறை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் எந்த விதமான நடவடிக்கை இதுவரை எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மாவட்ட திமுக கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றியம் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி! நீயா நானா என போட்டி போடும் கட்சிகள்.போராட்ட களத்தில் பாகிஸ்தான்..
by Askar
written by Askar
பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது. இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பில், மலைபோல் தேங்கியுள்ள குப்பை கூளங்கள்! அடிக்கடி பற்றி எரிவதால் பொதுமக்கள் கடும் அவதி..
by Askar
written by Askar
திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பில், மலைபோல் தேங்கியுள்ள குப்பை கூளங்கள்! அடிக்கடி பற்றி எரிவதால் பொதுமக்கள் கடும் அவதி..
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள குப்பைகளை , நகராட்சி வாகனங்களில் சேகரித்து திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான கிடங்கில் டன் கணக்கில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக மலை போல் தேக்கமடைய செய்வதுடன், அக்குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் , இதனால் மர்ம நபர்கள் குப்பை கூளங்களில் தீயிட்டுச் செல்வதால் , மனிதக் கழிவுகள், மாமிசக் கழிவுகள் முதல் மருத்துவக் கழிவுகள் வரை குப்பை கூளங்களில் உள்ளதால் , தீயினால் புகைமண்டலம் கிளம்பி சாலையோரங்களிலும் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கும் , அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் , தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இந்த புகை மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,
மேலும் அவ்வழியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் புகையால் விபத்துக்கள் நிகழும் நிலை உள்ளது என பலமுறை நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள், தமிழக அரசு இதற்க்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உச்சிப்புளி வேளாண்மை துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை / இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பாலாஜி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் மண் வளம் மேம்பாடு பற்றியும் உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாடு பற்றியும் இயற்கை வளத்தை தக்க வைத்து பயிர் வறட்சியை தாங்கி வளரும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் அதன் செயல்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் விஜய்குமார் பேசுகையில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் பற்றியும் மண்வளம் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் மண் வளம் நீர்வளம் பாதுகாக்கப்பட்டு என்றும் நஞ்சில்லா உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரித்து செலவினம் குறைத்து கூடுதல் வருமானம் ஈட்டும் என்று கூறினார். இப்பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் மா.பவித்ரன் ஆகியோர் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் சிஐடியு சங்கம் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு !
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செய்வதற்கு முழு உடல் பரிசோதனை செய்து தர கோரி சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயணம் வழிகாட்டி குழு ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜாவை இரு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து புனித ஹஜ் பயணம் செய்வதற்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.. உடனே மருத்துவர் மனோகரன் மருத்துவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி புரிந்த அரசு மருத்துவர்கள் , சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் ஹஜ் பயண வழிகாட்டி குழு ஆகியோர் வாழ்த்துக்களின் பாராட்டுகளையும் புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாத்தான்குளம் கிராமத்தில் தென்னை நார் தொழில்துறை கருத்தரங்கம்!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளம் கிராமத்தில தென்னை நார் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு கருத்தரங்கில் கலந்து கொண்டு தெரியவிக்கையில் கயிறு வாரியம் மூலம் இப்பகுதி பெண்கள் 100க்கு மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோர் ஆக உருவாகி உள்ளனர். நமது நாட்டில் 14 மாநிலங்களில் கயிறு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. வருடத்திற்கு 14 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மூலம் கயிறு உற்பத்தி நம் நாட்டினுடைய தேவை மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நம் நாட்டினுடைய வளர்ச்சி மேன்மைப்படும் என்றும் தெரிவித்தார். கருத்தரங்கில் சாத்தான்குளம் ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் தொழில் முனைவோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவிப்பை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டித்தும் , வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய கோரியும் , பணிநீக்க ஆணையினை வீட்டின் சுவர்முன்பு ஒட்டி வருவாய்த் துறையினரை அவமானப்படுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி நடைபெற்றது. மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை !தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவிக்கையில் :- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கை கண்டிகைத்தது என்றும் அரசியல் காரணங்களுக்காகவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும், மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளையும், சிறுபான்மை சமூகம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு எதிராகவும் தேசிய புலனாய்வு முகமையை பாசிச பாஜக அரசு ஏவிவிட்டு வருகின்றது. சிபிஐ என்னும் மத்திய புலனாய்வு அமைப்பை அரசியல் காரணங்களுக்காக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வரும் நிலையில், மதச்சார்பின்மைக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசு தற்போது என்.ஐ.ஏ.-வை ஏவிவிட்டு வருகின்றது. தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாத வழக்குகளை விசாரித்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அரசியல் பழிவாங்கும் கருவியாக ஆட்சியாளர் களால் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் ஜனநாயக அமைப்புகளை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என்று செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.