வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்றந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த குப்பன் (45) கூலி தொழிலாளி அதே ஊரில் கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் சடலமாக கண்டெடுத்துள்ளறர். இது கொலையா அல்லது தற்கொலையா என காட்பாடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Category:
தேசிய செய்திகள்
ஆம்பூர் உட்கோட்டம் காவல்துறை மற்றும் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரோட்டரி ஹாலில் காவல்துறை சார்பில் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் ஆம்பூர் நகர ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இதில் ஆம்பூர் கிராமிய ஆய்வாளர் கோகுல்ராஜ் பள்ளிகொண்டா ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்டு பேசிய ஆம்பூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் ஆம்பூர் உட்கோட்டம் பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இரவு காவலர்கள் பணி அமர்த்த வேண்டும்,அனைத்து வங்கிகளிலும் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் வங்கி சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் தமிழக அரசால் தமிழக காவல்துறையை அறிவித்துள்ள காவலர் ஆப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு வங்கியில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிசிடிவி கேமரா உடன் அலாரம் பொருத்த வேண்டும் என்றும் பேசினார் இதில் ஆம்பூர் உட்கோட்டம் பகுதியில் உள்ள வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- வாரியார், வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க துண்டு பிரசுரம் : தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக சட்டவிரோதமாக மது விற்பது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அரசுப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டது. இந்த தொலைபேசி எண் மூலம் தகவல் கொடுப்பவரின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது, இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் குளறுபடி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்பு சாம்ராஜ் ஒன்றிய கழக செயலாளர், தலைமை டிகே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் , பழனியப்பன் கழக தலைமை நிலைய செயலாளர், சேகர் தலைமை கழக பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடைசியாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசிய பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மக்களுக்கு இலவசமாக கட்சி துண்டு சேலைகள் பழனியப்பன் வழங்கினார் இதில் இலவச சேலைக்கு மேடையில் ஏரி மக்கள் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழனியப்பன் சிலைகளை அப்படியே மேடையில் விட்டுவிட்டு கீழே இறங்கி கிளம்பிவிட்டார் இதில் கட்சி மக்கள் மேடையில் ஒருத்தருக்கு ஒருவருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிறகு பாப்பாரப்பட்டி போலீசார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாண்டிச்சேரி மர்கஜ் அல் இஸ்லாஹில் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்பு பட்டி மன்றம் நடைப்பெற்றது.
நாட்டுப்பற்று என்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி. இறை நம்பிக்கை கொண்டவர்கள் நாட்டுப் பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள். எவருடைய நாவாலும் கரங்களாலும் பிறர் அமைதி பெறுவார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக ஒரு முஸ்லிமிற்கான இலக்கணத்தை வகுத்தளித்து உள்ளனர்.
இதனடிப்படையில், கல்லூரி நிறுவனர் சையித் நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி, கல்லூரி முதல்வர் சையித் முஹம்மது ஆதில் நிஜாமி பிலாலி M.Phil, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி வரும், அரபி கற்றறிந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான பட்ட மேற்படிப்பு கல்லூரி, மர்க்கஜ்-அல்-இஸ்லாஹ் அரபிக்கல்லூரியில் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக (டாக்டர் மேகநாதன் எம்.டி. இணை பேராசிரியர் ஆறுபடை வீடு மருத்துக்கல்லூரி அவர்கள்) கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்பித்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முஸ்லிம்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது. கல்வி&அரசியல் தளங்களிலா.. (அல்லது) சமய &சமூக சேவைகளிலா.. என்ற தலைப்பில் சிறப்பான பட்டி மன்றம் நடைப்பெற்றது.
செய்தி:- அஸ்கர், திண்டுக்கல்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறப்பாக பணியாற்றியதற்க்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கௌரவித்தார் இதனடிப்படையில் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதை, அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.சுரேஷ் பாபு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் பாபு அவர்கள் இரண்டு பச்சிளம் சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல்-அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 70-வது குடியரசு தின விழா..வீடியோ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவின் 70-வது குடியரசு தினவிழா நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல் – அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26.01.2019 இன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர் காதிர் அலி தலைமை தாங்கினார். Dr. Prof. M.E.D. MOHAMED (Organizer, Muslim Law Academy) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் மேலாளர் திப்பு சுல்தான் மற்றும் பள்ளியின் முதல்வர் ருக்கையா முன்னிலை வகித்தார்கள்.
அல்-அஸ்ஹர் டிரஸ்ட் உறுப்பினர்கள் முஹம்மது கனி மற்றும் சாகுல் ஹமீது மேலும் பள்ளியின் அலுவலக ஊழியர் நைனா முஹம்மது (எ) கனி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பள்ளி மாணவ மாணவிகளின் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தின வாழ்த்துக்களை தங்களிடையே பறிமாற்றிக் கொண்டனர்.
விழாவின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
70வது குடியரசு தினத்தையொட்டி பல் வேறு மாநிலங்களில் வீர, தீர் செயல் புரிந்தவர்களுக்கும், சிறந்த சமுதாய சேவியாற்றியவர்களுக்கும் முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது.
அதன் வரிசையில் இன்று மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறந்த காவலர்கள் முதல்வர் பதக்கம் திரு லோக ராஜ் அவர்களுக்கு வழங்கப் பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை “SMART CITY” பணிகள்.. ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிக்காக பேருந்து வழி தடங்கள் மாற்றம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூங்கா நகரமான மதுரை மாநகர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறுதல்கள் அடையும் வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு நவீன பேருந்து நிலையமாக 18 மாதங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளன. நகரின் மைய பகுதியில் இருக்கக்கூடிய இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் வந்து செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையமாகும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறக்கூடிய பேருந்து நிலையம் 18 மாதங்கள் முடிவடைந்த உடன் புதிய பேருந்து நிலையமாக உருவெடுக்க உள்ள நிலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஆக 9 இடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது .
திருப்பரங்குன்றம் திருமங்கலம் வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் கேபிஎஸ் ஹோட்டல் அதாவது திருப்பரங்குன்றம் ரோடு வழியாகவும், தெப்பக்குளம் திருப்புவனம் செல்லக்கூடிய பேருந்துகள் crime branch வழியாகவும், சிந்தாமணி வேலம்மாள் மருத்துவமனை நெடுங்குளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மாலை முரசு பத்திரிகை அருகில் இருந்து செல்லும்.
அவனியாபுரம் காரியாபட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஹயாத்கான் தெரு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து செல்லவிருப்பதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அழகர்கோவில் ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்தும், ஒத்தக்கடை திருவாதவூர் மேலூர் பகுதியில் செல்லக்கூடிய பேருந்துகள் பாண்டிபஜார் சர்ச் ரயில்வே நிலையம் மேலவெளிவீதி பகுதிகளிலிருந்தும், பாத்திமா கல்லூரி வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மகபூப்பாளையம் மதுரை ரயில்வே மேற்கு வாயில் வழியாக கிளம்பும்.
மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் செக்கானூரணி உசிலம்பட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் எல்லீஸ் நகர் பகுதியில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கிங் அருகில் இருந்தும், எம்ஜிஆர், அண்ணா ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் மதுரை பழங்காநத்தம் /நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும் பைபாஸ் ரோடு பகுதிகளில் இருந்தும் கிளம்பும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ேமலான் இயக்குநர் சேனாதிபதி அவர்கள் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிpயில் 70வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் நிஜாமுதீன் MD (Paediatric) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புறை நிகழ்த்தினார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புகாரி இவ்விழாவிற்கு தலைமையேற்றார். பள்ளி முதல்வர் சாஹிரா பானு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக் தாவுத் கான் அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில்ää கல்லூரி வளாகத்தில் 1200 மாணவää மாணவியர்கள் கலந்து கொண்டுää வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொருளாதாரத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வாக்காளரின் உரிமை மற்றும் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஆ.சிவானந்தம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை திருமிகு மு. தனபால்ää மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் -பாலக்கோடு அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக “வாக்காளர் உறுதிமொழி” எடுக்கப்பட்டது.
பேரணியின்போது வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக வாசகங்கள் அடங்கிய பதாகைளை மாணவர்கள் கையில் ஏந்தி வந்தனர். துண்டு பிரசுரங்கள் வழியில் உள்ள கடைகளிலும், பொதுமக்களிடமும் வழங்கி வாக்காளர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் மைதானம் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது. காவல் அதிகாரிகள் பேரணியை சிறப்பாக நடத்த உறுதுணை புரிந்தனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக் கொடி ஏற்றினார். காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மேற்பார்வையில் துவங்கிய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். அமைதிப் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.
பல்வேறு துறைகள் சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 54 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், பிற துறைகளில் சிறப்பான பணி, தன்னார்வலர்களின் சேவையை பாராட்டி 183 பேருக்கு நன்மதிப்பு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பல்வேறு பள்ளி, கல்னூரி மாணவ, மாணவியரின் தேசப்பற்றை உணர்த்திய கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என். காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமாலினி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் கண்ணன், வெள்ளைத்துரை, காவல் கண்காணிப்பாளர் நடராஜன், கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, சமூக நல அலுவலர் குணசேகரி, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் கோபிநாத், தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள அவலான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணிதத்துறை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலையுரையாற்றினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் துணை முதல்வர்கள் சேக்தாவூது மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சென்னை நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை முதுநிலை அதிகாரி வினோத் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி சந்திரபிரகாஷ் ஆகியோர் நிறுவனத்தின் உற்பத்தி முறை மற்றும் பல்வேறு திட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் விளக்கி கூறினர்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட 100கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ₹.8,000/- முதல் ₹.14,000/- மற்றும் மற்றும் தங்கும் வசதி, போக்குவரத்து வசதியுடன் வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
செய்தி:- கார்த்தி, கீழக்கரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுர தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹீ (IAS), தலைமையில் இராமநாதபுர அண்ணா பல்கலைக்கழகத்தில் 2501/2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் K.வீரராகவராவ் பங்கேற்று, இளைஞர்கள் அனைவரும் ஓட்டு போடவும், நூறு சதவீகிதம் ஓட்டு போடுமாறும் சிறப்புரை ஆற்றினார். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. அதில் எமது கல்லூரியின் சார்பாக, ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் செல்வி S.துர்கா அவர்கள் தலைமையில் ஏழு மாணவிகள் கொண்ட குழு, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும், நூறு சதவீகிதம் ஓட்டு அளிக்க வேண்டும், படித்தவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஒப்பனை நாடகம் நடித்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இறுதியாக தேசிய கீதத்துடன் இனிதே நகழ்ச்சி நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் : தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி துறைமுக சபை தலைவரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் :- இந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் பல்வேறு துறையை சார்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையானது வருடத்திற்கு 130 சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 9000 சரக்கு பெட்டகங்கள் மூலமாக 30 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு வந்துள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகம் சரக்கு கையாளும் இலக்கை ஆண்டுதோறும் அடைந்துள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிந்ததே. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கப்பல் நிறுவனங்கள், கப்பல் முகவர்கள், சுங்க சரக்குகளை கையாளும் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கையாளும் நிறுவனங்கள், சரக்கு தர ஆய்வு நிறுவனங்கள், எடைமேடை நிறுவனங்கள், சரக்கு கிடங்கு நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துறையைச்சார்ந்த டிப்பர் லாரி மற்றும் கனரக வாகன ஒட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமின்றி வாகன பட்டறை
தொழிலாளர்களும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்களும், பெட்ரோல் டீசல் விற்பனையாளர்களும் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களும் பாதிக்கபட்டுள்ளனர், இது மட்டுமின்றி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகமும் வெகுவாக பாதிக்கப்பட்டு மிக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 22 வருடங்களாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மிக சீரான முறையில் வருடத்திற்கு 30 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு வந்த நிலையில், தற்போது தூத்துக்குடியில் இயங்கும் நிறுவனங்களால் இந்த இழப்பை ஈடு செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. 2018-19 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்ட உலர் சரக்கு விகிதம் கடந்த ஆண்டு கையாளப்பட்ட சரக்கு விகிதத்தை விட குறைந்துள்ளது
இதற்கு ஸ்டெர்லைட் ஆலை. இயங்காததும் பிரதான காரணமாகும், இது துறைமுகம் சார்ந்த வர்த்தகத்தில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது சராசரியாக 1000 டிப்பர் லாரிகள், மாதத்திற்கு 20 க்கும் மேற்பட்ட நாட்கள் சரக்குகள் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும்
தவிக்கிறார்கள்.
பல்வேறு சரக்கு கையாளும் நிறுவனங்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நம்பி அதிக முதலீட்டில் நிறுவிய பல சரக்கு கையாளும் இயந்திரங்கள், தற்போது இயக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் தாக்கத்தால் தூத்துக்குடியிலுள்ள பல சார்பு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், பல ஒப்பந்த உரிமையாளர்களின் முதலீடு ஸ்டெர்லைட் ஆலை மூடலால் முடங்கியுள்ளது. இது மேலும் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் இணைந்து பனியாற்றும் சேவை வழங்குவோர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியின் பொருளாதார நிலை 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆலையின் செயல் முறையில் எவ்வித குறையுமில்லை என்பது 22 ஆண்டுகளாக அதனோடு நேரடி தொடர்பில் இருக்கும் எங்களுடைய தாழ்மையான கருத்து. தவறான
வதந்திகளால் தொடங்கப்பட்ட, ஆலைக்கு எதிரான போராட்டம் இயங்கிக் கொண்டிருந்த ஆலையை மூடியது மட்டுமல்லாமல் அதனை சார்ந்த 80,000 மக்களின் வாழ்வாதாராத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தடை விதித்து 8 மாதங்கள் ஆன நிலையில் தொழிற்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கதியாக நிற்கிறோம்
மேலும், வேதாந்தா நிறுவனம் சார்பில் கூறப்பட்ட உண்மைகளை உறுதிபடுத்தும் விதமாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த சிறப்பு குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி வழங்கிய இறுதி அறிக்கையில் ஆலையை மீண்டும் இயக்க பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று உச்ச நீதி மன்றமும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை ஏற்று, ஆலை இயங்குவதற்கான இசைவானையை வழங்கும் படி பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்று ஆலையை திறக்க வலியுறுத்தி 23.01.2019 அன்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம், தூத்துக்குடி சிட்டி லாரி புரோக்கர்ஸ் ஏஜென்ட்ஸ் அசோஸியேஷன், தூத்துக்குடி ஸ்டீவ்டோர்ஸ் அசோஸியேஷன் ஆகிய நாங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துளோம். ஆலையை இயக்க உச்சநீதி மன்றம் பரிந்துரை செய்த பின்பும், அதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடைமுறை படுத்தப்படாத பட்சத்தில் துறைமுக உபயோகிப்பாளர்களாகிய நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம் என்பதை இந்த கோரிக்கை மனுவின் மூலமாக துறைமுக தலைவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
எங்களின் இந்த நிலையை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று , ஆலையை உடனடியாக திறக்க பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்” என மனுவில் கூறியுள்ளனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக செய்திகள்கீழக்கரை செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டு செய்திகள்
துபாயில் நடந்த மாரத்தான் போட்டியில் கீழக்கரை மற்றும் பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டனர்…வீடியோ..
by Mohamed
written by Mohamed
துபாயில் ஸ்டேண்டர்ட் சாட்டர்ட் பேங்க் (Standard Chartered Bank) சார்பாக வருடந்தோரும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2019 ஆண்டிற்கான 10 கி.மீ மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கீழக்கரையை சார்ந்த மரைக்கா, சிஹாபுதீன், ஜீப்ரீ ஆகியோர் AG MELCO அணி சார்பாகவும், மதுரையில் இருந்து மார்டின் ரேமண்ட், தன் ஐந்து வயது மகனுடன் கலந்து கொண்டு 10 கி.மீ தூரத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்தனர் .இதில் கலந்து கொண்ட மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் முதல் பரிசு வென்றார்.
விடுமுறை நாட்களில் வாட்ஸ அப், பேஸ் புக் மற்றும் நண்பர்களேடு நேரத்தை செலவளிக்கும் வேலையில் அரோக்கியத்தை ஊக்குவிக்கும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது பாராட்டுக்குறியது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
xஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,244 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 64 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 8,052 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் 60 சதவீத ஆசிரியர்கள் ஜன., 22 இல் துவங்கிய ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை விலக்கி கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தது. நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி ராமநாதபுரத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 65 சதவீதம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 849 பெண்கள் உட்பட 1,354 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கு வராத அரசு பள்ளி ஆசிரியர்கள் 65 சதவீதம் பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், நாளை (ஜன., 26) பணிக்கு திரும்பவில்லையெனில் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டு இன காளைகளை காப்பாற்ற – சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளது – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா நாட்டுக்கோழி, கறவை பசுக்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி மற்றும கறவை பசுக்களை வழங்கி பேசினர். இதில் 30 பயனாளிகளுக்கு ரூ.1,87,500 செலவில் நாட்டுக்கோழிகளும், 45 பயனாளிகளுக்கு ரூ.18,11,250 செலவில் கறவை பசுக்களும் வழங்கப்பட்டன.
பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.50 கோடி செலவில் கிராமப்புறங்களில் உள்ள மகளிர்கள் 77 ஆயிரம் பேருக்கு 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நாமக்கல், சேலம், தொடர்ந்து 3வது மாவட்டமாக தூத்துக்குடியில் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை ஏற்கனவே 450 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்க உள்ளோம். அதே போல் 2400 மகளிர்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 3000பேருக்கு விலையில்லா வெள்ளாடுகளை ஆகியவை பிப்.15-ம் தேதிக்குள் வழங்கப்படும்.
கறவை பாலுக்கான விலை குறைவாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் பெற்று தரப்படும்.
தமிழகத்தை பொருத்தவரை காங்கேயம், நாட்டு இன காளைகளின் விந்து எடுப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியாக விந்து உற்பத்தி நிலையம் உள்ளது. அதே போல, காங்கேயம் இன காளைகளை உற்பத்தி செய்வதற்காக விந்து எடுக்க சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் பகுதியில் ரூ.2.5 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. நாட்டு இனங்களை பொருத்தவரை, ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டங்கள் என ஆங்காங்கே உறை விந்துகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். நாட்டு இன உறை விந்துகள் மிக அதிகளவு உள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கு கூட இங்கிருந்து தான் அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டு இன காளைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை பூங்கா தொடங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் 2300 கால்நடை கிளை நிலையங்கள் உள்ளன. இந்தாண்டு 125 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 100 கிளை நிலையங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இயங்கி வருகிறது. வரும் காலங்களில் கிளை நிலையங்கள் மருந்தகங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.
அனைத்து கால்நடை மருந்தகங்களையும் கணினி மூலம் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு கால்நடை மருந்தக பகுதியிலும் கறவை பசு பெற்றவர்கள், நாட்டுக்கோழிகள், வெள்ளாடுகள் பெற்ற பயனாளிகள் பெற்றவர்களின் விபரங்கள், இந்த கால்நடைகள் எத்தனை குட்டிகள் ஈன்றுள்ளன போன்ற விபரங்கள் கணினி வாயிலாக உடனடியாக தெரிந்து கொள்ளலாம், என்றார் அவர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு: S P முரளிரம்பா துவக்கி வைத்தார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு (SOCIAL MEDIA CENTER) தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இன்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான சேவைகளில் சில நிகழ்வுகள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது சில நிகழ்வுகள் பொது மக்களின் கவனத்துக்கு வருவதில்லை. ஆகவே பெரும்பாலான பொது மக்கள் அறியவேண்டும் என்பதற்காக இந்த சமூக ஊடக பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவானது சார்பு ஆய்வாளர் சத்யநாராயணன் தலைமையில் காவலர்கள் முத்துமாரியப்பன், ரகுபதி மற்றும் அருண்ராஜ் ஆகியோரைக் கொண்டு செயல்படும். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரவு பகல் பாராமல் பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடும் காவல்துறையினரின் அரிய செயல்களை பொதுமக்களுக்கு வாட்ஸ் அப், முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாக இப்பிரிவினர் வெளிப்படுத்துவார்கள்
அதே போன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அந்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பொறுப்பில் whatsapp தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவார்கள். இப்பிரிவினர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய whatsapp குழுக்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் மொத்த தகவல்களை சேகரித்து வெளியிடுவார்கள்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா தெரிவித்துள்ளார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 2003 ஏப்.7 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி , பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்கள், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். 3,500 துவக்கப்பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ( ஜாக்டோ-ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
நிர்வாகிகளை அழைத்து பேசி எவ்வித முடிவையும் அறிவிக்க தமிழக அரசு முன்வராததால் காலவரையற்ற போராட்டம் அறிவித்தனர். மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை விடுத்து பணிக்கு வர வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு எச்சரிக்கையை மீறி இன்று (ஜன.22) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரத்தில் வட்டார அமைப்பாளர் பரமேஸ்வரன், பரமக்குடியில் மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ், கமுதியில் மாவட்ட அமைப்பாளர் குமார், ராமேஸ்வரத்தில் வட்டார அமைப்பாளர் ஜெயசீலன், கீழக்கரையில் மாவட்ட அமைப்பாளர் குமரவேல், திருவாடானையில் தாலுகா செயலாளர் எமர்சன், ஆர்.எஸ்.மங்கலத்தில் தாலுகா செயலாளர் பாலகிருஷ்ணன், கடலாடியில் வட்டார செயலாளர் ஆனந்த் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்வி (ஆசிரியர்கள் உள்பட), கூட்டுறவு, ஊரக வளர்ச்சி, வருவாய், நில அளவை மற்றும் நில ஆவண பதிவு துறை, ஆதிதிராவிடர் நலம், நெடுஞ்சாலை, சுகாதார நலப்பணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிற்பட்டோர் நலம், போக்குவரத்து, பேரூராட்சி, மீன்வளத் துறை, பத்திரப் பதிவு, கருவூலம் மற்றும் கணக்குகள் துறைகளைச் சேர்ந்த 15,748 பணியாளர்களில் 4, 285 பேர் பணிக்கு வராமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.