கீழக்கரை செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆலோசனை கூட்டம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக டி.ஜி.பிக்கு கொலை மிரட்டல்: சேலம் இளைஞரிடம் போலீசார் விசாரணை..
சென்னை:தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.தே.க.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக , சேலத்தைச் சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்படுவதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ஓய்வு பெற்றற ராணுவ வீரர் என்றும், சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை எதிா்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு காவல்துறைற அனுமதி மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் பேசியுள்ளார். மேலும் தமிழக காவல்துறைற டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த அதிகாரிகள், அந்த அழைப்பு குறித்து விசாரணை நடத்த சைபர் குற்றறப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டனர். சைபர் குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில், அந்த அழைப்பு சேலம் கிச்சிபாளையம் சந்நியாசி குண்டு தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணராஜா என்பவர் செல்லிடப்பேசியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு வந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் சேலம் போலிசார், பாலகிருஷ்ணராஜாவை பிடித்து விசாரணை செய்ததில், மிரட்டல் விடுத்தது அவரது மகன் விஜயபாபு (35) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலிசார் விஜயபாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனார். போலிசார் விசாரணையில் அவர், காவல்துறை உயர் அதிகாரிகள் செல்லிடப்பேசியையும் தொடர்பு கொண்டு மிரட்டும் வகையில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது இதில் விஜயபாபு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறறது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவது குறித்து போலிசார் ஆலோசித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் வைகோவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் அடிதடி- வீடியோ பதிவு..
தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் பிரனாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் ஆஜராகிட வந்த வைகோவை தரக்குறைவாக சில வழக்கறிஞர்கள் பேசி கோசம் போட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜராகி 15 நிமிடம் கழிந்து வெளியே வந்த போது வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்த சில வழக்குறைஞர்கள் மீண்டும் கோஷம் எழுப்பி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
இதனைக் கண்டு கோபம் கொண்ட ம.தி.மு.க வினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்து தகாத வார்த்தைகள் பேசியவர்களை நோக்கி ஒடிச் சென்று கற்களை வீசி நிதானமில்லாமல் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் வெற்றி ஆகிய 2 வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தாக்கப்பட்டவர்களை மீட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து வழக்கறிஞர்களை காப்பாற்றினர். இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி..
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாகச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கபப் டும் அடிப்படை சான்றுகளின் நிலுவை விபரங்கள் குறித்தும், நில ஆவணங்களில் கணினி திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளபப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடாந்து இராமநாதபுரம்வடட்ம் பட்டணம்காத்தான் குவுக்காரத் தெருவைச்சேர்ந்த முருகபாண்டி என்ற முகம்மது பாருக் என்பவர் 29.09.2016அன்று இராமநாதபுரம் ஜனார்தனன் மாளிகை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததை அடுத்து அவருடைய மனைவி பரக்கத்நிஷா என்பவருக்கும், அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தெற்குதரவை விலக்குரோட்டில் 20.01.2017அனறு ஏற்பட்ட விபத்தில் இறந்ததையடுத்து அவரது மனைவி லதாவுக்கும் நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் மற்றும் 2லட்சதிற்கான காசோலை வழங்கப்பட்டது.
அதேபோல இராமநாதபுரம் வட்டம் உச்சிப்புளியில் உளள் என்மணங்கொண்டான் பகுதியைச் சார்ந்த மலைமேகு என்பவர் தனது 5 வயது மகன் செல்வன் முகேஷ்பாண்டிக்கு இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவு நோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அன்னாருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50.000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்த நிகழ்வுகளின் போது இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.சுமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, இராமநாதபுரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..
2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் பால்பாக்கெட், பால் பொருட்கள், மருந்து பொருட்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்த மாணவர் படுகொலை: வேலூர் பார் தொழிலாளி கைது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய இராமநாதபுர மாவட்ட திமுக செயலாளர், செயல் தலைவரை நேரில் சந்திப்பு..
திமுகவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுச்செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகிறார் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம்இராமநாதபுரம் மாவட்டம் வருகை தர இருப்பதால் கழக மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர்கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவர் சார்பிலும் சனிகிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமிது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா ..
இராமநாதபுரம் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நகரில் அமைந்துள்ள முகம்மது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற்றன. கல்லூரி சேர்மன் பேசுகையில், இக்கல்லூரியில் மாணவிகளை சேர்த்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஒழுக்கம், ரிசல்ட், வேலை வாய்ப்பு கொடுப்பது தான் முதல் குறிக்கோள். அதே போல் ஒழுக்கம் குறைத்தால் டிசியை கொடுத்து விடுவோம், பல்கலை கழக ராங்க் எடுத்தால் கல்வி கட்டணம் குறைக்கப்படும், மார்க் வருகை பதிவேடு பற்றி ஒவ்வோரு மாதமும் இக்கல்லூரி அலுவலகத்தில் வந்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முகம்மது சதக் டிரஸ்ட் செயலாளர் சர்மிளா பேசுகையில், எங்களது சதக் அறக்கட்டளை 24 வருடங்களுக்கு மேல் உள்ளன பல கல்லூரிகளை உருவாக்கிய முன்னாள் தலைவர் ஹமீது அப்துல் காதர் பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி இப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் முதல் நாளில் அடி எடுத்து வைக்கும் மாணவிகள் நம்பிக்கையோடு கல்வியை பயில வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹமீது இபுராகிம், ஹபீப் முகம்மது, அறக்கட்டளை உறுப்பினர் உசேன், ஜலால், முகம்மது அஸ்லம், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர் ரஜபுதீன், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகம்மது ஜஹுபர், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதியா அரபிக் கல்லூரி முதல்வர் அலிசா நூராணி, துணை விரிவுரையாளர் சாஹின், முகம்மது சதக் கல்வியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், சைடெக் முதல்வர் ரியாஸ், கல்லூரி முதல்வர் நாதிரா பானுகமால், சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நூர் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொடைக்கானலில் தீயணைப்பு படையினர் திடீர் ஒத்திகை இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தீயணைப்பு படையினர் கொடைக்கானல் முக்கிய இடமான சுற்றுலா பயணிகள் வாகனநிறுத்த கலையரங்கபகுதியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர் மோகன் மற்றும் வட்டாச்சியர் பாஷ்யம் தலைமையில் திடீரென தீயணைப்பு வீரர்கள் தீயில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்றும் விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை எப்படி உடனே காப்பாற்றுவது என்பது குறித்து பல சாகசங்கள் செய்து காண்பித்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் யாரிடமும் சொல்லாமல் துண்டு பிரசுரங்களை கொடுக்காமல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி நமது செய்தியாளர் கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் மோகன் அவர்களிடம் கேட்டதிற்கு அவர் கூறியதாவது, திடீரென்று நிகழ்ச்சி நடந்தது இதனால் யாருக்கும் சொல்லவில்லை, அடுத்த முறை அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தி இதை பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்கிறோம் என்றார்.
மேலும் இது பற்றி கொடைக்கானல் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் கூறுகையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவுபடி ஆர் டி ஓ மற்றும் தாசில்தார் முன்னிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் பேரிடர் மீட்பு பணிகள் என பொதுமக்கள் கூடும் இடத்தில் வீரர்களை வைத்து தீயில் சிக்கி கொண்டால் எப்படி காப்பாற்ற வேண்டும் வெள்ளத்தில் சிக்கி தவித்தால் எப்படி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நேரடியாகவே பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு கொடுக்கிறோம். மேலும் அடுத்த முறை பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை கண்டிப்பாக வழங்குவோம் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு..
தமிழக அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆதாரத்துடன் புகார் எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளில் மெர்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி பல்புகளை மாற்றியதில் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘மின் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் நோக்கத்தில், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தெரு விளக்குகள் அனைத்திலும் உள்ள மெர்குரி பல்புகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுவதற்கு 2014-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதற்காக ரூ.1,365 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த டெண்டர்விடப்பட்டது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிவிட்டார்” என்கிறார், சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான வெங்கடாசலம்.
இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.
சேலம் மாநகராட்சியிலிருந்து, இதற்கான டெண்டர் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றேன். இவர்கள் டெண்டர் விட்டு வாங்கிய பொருள்களின் விலையும், அதே பொருள்களுக்கான இந்திய அளவில் பிரபலமான நிறுவனங்களின் கொட்டேஷன் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
சேலம் மாநகராட்சியில் எல்.இ.டி தெருவிளக்குகள் போடுவதற்கு 08.08.2014-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆகாஷ் இன்ஜினியரிங் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 20 வாட்ஸ் கொண்ட 22,037 எல்.இ.டி தெரு விளக்குகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஒரு எல்.இ.டி பல்பின் விலை 6,950 ரூபாய் என்று டெண்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள பிரபலமான எல்.இ.டி கம்பெனியான டெல்லி இந்தியா பையிங் நிறுவனம் 20 வாட்ஸ் எல்.இ.டி தெருவிளக்கு ஒன்றை 904 ரூபாய்க்கும், டெல்லி மொக்ஹிலிஸ் நிறுவனம் 965 ரூபாய்க்கும், நொய்டா மாக்ஸ்ஹி நிறுவனம் 1,995 ரூபாய் என்ற விலைக்கும் கொடுக்கின்றன.!
இதில், அதிகபட்சமாக 1,995 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால்கூட ஒரு எல்.இ.டி லைட்டுக்கு குறைந்தது 5,000 ரூபாய் சுருட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால், 22,037 பல்புகளுக்கு 11,01,85,000 ரூபாய் ஊழல் நடந்துள்ளது….!
அதேபோல, 439 எல்.இ.டி கன்ட்ரோலர்களைப் போட்டிருக்கிறார்கள். இதில், ஒரு எல்.இ.டி கன்ட்ரோலரின் விலை 21,500 ரூபாய் என்று டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பெங்களூரு டெக்னோ ஸ்ப்ரே ரூ.450-க்கும், சண்டிகார் சோலாரேஜ் ரூ.500-க்கும், டெல்லி மோக்ஸி ரூ.450-க்கும் இதைக் கொடுக்கின்றன. அதிகபட்சமாக 500 ரூபாய் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு எல்.இ.டி கன்ட்ரோலருக்கு 21,000 ரூபாய் சுருட்டியுள்ளனர்.!
அப்படியென்றால் 439 கன்ட்ரோலருக்கு 92,19,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்..!
அடுத்ததாக, எட்டு கே.வி.ஏ சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் போட்டுள்ளனர். மொத்தம் 1,105 வோல்டேஜ் கன்ட்ரோலர்கள். சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் ஒன்றின் விலை ரூ.47,295 என்று டெண்டரில் குறிப்
பிட்டுள்ளனர்…!
ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.6,000-க்கும், பஞ்சாப் ஹர்ஷ் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் ரூ.7,000-க்கும், உத்தரப் பிரதேசத்தின் டெஸ்டா எலெக்ட்ரிக் ரூ.4,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!
இதில் அதிகப்படியாக 7,000 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 1,105 சிங்கிள் பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 4,45,25,975 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!
அடுத்ததாக, 21 கே.வி.ஏ த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் 152 போட்டுள்ளனர்…!
இந்த கன்ட்ரோலரின் விலை ரூ.1,18,815 என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.3,000-க்கும், நியூட்ரிக் ரூ.9,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!
இதில், அதிகப்படியாக 9,500 ரூபாய் என்று எடுத்துக்கொண்டாலும் 152 த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 1,66,00,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!
* எனக்குக் கிடைத்த கொட்டேஷன்படி பார்த்தால் ஒரு மாநகராட்சிக்கு மட்டும் குறைந்தது 25 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார்…!
அடுத்ததாக, 21 கே.வி.ஏ த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலர் 152 போட்டுள்ளனர்…!
இந்த கன்ட்ரோலரின் விலை ரூ.1,18,815 என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செர்வோ ஸ்டார் ரூ.3,000-க்கும், நியூட்ரிக் ரூ.9,500-க்கும் இதைக் கொடுக்கின்றன.!
இதில், அதிகப்படியாக 9,500 ரூபாய் என்று எடுத்துக்கொண்டாலும் 152 த்ரீ பேஸ் வோல்டேஜ் கன்ட்ரோலருக்கு 1,66,00,000 ரூபாயைச் சுருட்டியுள்ளனர்…!
எனக்குக் கிடைத்த கொட்டேஷன்படி பார்த்தால் ஒரு மாநகராட்சிக்கு மட்டும் குறைந்தது 25 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார்…!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம்- ECR நான்குவழி சாலையில் இன்று (05/07/2017) சற்று முன்பு புதுமடம் 7A அரசு பேருந்து லாரியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் படும் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளார்கள. இச்சம்பவத்தை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் தங்கியிருக்கும் நபர்களுக்கு உடைகள் மற்றும் இனிப்பு வகைகளை சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட மானாமதுரை கிளை செயலாளரும், இந்து மஸ்தூர் சபா மாவட்ட செயலாளருமான அ.சண்முகவேலு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாதா அமிர்தானந்தமயி சீடர் சுவாமி அமிர்தா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம்…
இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம் மாநில தலைவர் வழுக்கு பாறை பாலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புன்னதாக இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்ற பேரணி துவங்கியது, இப்பேரணியை மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அப்பேரணியானது சாலை தெரு மதுரை ரோடு, வழியாக கூட்டம் நடைபெறும் மஹாலில் நிறைவடைந்தது. அப்பேரணியில் வந்த விவசாயிகள் வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு உயிர் காப்பீடு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இந்திய நாட்டில் பெட்ரோலியம் மற்றும் மினரல்ஸ் பைப் லைன் சட்டம் 1962ஐ ரத்து செய்ய வேண்டும் , இந்திய டெலிகிராபி சட்டம் 1885ல் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்திட உள்ள வழித்தட உரிமையை ரத்து செய்ய வேண்டும், போலி உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலத்தில் வந்தனர்.
பேரணியின் நிறைவாக திருமண மஹாலில் நடந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் சண்முகம் வரவேற்று பேசினார், மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார், கோவை நன்னறி கழகம் தலைவர் இய கோகா சுப்ரமணியன் சிறப்புறை யாற்றினார். மாநில செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
இப்பேரணியிலும், கூட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர், இராமநாதபுரம் ஏ டிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் இராமநாதபுரம் நடராஜன் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளையொட்டி இரத்த தான முகாம்..
செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் E. M. அப்துல்லா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ் (YRC) நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தேவிபட்டினம் ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியோர் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 05/07/2018 அன்று செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கமாக யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் கே.. ராஜமகேந்திரன் வரவேற்றார். பின்னர் செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளார் ராஜாத்தி அப்துல்லா தலைமையில் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா மற்றும் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் ஆகியோரின் முன்னிலையில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம். சாலிகு ரத்த தான முகாமினை துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் டாக்டர் பி. மகேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் மாணவர்கள் 40 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.
மேலும் முதல்வர் முனைவர் எஸ்.வி. எஸ். அமானுல்லா ஹமீது, ரெட் கிராஸ் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம், ரெட் கிராஸ் புரவலர் எம். தேவி உலகராஜ் ஆகியோர் ரத்த தானம் செய்த மாணவர்களை பாராட்டிப் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் எ. வள்ளி விநாயகம் நன்றியுரையாற்றினார்.
ரெட் கிராஸ் ரத்த தான முகாம் அமைப்பாளர் எஸ். அய்யப்பன் நிர்வாக அலுவலர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சபியுல்லாஹ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.