10
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆலோசனை கூட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வர மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டம் என்.ராமசாமி தலைமையிலும், கே.ஆர்.சுரேஷ் நகர் செயலாளர் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், தொகுதி பொருப்பாளர் இராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் மற்றும் மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கவிதா சசிக்குமார், மண்டப ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், இராமநாதபுரம் நகர்செயலாளர் ரஞ்சித்குமார், கீழக்கரை நகர் நிர்வாகிகள் கே.ஜி.பாலமுருகன், முனீஸ்வரன், ஜீவா, விஜயகுமார், சுலைமான், அன்பழகன், சம்பத், பச்சபிள்ளை(எ) அப்துல் ரஹ்மான் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.