Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மீண்டும் திறக்கப்பட் முடிதிருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள்…

மீண்டும் திறக்கப்பட் முடிதிருத்தகம் மற்றும் அழகு நிலையங்கள்…

by ஆசிரியர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முடி திருத்தும் நிலையம், அழகு நிலையங்கள் செயல்பட மட்டும் மத்திய மாநில அரசுகள் தடை விதித்த கடந்த 19ஆம் தேதி கிராமப்புறங்களில் உள்ள முடித்துவிட்டு நிலையங்கள் மட்டும் போதிய இடைவெளி விட்டு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் மற்றும் அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடிய துணிகளை வைத்து முடி திருத்தம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முடிதிருத்தும் நிலையங்கள் அழகு நிலையங்கள் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சில விதிமுறைகள் பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது, அதனபடி ஏசி பயன்படுத்தக்கூடாது, ஒருவர் முடி திருத்த வேலை முடிந்த பிறகு அந்த இடத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்,  சமூக இடைவெளி பின்பற்றவேண்டும், ஒருவருக்கு மேல் கடையில் இருக்கக்கூடாது, முடித் திருத்தம் செய்பவர் கட்டாயம் முக கவசம் மற்றும் கை உறை அணிந்து இருக்க வேண்டும், வரும் வாடிக்கையாளருக்கு கட்டாயமாக கிருமிநாசினி கையில் கொடுக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடிதிருத்தும் நிலையங்கள் மதுரை மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டது.

இது சம்பந்தமாக முடிதிருத்தும் கடை உரிமையாளர்  முனியாண்டி கூறும்பொழுது, “தமிழக அரசு தனது 60 நாட்களுக்கு பிறகு முடித்துவிட்டு நிலையங்களை திறக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் தமிழக அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே நாங்கள் கடைகள் நடத்துவோம், அதேபோல் வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக முக கவசம் அணிந்து அனுமதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்ட பிறகு கடைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும் காய்ச்சல் அறிகுறியுள்ள நபர்கள் வந்தால் நாங்கள் முடி திருத்தம் செய்வது இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் சமூக இடைவெளிவிட்டு தொழிலை மேற்கொள்ளும் எனவும் கூறினார் நீண்ட நாட்களுக்கு பிறகு கடையை திறந்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதித்து இருந்த இத்தனை நாட்கள் ஒளிவீசும் எனவும் கடையை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!