கோவில்பட்டி அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பரசுராமபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி செல்லத்தாய்(45). இவருக்கும், குருமலை வி.பி.சிங் நகரைச் சேர்ந்த கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த கருப்பசாமி மகன் சுமை தூக்கும் தொழிலாளி மாரிராஜ்(24) பரசுராமபுரத்தில் உள்ள செல்லத்தாய் வீட்டிற்கு புதன்கிழமை சென்று அவரை அவதூறாகப் பேசி, கொல்ல முயன்றாராம். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொப்பம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளி மாரிராஜை கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்:- அஹமது
You must be logged in to post a comment.