இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக விவசாய விலை பொருளுக்கு விலை நியமனமும், டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விவசாய சங்க தலைவர் முத்துராமு, சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் முருகன், தாலுகா குழு உறுப்பினர்கள் குருசாமி, தர்மலிங்கம், அரியராஜ், முத்துமணி, அரசு போக்குவரத்து கழக சிஐடியு நிர்வாகி திருமலை, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அங்குதன், தலைவர் சண்முகையா, பொருளாளர் முருகேசன், வீரசெம்பன், தர்மலிங்கம், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Daily Archives
March 12, 2024
இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..
by Askar
written by Askar
இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..
இதுகுறித்து போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000 க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை நாளை முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் ) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐச் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR -ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்களும்! அதனால் ஏற்பட்ட தாக்கங்களும்..
1996ல் – சட்டப்பேரவை தேர்தலில் திமுக-த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு.
1996ல் – திமுகவில் இணைந்தார்.
1998ல் – திமுகவின் சார்பில் நெல்லை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2001ல் – திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
2006ல் – மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைவு.
2007ல் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடக்கம்.
2011ல் – அதிமுக கூட்டணி இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி.
2016ல் – அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
2021ல் – ம.நீ.ம. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் தோல்வி.
2024ல் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் போதைப்பொருள் புழக்கம் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக அரசுக்கு எதிராக நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் போதை பொருள் புழக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்த காரணமாக உள்ள திமுக அரசை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினர். போதைப் பொருட்கள் முழக்கம் அதிகரித்துள்ளதால் முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தற்போது தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் போதைப் பொருள் புழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் போதைப்பொருட்கள் கடத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றதால் கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து பணிமனை வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திமுக அரசை கண்டித்தும், போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் தற்போது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சாதாரண ஆளாக இருந்த ஜாபர் சாதிக் 20ஆயிரம் கோடிக்கு அதிபராக மாறி உள்ளதற்கு திமுக அரசும் முதல்வர் ஸ்டாலின் குடும்பமே காரணம். தற்போது தமிழக காவல்துறை செயல் இழந்து கிடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் பரிமாணம் செய்யப்பட்டு வருகிறது. தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி இடம் ஒரு கோடி கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள் என்றால் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்க அல்வா கொடுத்துள்ளார்கள் ஜாபர் சாதிக்கிறே அல்வா கொடுக்கும் நிலைதான் திமுகவில் உள்ளது எனவே ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கையாக போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக முதல்வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் டி ஆர் தொண்டு நிறுவனம் சார்பில் எல் அண்ட் டி பைனான்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கணவன் இழந்த பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் தின விழாவை கொண்டாடினார்கள் இந்த டிஜிட்டல் சக்தி மூலம் அனைத்து கிராமப்புற பெண்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது ஆதார் கார்டு பிறப்புச் சான்றிதழ் இறப்பு சான்றிதழ் மற்றும் பண பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளை கற்றுக் கொடுப்பதோடு அதன் மூலம் வருவாயீட்ட பயிற்சி வழங்கி பெண்களை சமுதாயத்தில் முன்னிறுத்த இலவசமாக பயிற்சி அளிக்கிறது இதில் வாடிப்பட்டி தாலுக்கா அளவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்புகள் செய்தனர் இதில் சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் A.முத்துமணி மற்றும் டிஜிட்டல் சகி மேலாளர் மற்றும் டிஜிட்டல் சகி உறுப்பினர்கள் மற்றும் இதில் பயனடையும் கிராமப்புற பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை:
by Baker BAker
written by Baker BAker
அலங்காநல்லூர்,மார்ச்:12.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, மண்டல பூஜை விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும், அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, அம்மச்சி அம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் பெரியார் நகர், கரும்பு கொள்ளையில் இந்திரா என்பவர் மகனுடன் வசித்துவருகிறார். இவர் வீட்டில் நேற்றிரவு சமையல் அறை மேல் தட்டில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்ட மேல்தட்டை எட்டி பார்த்தபோது 3 மரநாய் குட்டிகள் இருந்ததை கண்டதும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து மரநாய்களை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்: எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷனும்..?
மக்களவைத் தேர்த்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என கூறப்படும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
பாஜக-வால் 2019-ல் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, பார்சி, பௌத்தம், சமணம், கிறித்தவம் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் தங்கியிருந்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பா.ஜ.க அரசு இதனை நடைமுறைக்கு கொண்டுவராமலிருந்து. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் எனக் கூறப்படும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் மற்றும் தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் மீது மக்கள் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், சி.ஏ.ஏ-வை பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்தியதற்கும், அதிலிருக்கும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ-வுக்கான விதிகளை அறிவிக்க மோடி அரசு 4 ஆண்டுகள் மூன்று மாதங்கள் எடுத்திருக்கிறது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் விதிகளை வெளியிடுவதன் நோக்கம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் பா.ஜ.க ஆதாயம் அடைவது. மேலும், தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியிருக்கும் நேரத்தில் அதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி இது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், “மீண்டும் குடி நிம்மதி பறிப்புச் சட்டம். தேசத்தின் அமைதியைப் பறிக்கும் சட்டம். தேர்தல் நேரத்தில் மக்களைப் பிரிக்கத் திட்டம். ஸ்டேட் வங்கியை தோலுரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பும் மகா மோசமான அரசியல் திட்டம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
மேலும், பா.ஜ.க அரசு இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பு இத்தகைய தூண்டுதல் தேவையற்றது. இதை ஒருபோதும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதில், மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் ஏதேனும் இருந்தால் நிச்சயம் எதிர்ப்போம்.
ஏன் இது மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்படுகிறது எதற்காக ரமலான் தொடங்குவதற்கு முன்பு கொண்டுவரப்படுகிறது விதிகள் எப்படி வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கக் காத்திருக்கிறோம். ஒருவேளை அதில் ஏதேனும் பாகுபாடு இருந்தால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்..
மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது
ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் CAA சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம்.
இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..
by Askar
written by Askar
அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பழனி நகர மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் தன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பழனி நகர அதிமுக கழகம் சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவலங்களை கோஷங்களாக எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அதேபோல நெய்க்காரப்பட்டி பேரூர் அதிமுக கழக செயலாளர் விஜய் சேகர் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் முன்னாள் எம்பி குமாரசாமி , முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் அசோக், மீனவரணி மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் எம்ஜிஆர் கருப்புசாமி ,அன்வர்தின் பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் சென்னை எப்சிபா அறக்கட்டளையின் இணைந்து நடத்திய தீமையை எதிர்த்து போராடு என்கிற ஓவியப் போட்டியின் பரிசளிப்பு விழா பிஷப் சார்ஜன்ட் அன்பில் சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் வந்துள்ள அனைவரையும் முனைவர் ஜெயராஜ் (நிறுவனர் ஹெப்சிபா அறக்கட்டளை) வரவேற்று நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். ஆமோஸ் தலைமையுரை வழங்கினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை வகித்தார். தொடர்ந்து முதன்மை பொறியாளர் (ஓய்வு) சண்முகசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.
தீமையை எதிர்த்து போராடு என்கிற தலைப்பு குறித்து மாணவி கார்த்திகா மற்றும் மாணவர் ஜெபி பேசினர். தொடர்ந்து அதே தலைப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அனு, இமானுவேல் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கவிஞர் சுப்பையா வாழ்த்துரை வழங்கினார். பிஷப் சார்ஜன்ட் அன்பின் இல்லம் கதிர்வேல் நன்றியுரை ஆற்றினார். மாணவர்களின் ஓவிய படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு..
by Askar
written by Askar
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..
by Askar
written by Askar
மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த மமகவிற்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை ஒதுக்கினார். தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதியில் வெற்றிவாகை சூடி, 9,203 வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கத்தில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மமக போட்டியிட்ட மூன்று தொகுதிகளின் மொத்தம் 42.43% விழுக்காடு வாக்குகளை பெற்றோம்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 23 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், பாமக 3 இடங்களையும் பெற்று திமுக கூட்டணி மொத்தம் 31 இடங்களை மட்டுமே வென்று எதிர்கட்சி வாய்ப்பையும் இழந்தது, 41 இடங்களை வென்ற விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
அதன்பின் 2013-ல் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வந்தது, 32 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்ய முடியும், இப்படியான சூழலில் திமுகவின் கூட்டணி கட்சிகளின் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31 மட்டுமே ஆகவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கூட பெற முடியாத சூழலில் அன்றைய திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மமகவின் இரு எம்.எல்.ஏக்கள் வாக்களித்து திமுகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கிடைக்க உதவினார்கள், அதில் வெற்றி பெற்றவர் தான் மு.க.கனிமொழி அவர்கள் என்பதையும் மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன், அன்று முதல் இன்று வரை திமுகவின் கூட்டணியில் தான் தொடர்கிறது மமக.
மக்கள் நலக் கூட்டணியும் – மமகவின் நிலைப்பாடும்:
2015 மற்றும் 2016 காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளுக்கு ஒருமித்த குரலெழுப்ப தேமுதிக, இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமாக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சேர்ந்து “மக்கள் நலக் கூட்டணி” என்ற பெயரில் மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர் ஆர்பாட்டம், போராட்டம் என ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் 2016-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது, இந்த மக்கள் நலக் கூட்டணியே தேர்தலிலும் தொடர்வோம் என முடிவெடுத்த போது அது தமிழகத்தின் எதிர்கால நலனை பாதிக்கும், வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு திமுக கூட்டணியிலே மமக இடம் பெற்றுது. 5 தொகுதிகளை பெற்று 4 தொகுதிகளிலே களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த தேர்தலில் அதிமுக 134 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 98 இடங்களை கைப்பற்றியது, இந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு விகிதம் 41 விழுக்காடு, திமுக பெற்ற வாக்கு விகிதம் 40 விழுக்காடு, மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்கு விகிதம் 6.1 விழுக்காடு மொத்ததில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்பதற்கான விடை இதில் உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
2019 மக்களவை தேர்தலும் மமகவின் நிலைப்பாடும்:
2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என நம்பிக்கையில் இருந்த மமகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது திமுக தலைமை, அடுத்தமுறை உங்களுக்கு தொகுதி ஒதுக்குகிறோம் என்றது திமுகவின் தலைமை. இந்நிலையில் மமகவின் தலைமை தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு திறமையான, வலிமையான, ஆரோக்கியமான முடிவாக, “நம்முடைய குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நாட்டை நாசமாக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக கூட்டணியில் இடமளிக்கா விட்டாலும் பரவாயில்லை என திமுக கூட்டணிக்கு மமக ஆதரவளித்து, 40 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றியது, இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40-க்கு 39 தொகுதிகளை வென்றது, எந்த எதிர்பார்ப்புகள் இன்றி 40 மக்களவை தொகுதிகளிலும் மமகவினர் களப்பணியாற்றினார்கள் என்பதற்கு தேர்தல் முடிவே பதில் சொல்லியது.
2021 சட்டப்பேரவை தேர்தல்:
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக இருந்த பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளை மமகவிற்கு ஒதுக்கியது திமுக தலைமை, இருந்த போதிலும் சற்றும் தளராமல் களப்பணியாற்றி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது மமக.
இச்சூழலில் 2024 மக்களவை தேர்தலில் மமகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் திமுக தலைமை இந்த முறையும் தொகுதிகள் ஒதுக்காமல் மௌனம் சாதிப்பது திமுக கடைபிடித்து வரும் சமூகநீதிக்கு எதிரானதாகவே பார்க்கிறோம்.
மமகவிற்கு மக்களவை தேர்தலில் தொகுதிகள் ஒதுக்குவதை மமகவின் தொண்டர்களையும் தாண்டி ஒட்டுமொத்த சமுதாயமும் எதிர்பார்த்து வரும் நிலையில் திமுக தலைமையின் மௌனம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஏமாற்றுவதாகவே கருதுகிறோம்.
சமூகநீதி என்பது அனைவருக்கும் சம நீதி வழங்குவதே ஆகும், மேடைதோறும் சமூகநீதி கொள்கையை முழங்கி வரும் திமுகவிற்கு இதுபோன்ற தொகுதி பங்கீட்டில் சமூகநீதியை பேண எது தடுக்கிறது? முஸ்லிம் சமுதாயத்தினர் பிரதிநிதித்துவம் பெற கூடாது என ஏதேனும் நெருக்கடிகள் திமுகவிற்கு இருக்கிறதா என்கின்ற கேள்விகளும் எழுகிறது, மேலும் இதுபோன்ற தேர்தல் நேரங்களில் திமுக மௌனம் காப்பது பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் கடந்தகால தேர்தல் முடிவுகள் காட்டியது என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் பலத்த தொண்டர் படை வைத்திருக்கும் மமகவிற்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்க தயங்கும் திமுக தலைமை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எதன் அடிப்படையில் தொகுதிகள் பங்கிடப்பட்டது என்பதையும் விளக்க வேண்டுமென கோருகிறோம், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் அம்மையார் ஜெயலலிதா ஆகியோருடன் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்த மமகவின் தலைமைக்கு தற்போதைய அரசியல் சூழல் ஒன்றும் பெரிதல்ல, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டாலும், தயவுகூர்ந்து கட்சியின் நலனையும் கருத்தில் கொண்டு மார்ச்-13 திருச்சியில் நடைபெறும் தலைமை செயற்குழுவில் மமகவின் தலைமை நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டுமென தொண்டர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
-பீ.எம்.ரிஜால்,
வத்தலக்குண்டு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களைவை தேர்தலில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” நாகை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டி..
by Askar
written by Askar
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விதி மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி !
by Baker BAker
written by Baker BAker
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் இன்று குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ரிங் ரோடு வரை அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் , நம்பர் பிளேட் மாற்றம் செய்துள்ள வாகனங்கள் , குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தக்க அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகள் நீக்கம் செய்யப்பட்டது. வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக ஒளி உமிழும் விளக்குகள் அகற்றப்பட்டு விதிகளை மீறி செயல்பட்ட அனைவருக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டது போக்குவரத்து உதவி ஆணையாளர் செல்வின் கூறுகையில் விதிமீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதமும் மற்றும் அதிவேகமாக மற்றும் மது போதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது உரிமம் ரத்து மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் இனி இது போன்ற வாகன சோதனைகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் எனவும் என விடுத்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களவை தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மக்களவை தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி..
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன் விளைவாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் கையெழுத்தானது.
அந்த வகையில் ஏற்கனவே ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விசிக கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் எந்தெந்த தொகுதி என்பது முடிவு செய்யப்படவில்லை. அதே போல், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதியும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டன. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று இரண்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில், ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். இந்நிலையில், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
1977-ல் முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது திமுக கூட்டணியில் ஏ.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார். பின்பு, 1989 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்.வரதராஜன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.பாண்டி போட்டியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் 4-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
கடந்த முறை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த முறை மீண்டும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சு.வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உதுமானிய பேரரசு -12
( கி.பி 1299-1922)
பேரரசர் முராத் பொறுமையாக நடந்துவந்த போது திடீரென செர்பிய வீரன் ஒருவன் வாளால் பலமாக மன்னரை தலையில் அடித்தான்.
சாதாரண உடையில் இருந்த மன்னர் கடுமையான அடியால் உடனடியாக மயக்கமுற்றார். மன்னர் முராத்தை மாளிகைக்கு எடுத்து சென்று மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது.
செர்பிய வீரனை கைதுசெய்து
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
நீதிமன்றத்தில் செர்பிய வீரன் தனது நாடு தொடர்ந்து தோற்று வருவதாலும்,
உஸ்மானிய பேரரசின் விரிவாக்கமும் பிடிக்காததால்,
மன்னரை கொலை செய்தால் உஸ்மானிய அரசை வீழ்த்தி விடலாம் என்று எண்ணி மன்னரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறினான்.
தலைமை நீதிபதியாக அமர்ந்திருந்த உஸ்தாத் அஹமது
அவர்கள் எங்கள் இஸ்லாம் மார்க்கம் குற்றத்தை ஒப்புக்கொண்டு
தவறுக்காக வருந்தி மனம் மாறினால் குற்றவாளிகளை மன்னிக்கச்
சொல்கிறது.
போர்க்கைதியான உங்களுக்கு தன் கையாலேயே உணவு,உடை ,
மருந்துகளை வழங்கிய மன்னரை கொல்ல முயற்சித்தது நியாயமா?என அவனிடம் நீதிபதி கேட்டார்.
நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில் மன்னர் முராத் தன்னை தாக்கியவனை தான் மன்னித்து விட்டதாகவும்,
ஆகவே நீதிமன்றமும் அவனுக்கு தண்டனை தராமல் அவனை மன்னித்து விட பரிந்துரை செய்து இருந்தார்.
மன்னரின் அந்த கடிதத்தை படித்த நீதிபதியின் கண்களிலும் மன்னரின் கருணையை நினைத்து கண்ணீர் வழிந்தது.
மன்னரின் கடிதத்தை
நீதிமன்றத்தில் நீதிபதி வாசித்தபோது,
அந்த செர்பிய வீரர் தேம்பி தேம்பி அழுதார்.
ஒரு குற்றவாளியை மன்னிக்கிற அளவு மனதை பண்படுத்தி இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய நினைக்கிறேன்.
நீதிமன்றமும் என்னை மன்னித்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று விண்ணப்பிக்க
நீதிபதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அவர் உடனடியாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து ஐரோப்பா முழுவதும் மார்க்க பிரச்சாரகராக பணியாற்றினார்.
சில நாட்கள் மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் பயனளிக்காமல் பேரரசர் முராத் மரணமடைந்தார்.
இளவரசர் பயாசித் கி.பி 1381 ஆம்ஆண்டில் உடனடியாக மன்னராக பதவியேற்றார்.
பயாசித்தின் தம்பி யாகூப் சலபி பயாசித்தைவிட அறிவாளியாகவும்,
வீரராகவும் திகழ்ந்தாலும் மூத்தவர் என்ற அடிப்படையில் பயாசித் இளவரசராக பதவியேற்று பிறகு மன்னரானார்.
யாகூப் சலபியும் மன்னராக வரவேண்டும் என்று சதிகளை ஆரம்பித்தார்.
மன்னர் பயாசித் அவர்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டியது.
உடனடியாக மார்க்க அறிஞர்களை ஒன்று கூட்டி இதற்கு மார்க்க தீர்ப்பை கோரினார்.
குழப்பங்களுக்கு மரணதண்டனை தான் என்று கூறிய
மார்க்க அறிஞர்கள் கூற்றுப்படி,
அரசில் குழப்பங்களை ஏற்படுத்தியதால்
யூசுப் சலபிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கராமானிலிருந்து
அலாவுதீன் மீண்டும் படையெடுத்து வந்தார்.
அவரை ஓட ஓட விரட்டினார் மன்னர் பயாசித்.
பயாசித் அவர்களின் ஆட்சி சிறப்பாக இருந்தது.
அமைதியான சூழலால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
ஐரோப்பிய அரசர்கள் மீண்டும் சிலுவை யுத்தங்களை ஆரம்பித்தனர்.
இருப்பினும் உஸ்மானிய படைகள் அவர்களை அடித்து துவம்சம் செய்தன.
உஸ்மானியர்களின்
வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது.
முதல் முறையாக
உஸ்மானிய பேரரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.03.2024 அன்று புதன் கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 0200 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில், Genearth Services, Tvs Training Services உட்பட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 04633-213179 (அல்லது) 6381552624 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும்; நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் இணைந்து பாளையங்கோட்டை வ. உ .சி .மைதானம் பின்புறம் உள்ள ஐயம்பெருமாள் அரங்கில் கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவியரங்கமும், உ.வே.சா.விருது பெற்ற எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் முத்தமிழின் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவருடைய நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது பெற்ற எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனுக்கு பாராட்டு நிகழ்வுக்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் முனைவர் இரா. முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா. நாதன் முன்னிலை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா வரவேற்றுப் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழு உறுப்பினர் சுப.சீதாராமன், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கத்தினைச் சார்ந்த தாமிரபரணி இலக்கிய மாமன்ற அமைப்பாளர் கவிஞர் வ. பாமணி, திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ந.ஜெயபாலன், பாளையங்கோட்டை அரும்புகள் அறக்கட்டளை நிறுவுநர் முனைவர் இராஜ.மதிவாணன், சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழாசிரியர் கழகத் தலைவர் சங்கரன்கோவில் சங்கர்ராம், நெல்லை திருவள்ளுவர் கழக நிறுவுநர் சித்த மருத்துவர் மு.பரமசிவன், தூத்துக்குடி திருக்குறள் மைய அமைப்பாளர் மோ.அன்பழகன், கழுகுமலை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் பொன் பாண்டியன், முருகன், கன்னியாகுமரி பாரதியார் சங்க செயலாளர் முனைவர் கே.எல்.எஸ்.கீதா, மதுரை தமிழக கலை சங்கம தலைவர் திண்டுக்கல் அ.ஷாஜஹான், பாளையங்கோட்டை திருக்குறள் தகவல் மையத் தலைவர் முனைவர் வை.இராமசாமி உட்பட பல தமிழ்ச் சங்கங்களின் அமைப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்கள்.
நிலைத்த புகழோடு நீடு வாழ்கிறார் என்ற தலைப்பிலான கலைஞர் தமிழ்-100 கவியரங்கில் கவிஞர் மு.முத்துக்குமார், முனைவர் சரவணக்குமார், சிறுமி வே. காயத்ரி, காயல் அருள், உமா அரிராஜலு, இளங்கவிஞர் சூடாமணி, சுப்பிரமணியன், ஆறுமுகம் உள்பட பலர் கவிதை வாசித்தனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக அதன் நிறுவுநர் கவிஞர் பேரா நினைவுப் பரிசாக கலைஞரின் பேனாவுடன் பொன்னெழுத்துகள் பொறிக்கப்பட்ட ஷீல்டினை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் பா. இராமகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். கவிஞர் மு.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வீராசமுத்திரத்தில் 7 லட்சம் மதிப்பில் தார் சாலை; மாவட்ட கவுன்சிலர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் நிதி பரிந்துரையின் கீழ் மாலிக் நகர் பஸ் நிறுத்தம் முதல் வீராசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறக்கப்பட்டது. 2023-2024 மாநில நிதி குழு மானியம் மூலம், வீரா சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவி ஜீனத் பர்வீன் யாகூப், துணைத்தலைவர் நாகூர் மைதீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திமுக மாவட்ட நிர்வாகி கோதர் மைதீன், சம்பன்குளம் கவுன்சிலர் ஜஹாங்கீர், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அஹமது ஈஸாக், திமுக இளைஞரணி நிர்வாகி சதாம், வீராசமுத்திரம் ஜமாத் தலைவர் ஹாஜாமைதீன், செயலாளர் ஹயாத், கடையம் ஒன்றிய ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜப்பார் ஆலிம், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர், வீரா சமுத்திரம் வார்டு உறுப்பினர் ரமேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், தார் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பிரதிநிதி யாகூப் வரவேற்றார். ஒப்பந்தக்காரர் தங்கராஜ் நன்றி கூறினார். மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம், திமுக விவசாய அணி சிங்ககுட்டி, முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.