ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை 10 கோடியில் புதிய கட்டிடம் , புதிய மீன் மார்க்கெட் அறிவு சாரா மையம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்தார். முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர் .இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் கீழக்கரை ஆணையர் செல்வராஜ் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா பொறியாளர் அருள் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் அபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்தீக் சப்ராஸ் நவாஸ் . மீரான் அலி சுஹைது ஃபயாஸ் நசுருதீன் பாதுஷா சக்கினா பேகம் ராணி திமுக நகர் செயலாளர் பஷீர் துணைச் செயலாளர் ஜெய்னுதீன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Category:
செய்திகள்
மதுரை மாநகர காவலர்களுக்கான பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..!
by syed abdulla
written by syed abdulla
மதுரை மாநகர காவலர்களுக்கான பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..!
.
2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன்,IPS., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 06.01.2024 மற்றும் 07.01.2024 ஆகிய இரண்டு நாட்களாக மதுரை மாநகர காவல்துறை சார்பில் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
.
இதில் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஓட்டப்போட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றது. மேலும் சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப் போட்டி, சைக்கிள் போட்டி, கட்டுரை போட்டி, வினா விடை, ஓவியப் போட்டி, நீளம் தாண்டுதல், துப்பாக்கி சுடுதல், சிலம்பம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினார்கள். இந்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி சுற்று, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.1.2024 அன்று நடைபெற உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
by syed abdulla
written by syed abdulla
சாலையை சீரமைக்கும் காவலர்கள்! மெத்தன போக்கில் ராஜபாளையம் நகராட்சி.! விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம் ஏற்ப்பட்டது இந்த பள்ளத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் இராஜபாளையம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியாக காணப்படுகிறது நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாததால் பொதுமக்கள் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழந்து கை, கால் உடைந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது பல அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், நடத்தினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைதான் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது நகராட்சியால் இராஜபாளையத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்க்காகத்தான் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் ஆனால் இராஜபாளையத்தில் மட்டும் போக்குவரத்து காவலர்கள் சாலையில் உள்ள குண்டும் குழியை நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்
சம்மந்தபட்ட நகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து காவலர்களை அவர்கள் பணியை சிறப்பாக செய்ய சம்மந்தபட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..
by syed abdulla
written by syed abdulla
அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..
மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11 ம் தேதி பகல் 12 மணி வரை http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொங்கல் போனஸ் வருமா வராதா.? காத்துக் கிடக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்! கவனிக்குமா அரசு..?
by Askar
written by Askar
S.செந்தில்குமார்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
மாநில ஒருங்கிணைப்பாளர் அறிக்கை :
தமிழக அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
பொங்கல் போனஸ் தங்களுக்கும் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழக அரசு பொங்கல் போனஸ் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதிநேர பணியாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.
ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
12 ஆண்டாக பணிபுரிகின்றவர்களுக்கு போனஸ் வழங்காமல் மறுத்துவருவது இந்த பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே நடக்கிறது.
அப்படி இருந்தும் ஒரு கோரிக்கை தொடர்ந்து எழும்போது நியாயமாக போனஸ் வழங்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வு.
இது சம்பந்தமாக பள்ளிக்கல்வி அமைச்சர் இந்த கோரிக்கை குறித்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என உறுதிஅளித்து உடனே அறிவிக்கவேண்டும்.
மேலும், ₹2500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் 4-10-2023 அன்று வெளியிட்ட அறிவிப்பையும் உடனே செயல்படுத்த வேண்டும்.
அதுபோல் தமிழக முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி கருணையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
முதல்வர், தலைமைச் செயலாளருக்கும் கோரிக்கை அனுப்பி உள்ளோம்.
பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, பணிநிரந்தரம் கோரிக்கைக்கு நல்ல செய்தி வரும் என காத்துள்ளோம்.
S.செந்தில்குமார்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்
செல் : 9487257203
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை… இருவர் கைது..
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்தகாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், கீழக்கரை நகராட்சி மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள், உபகரணங்கள் சப்ளை செய்த பணிகள் மேற்கொண்டிருந்தார்.
இது சம்பந்தமாக நகராட்சி ஆணையரை அணுகி தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.62 ஆயிரத்தை விடுவிக்குமாறு கேட்டார்.. இதையடுத்து இத்தொகைக்கான காசோலை விடுவிக்க இளநிலை உதவியாளர் உதயக்குமார், கணக்கர் சரவணன் ஆகியோரிடம் நகராட்சி ஆணையர் செல்வராஜ் அறிவுறுத்தினார். இதன்படி ஒப்பந்ததாரர் முரளி உதயக்குமாரை பலமுறை நேரில் அணுகி முறையிட்டார். ஆனால் தனக்கும் கணக்கர் சரவணனையும் கவனித்தால் மட்டுமே காசோலை தருவதாக உதயக்குமார் பிடிவாதம் காட்டினார். ரூ.2000 கொடுத்துவிட்டு காசோலையை வாங்கிச் செல்லுமாறு உதயக்குமார் கூறினார். இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் துறையினருக்கு புகார் அளித்தார். இதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்களை முரளியிடம், உதயக்குமார் அறிவுறுத்தல் படி சரவணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கினார் அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக உதயக்குமார், சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குரு வழிபாடே சனாதன தர்மம்! ஆன்மீக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு..
by syed abdulla
written by syed abdulla
குரு வழிபாடே சனாதன தர்மம்! ஆன்மீக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு..
குரு வழிபாடே சனாதன தர்மம் என்று ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் முப்பதாவது ஆண்டு ஆராதனை வைபவம் மதுரை எஸ். எஸ். காலனி பிராமண கல்யாண மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்கும் நாம சங்கீர்த்தன கலைஞர் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி முதல்வர் மிருதங்க வித்வான் டாக்டர் தியாகராஜன், ஆன்மிக பேச்சாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு ஸ்ரீ மகா பெரியவா விருதினை தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார். விழாவில் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் நடமாடும் தெய்வம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. ஹிந்து சமயத்தில் இறை வழிபாட்டை விட குரு வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது மரபாகும். காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர் வாழ்நாள் எல்லாம் பாரதம் முழுவதும் நடந்து சென்று தர்மத்தை நிலைநாட்டினார். அவரை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிவதோடு எந்த சூழ்நிலை இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவரின் பெயரில் மதுரையில் நடைபெற்று வரும் அனுஷத்தின் அனுகிரகம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் அந்த சிறிய பணியினை செய்து வருகிறது. நாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி அரிசியை ஏழை எளிய மக்களுக்காக வழங்க வேண்டும் என்ற திருமூலரின் வழி நின்று செயல்படுத்தி ஸ்ரீ மகா பெரியவர் அருளினார். அதுவே பிடியரிசி திட்டம் என புகழ்பெற்று விளங்குகிறது. மகான்கள் நடமாடும் தெய்வங்களாக விளங்கி வருகிறார்கள். இந்து சமயத்தில் எல்லா கடவுள்களையும் குருவாகவே வழிபட்டு வருகிறோம். ஒரு தலத்திற்கு சென்றால் அங்கு ஒரு இரவு தங்கி விடியற்காலையில் அங்குள்ள திருக்குளத்தில் நீராடி வழிபாடு செய்வதின் மூலம் இறைவனை குருநாதராக வருகிறார் என்பார் தாயு மானவர். தற்போது பல திருத்தலங்களில் புனித தீர்த்தங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதும் அதன் பெருமையை நாம் உணராமல் இருப்பதும் வேதனைக்கு உரியதாகும். இறைவனே குருவடிவில் நமக்காக மனித உடல் தாங்கி வந்து வழிகாட்டி நம்மை நெறிப்படுத்துவதால் அவர்களை நடமாடும் தெய்வம் என்று அழைத்து மகிழ்கிறோம். மகான்கள், மனிதர்களுக்கு செய்யும் சேவையே மகேஸ்வரனுக்கு செய்யும் சேவையாக நமக்கு சொல்லித் தருகிறார்கள். நாமும் மனித வடிவில் இருக்கும் குருநாதர்களை வழிபாடு செய்து மனித குலத்திற்கு சேவை செய்து சமுதாயத்தை மேம்படுத்துவோம். இவ்வாறு ஆன்மீக பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார் அதனை தொடர்ந்து மாலையில் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இராஜராஜசோழன் சிலம்பாட்ட குழுவினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடத்தப்பட்டது.,இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தேனி, திருச்சி, ஓசூர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் 300க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.,6 முதல் 8 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 9 முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 13 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 19 வயதுக்கும் மேற்பட்டோர் 5 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசாக 7 அடி உயர கோப்பை மற்றும் சான்றிதழ்களை கமுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், இரண்டாம் பரிசாக 6 அடி உயர கோப்பை மற்றும் சான்றிதழை மதுரையைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், 3வது பரிசாக 5 அடி உயர கோப்பை மற்றும் சான்றிதழை திருச்சியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் வென்றனர்.,போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது குழுக்களுக்கு கிராம மக்கள் பரிசுகளை வழங்கி கௌரவ படுத்தி பாராட்டினர்.,
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி, புதுப்பட்டி, கீரிபட்டி, சடச்சிபட்டி, நாட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உசிலம்பட்டி 58 கால்வாய் மூலம் கிடைத்த நீரின் காரணமாகவும், திருமங்கலம் பிரதான கால்வாயில் வரும் நீரின் மூலமாகவும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ளனர்.,தற்போது நெற்பயிர்கள் விலைந்து அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.,மழைநீர் வடியும் வரை அறுவடை செய்ய முடியாத நிலையும், மீண்டும் மழை வந்தால் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள் மீண்டும் முளைத்து முற்றிலும் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.,வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.,
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எம்.கல்லுப்பட்டி அய்யனார் கோவில் அணையை பராமரிப்பு செய்ய வலியுறுத்தி 2வது நாளாக கிராம மக்கள் சாலை மறியல்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது அய்யனார்கோவில் அணை., சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையின் மூலம் எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையையும், விவசாய பாசனத்திற்கும் பயனடைந்து வரும் இந்த அணையை பராமரிப்பு செய்யவும், சிதிலமடைந்து காணப்படும் மதகு பகுதியை சரி செய்ய கோரி விவசாயிகள் தொடர்ந்த அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.,இந்நிலையில் எம்.கல்லுப்பட்டி பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.இதில் அணை பராமரிப்பின்றி இருப்பதால் மழை நீர் வீணாகி வயல் வெளியில் புகுந்தது.இதனால் அணையை பராமரிப்பு செய்து சிதிலமடைந்து காணப்படும் மதகு பகுதியை சரி செய்ய கோரி எம்.கல்லுப்பட்டி கிராமமக்கள் 2வது நாளாக இன்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த எம்.கல்லுப்பட்டி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் எறியூட்டும் மையான கொட்டகை அமைப்பதற்கு எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் சுமார்100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,இந்நிலையில் இந்த கிராமத்தில் சாலை வசதி, மையான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தனர்.,மேலும் இறந்தவரின் உடலை எறியூட்டுவதற்கு மழை காலங்களில் சிறமத்திற்குள்ளாகி வருவதாகவும் எறியூட்டும் கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சூழலில்பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் உசிலம்பட்டி அதிமுக (ஒபிஎஸ் அணி) எம்எல்ஏ பி.அய்யப்பன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.,இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.,
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொடி நிதி அதிகம் வசூலித்த அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்று விநியோகம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.8 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு
தொடர்பாக 485 மனுக்கள் அளித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் நிதி அதிகம் சேகரித்த மகளிர் திட்ட உதவி அலுவலர் சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி, உதவி ஆணையர் (கலால்) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் மதுரை மண்டல தொமுச பொதுச் செயலாளர் தகவல்…
by Askar
written by Askar
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் மதுரை மண்டல தொமுச பொதுச் செயலாளர் தகவல்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒன்பதாம் தேதி முதல் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். அது தொடர்பாக எட்டாம் தேதி சோழவந்தான் தொமுச நிர்வாகிகளுடன் ஆலோசனை
செய்து பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறியதாவது:
மதுரை மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் ஒன்பதாம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனையில் தகவல் தெரிவித்து வந்தோம் என்றார். இதில், மதுரை மன்டல தலைவர் கார்த்தி சுரேஷ் ,பொருளாளர் மணிகண்டன் ,
துணை பொதுச் செயலாளர் அய்யனார், சோழவந்தான் போக்குவரத்து பணிமனை தொமுச தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜோதி ராமன், துணைத் தலைவர் சேவியர், துணைச் செயலாளர் பாலமுருகன், மேலக்கால் ராஜா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வில்லாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..
by syed abdulla
written by syed abdulla
மதுரை வில்லாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 வது வார்டு வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வருடங்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவு நீர் வீட்டின் குடியிருப்பு முன்னால் தெப்பம் போல் காட்சியளிப்பதாகவும் மற்றும் சாலை வசதி இல்லை தெருவிளக்கு வசதி இல்லை என்றும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் பலமுறை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெற்கு வாசலில் இருந்து விமானம் நிலையம் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான அனைத்து பகுதிகளும் நிறைவடைந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யாததால் சாலை அமைக்கும் பணி தாமதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து1கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை..
by syed abdulla
written by syed abdulla
இராஜபாளையத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
1கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சட்ட மன்ற உருப்பினர் தங்கபாண்டியன் பாராளுமன்ற உருப்பினர் தனுஸ் M குமார் ஆகியோர் தலைமையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி மருதுநகரில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் வாறுகால் வசதி, தென்றல் நகரில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நூலகக்கட்டிடம் திருவள்ளுவர் நகரில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டிடம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், MPK.புதுப்பட்டியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் துணைத் தலைவர் துரைகற்பகராஜ் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரமசிவம், பாலசுப்பிரமணியன் ,நூலக அலுவலர் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் தரமான சாலைகள் அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை மனு
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகரின் மிக முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான பட்டாணியப்பா பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்காமல் இருப்பதினால் அந்த பாதையை பயன்படுத்தி வரும் பொது மக்களுக்கும் பள்ளி சென்று வருகின்ற ஏராளமான மாணவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமமாக இருப்பதுடன் குண்டும் குழியுமாகவும் அந்த சாலை முழுவதிலும் மேற்பரப்பில் கிடக்கின்ற கற்களால் குழந்தைகள் முதியவர்கள் கற்களால் தடுக்கி விழுந்து காயம் அடையும் சூழலும் வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்துகளும் ஏற்படுகிறது.
மேலும் மழைக்காலங்களில் மிகப் பெரும் அளவில் நீரும் தேங்கி நின்று நடப்பது கூட பாதை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலை இருந்து வருகின்றது எனவே நகராட்சி நிர்வாகம் மிக விரைந்து பட்டாணியப்பா பகுதியில் தரமான முறையில் சாலை அமைத்திட வேண்டும் என்று கீழக்கரை நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இம்மனு நகரச் செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் மாநில துணைச் செயலாளர் பீ.முகமது இஸ்மாயில் மாவட்ட துணைச் செயலாளர் மு.நெய்னா அசாருதீன் வழிகாட்டுதலில் நகர் சிறுத்தைகள் ர. சீனி முஹம்மது காசிம், சு.ஜகுபர் மற்றும் மு.செய்யது சபீர் அலி ஆகியோர் முன்னிலையில் பட்டாணியப்பா பகுதியில் விரைந்து தரமான சாலை அமைத்திட கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை (லிங்க்) கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு அருகில் உள்ள பெட்டியில் எண்ணை (கேப்சா) பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அதன் பிறகு மின்கட்டணத்தைச் செலுத்தி விடலாம். இதன்மூலம், நுகர்வோர் மின்கட்டணத்தை எளிதாகச் செலுத்தலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கள்ள உறவுக்கு தடையாக இருந்த கனவனை, போட்டுத் தள்ளிய மனைவி சிக்கியது எப்படி.?
by syed abdulla
written by syed abdulla
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார். டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கர்ப்பிணியான பானுமதி, சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதால் வடிவேல் மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம்தேதி காலை நீண்டநேரமாகியும் வடிவேலின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது வடிவேல் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடிவேலு தலையில் பலத்த காயம் இருந்ததால் அவரது மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. யாராவது கொலை செய்து சடலத்தை தொங்கவிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். இதில் முதல் கட்டமாக வடிவேலு மனைவி பானுமதியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பானுமதிக்கும், குளித்தலை இனுங்கூரை சேர்ந்த முருகேசன் (எ) கருப்பசாமி(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் தகாத உறவாக மாறியது. இந்த சம்பவம் தெரியவரவும் பானுமதியை வடிவேல் கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய பானுமதி திட்டம் தீட்டினார். இதற்காக கூலிப்படையை சேர்ந்த சீராத்தோப்பு அருண்(34), உறையூர் காவேரிநகர் சிராஜுதீன்(23) ஆகியோருக்கு ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தனர். பின்னர் புத்தாண்டு அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த வடிவேலுவிடம் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் சென்ற கூலிப்படையினர் அருண், சிராஜுதீன் ஆகிய 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் தாக்கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த வடிவேலுவின் கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்க விட்டு சென்றுவிட்டனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கர்ப்பிணி மனைவி பானுமதி, அவரது கள்ளக்காதலன் கருப்பசாமி, கூலிப்படையை சேர்ந்த அருண், சிராஜுதீன் ஆகிய 4 பேரையும் ந கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி அவசர வழக்கு! நாளை முதல் வழக்காக எடுக்கப்படும் உயர் நீதிமன்றம்..!
by Askar
written by Askar
போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி அவசர வழக்கு! நாளை முதல் வழக்காக எடுக்கப்படும் உயர் நீதிமன்றம்..!
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் – மனுதாரர்
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு
நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம்.! -அமைச்சர் மூர்த்தி பேட்டி.
by syed abdulla
written by syed abdulla
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம்.! -அமைச்சர் மூர்த்தி பேட்டி.
தமிழர்களின் வீர விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதல் போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரையில் மேயர் இந்திரா ராணி, மாநகராட்சி மதுபாலன் ஆணையாளர், காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில்;
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து ஆலோசித்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கான முடிவெடுப்பார்கள்.
உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.
உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் மாடுகளை கொண்டு வந்து உள்ளூர் மாடுகள் என கூறுவதால் வரும் பிரச்சனை இது..
அலங்காநல்லூர் , பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்..
சிறந்த மாடுகள் மாடுபிடி வீரர்கள் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதா.? என கேட்டதற்கு முன்பு எப்படி இருந்ததோ அது போல் தான் இருக்கும் என்றார்.
மாடு பிடி வீரர்கள், காளைகள் போலியாக ஜெராக்ஸ் எடுத்து களம் இறக்கும் பிரச்சனை இந்த முறை நடக்காது, மாவட்ட ஆட்சியர் நேரடியாக முன்னின்று நடத்துவார். எந்த ஒரு தவறும் நடக்காது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்..
செய்தியாளர் ,வி ,காளமேகம்
You must be logged in to post a comment.