12
இராமநாதபுரம், ஜன.8 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு தொடர்பாக 485 மனுக்கள் அளித்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் நிதி அதிகம் சேகரித்த மகளிர் திட்ட உதவி அலுவலர் சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி, உதவி ஆணையர் (கலால்) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.