மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஏ சி டி டவர் அமைந்துள்ள அரசு வங்கியில் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் வங்கி மேலாளர் ஏடிஎம்மில் நேற்று உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார் அப்பொழுது 23 .3. 21. அன்று நள்ளிரவு சுமார் 12 .05 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் மாஸ்க் அணிந்த நிலையில் ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது அவர் முயற்சி தோல்வி அடையவே ஆட்கள் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பிவிட்டார் இதைப்பார்த்த வங்கி மேலாளர் சிசிடிவி காட்சியுடன் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்த எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.