திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கம் தொகுதிக்குட்பட்ட மேல் புழுதியூர் ,பக்கிரிபாளையம் ,அம்பேத்கர் நகர் கருமாங்குளம் ,மேல்செங்கம் அரசங்கண்ணி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார் அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து திட்டங்களையும் மக்களுக்காகவே உள்ளது. சாதனை படைக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்று வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாசலம் ,தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் கே.கே.மணி, மாவட்ட பிரதிநிதி மேல்பெண்ணாத்தூர் முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனி கண்ணு, முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி தலைவர் ரமேஷ் , மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜி ,நிக்சன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்
10
You must be logged in to post a comment.