Home செய்திகள் ஒரு கோடிக்கு தேங்காய் ஏலம்.

ஒரு கோடிக்கு தேங்காய் ஏலம்.

by mohan

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் இதுவரை பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகின்றது. இன்று (23.03.2021) செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு ஏலம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஏலத்தில் 24 விவசாயிகளின் 70864 தேங்காய்கள் 24 குவியலாக ஏலம் விடப்பட்டது.இன்று நடந்த ஏலத்தில்10 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 12.60க்கும் குறைந்த பட்சமாக ரூ 9.05 க்கும் சராசரியாக ரூ 10.03க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அனைத்து விவசாயிகளும் நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் ரூபாய் 6.37 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது. இன்றைய ஏலத்துடன் இதுவரை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ ஒரு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் திரு சீனிகுருசாமி அவர்களை 9600802823என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com