Home செய்திகள் லோடு வேன் மோதி தாய் கண் கண்முன்னே பெண் குழந்தை பலி.

மதுரை பழங்காநத்தத்தில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பெண் மீது லோடு வேன் மோதியதில் தாய்கண்முன்னேமகள்பலியானதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஜெய்ஹிந்துபுரம் வள்ளுவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் அவரது மனைவி காளிமுத்து இவர்களுக்கு மனோ மீனா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.. இந்த ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் காளிமுத்து திருப்பரங்குன்றம் மெயின் ரோடு பழங்காநத்தம் பகுதியில் பஸ் ஸ்டாப் அருகே காத்திருந்தார்.. அப்போது அந்த வழியாக சென்ற லோடு வேன் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது .இந்த விபத்தில் தாய் கண்முன்னே ஒன்றரை வயது பெண் குழந்தை மனோ மீனா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!