மதுரை மாவட்டத்தில் அவசர கால ஊர்தி108 காளவாசல் பகுதியில் வாகனம் ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது இவர்களுக்கு தங்குவதற்கு முறையான இடமில்லாமல் பைபாஸ் சாலை புதிதாய் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது பகலில் கொளுத்தும் வெயிலிலும் இரவில் கொசுக்கடி இலையும் அவதிப்பட்டு வருகிறார்கள் இவர்கள் பலமுறை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் செல்லூர் ராஜு விடவும் தங்களுக்கு இடம் ஒன்று தேவை என கோரிக்கை விடுத்தனர் இதுவரையிலும் எந்த விதமான இட வசதியும் செய்து தரப்படவில்லை இதனால் இரவு நேரங்களில் பாலத்தின் அடியில் இருப்பதால் பெண் செவிலியர்களுக்கு இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது மேலும் இரவு நேரங்களில் பாலத்தின் அடியில் வாகனத்தை நிறுத்துவதால் விபத்துக்கள் ஏதேனும் இந்த வாகனத்தின் மீது நடந்து விடுமோ என பயத்திலே இருக்கிறார்கள் பல அதிகாரிகளும் பலமுறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு விழுகிறது காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பல அரசு அலுவலகங்களிலும் இடம் கேட்கும் இந்த ஒரு இடமும் இதுவரையிலும் கிடைக்கவில்லை இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா உயிர் காக்கும் 108 அவசர கால .காளவாசல் ஊர்தி ஊழியர்களுக்கு ஓய்வெடுக்க ஒரு இடம் ஒதுக்கப்படுமா எதிர்பார்ப்புடன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.