Home செய்திகள் பணியில் இருந்த காவலாளி உட்பட இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி.

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மண்டபம் ஒன்றில்காவல் பணியில் இருந்த காவலாளி மயங்கி விழுந்து பலியானார். கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் தங்கராஜ் 56.இவர் நாற்காலியில் அமர்ந்தபடி பணியில் இருந்தபோது திடீரென்று தவறி விழுந்தார் .அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இது தொடர்பாக அவருடைய அண்ணன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்….பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்தவர் பலி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர் மயங்கி விழுந்து பலி ஸ்ரீவில்லிபுத்தூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் 65.இவர் மதுரைக்கு வந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்த வர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து மதுரை மேற்கு மேல் மதுரை கிராம உதவியாளர் சமயன் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!