இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி 6 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மாதவனூர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னையின் எப்சி கால்பந்து அணி பயிற்சியாளர் எல்.ஆர்.டைட்டஸ், ராமநாதபுரம் வேளாண் துறை உதவி இயக்குநர் எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா ஆகியோர் பரிசு வழங்கினர். தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, இயக்குநர் முனியசாமி, நிர்வாக இயக்குநர் சதீஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.