13
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2018 – 2019 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கக் கூடிய மடிக்கணினியை இன்றுவரை வழங்காததை கண்டித்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பயின்ற இப்பள்ளியில் அதுவும் அவரது சொந்த ஊரிலே உள்ள இப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்காது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது என்று மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.