திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை படைத்தது
Category:
மாவட்ட செய்திகள்
வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக வேட்பாளர் மீண்டும் போட்டி
by mohan
written by mohan
வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கு தெரியவந்ததையெடுத்துதேர்தல்ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளளது -இந் நிலையில் தேர்தல் ரத்துக்கு காரணமான கதிர் ஆனந்திற்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு அளிககப்பட்டுள்ளது.இது திமுகவுக்கு (வெற்றி மிகவும் பின்டைவு ஏற்படும் என்று தெரிகிறது
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சத்திய பாதை &கீழை நியூஸ், நிர்வாக ஆசிரியரும் நிறுவனருமான “சையது ஆப்தீன்” அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.!
மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (CUJ) தலைவருமான, வி. அன்பழகன் அவர்களின் தாயார் தனம் அம்மாள் மறைவிற்கு. ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மற்றும் நமது கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராணிப்பேட்டை முகமது ஜான் (வேலூர்) மேட்டூர் சந்திரசேகரன் (சேலம்) ஆகிபோர் போட்டியிடவுள்ளனர்.
.அதிமுக தலைமை கழகம் இன்று 2 பேரையும் அறிவித்து உள்ளது.ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.எம் வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக ஏ.சி.சண்முகம் அறிவிப்புசென்னை அதிமுக தலைமை கழக ஆலோசனைப்படி ஒருங்கிணைப்பாளர் ஓ, பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி Uழனிச்சாமி ஆகியோர் வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக ஏ.சி.சண்முகத்தை அறிவித்து உள்ளனர். இவர் இரட்டை. இலை சின்னத்தில் போட்டியிடுவார்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை விசேஷ பூஜை நடைபெற்றது.வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற Uக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் திருவோண தீபம் நிகழ்ச்சி மாதம் ஒரு முறை சிறப்பாக நடைபெறும்.இன்று சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.ஏற்பாட்டை கண்ணன் பட்டாட்சியர் செய்து இருந்தார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜார்கண்ட் முஸ்லிம் வாலிபர் அடித்து கொலை ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
by mohan
written by mohan
ஜார்கண்ட் முஸ்லிம் வாலிபர் அடித்து கொலை ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.முஹமது அயூப்கான் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பா.அப்துர் ரஹ்மான் கண்டன உரையாற்றினார். அவர் கூறியதாவது: ஜார்கண்ட் மாநிலம் செரை கெலா என்னும் இடத்தில் தப்ரேஸ் அன்சாரி (24 ) கொடூமாக தாக்கப்பட்டார். போலீசில் ஒப்படைக்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி அங்கும் தாக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தாக்குதலுக்கு உள்ளான தப்ரேஸ் அன்சாரி 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல் தடுத்து நிறுத்த வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்தின் பெயரால் தொடரும் இது போன்ற தாக்குதல் கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. இது போன்ற தாக்குதல்கள் இனி நடப்பதை மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் ஆரிப் கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் பசீர், மாவட்ட துணை செயலர்கள் தினாஜ் கான், இபுராஹீம், சித்திக் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம்:
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக தொடர்கிறது . இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மணடபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 வது நாளாக தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ரூ,50 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பயிற்சி பட்டறை
by mohan
written by mohan
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பயிற்சி பட்டறை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மனையியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பில் உலகளாவிய படைப்புத்திறன் பயிற்சி பட்டறை கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.கல்லூரி முதல்வரும், துறை தலைவருமான முனைவர்எஸ்.சுமையா தலைமை வகித்தார்.ஆடை வடிவமைப்பு துறை உதவி பேராசிரியர் ஆர்.லட்சுமி வரவேற்றார்.நவீன முறையில் ஆடைகள் வடிவமைப்பு, புதிய தொழில் நுட்ப முறையில் ஆடை அலங்காரம் குறித்து மாணவிகளுக்குஇந்தியா, இலங்கை இன்ஸ்டுடூட் ஆப் டிசைன் இயக்குநர் நதிம் செயல் விளக்கம் அளித்தார். மாணவிரபீபா சுலைஹா நன்றி கூறினார். பயிற்சி பட்டறை ஏற்பாடுகளை பேராசிரியைகள் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாணியம்பாடி கவுஸ்பிரான் தர்கரவில் அன்னதானம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கவுஸ் பிரான்அவுலியா தர்காவில் இலவச அன்னதான நிகழ்ச்சி வாரம் ஒருமுறை நடைபெற்று வருகின்றது. அதன் நேற்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாட்டை தர்காவின் நிர்வாகிகள் சையத் பிர்தோஸ் பாத்திமா, சையத் அகமது பாஷா ஆகியோர் செய்து இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் கேரளா சமாஜத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் கேரளா சமாஜத்தில் 30 பெண்களுக்கு 5 மாதம் இலவச தையற்பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சமாஜத்தில் நடைபெற்றது.தமிழக எழுத்தாளர் சங்க கெளரவத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். தலைவர் பெர்னாட்ஷா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சங்க செயலாளர் பாரிதாசன் நன்றி கூறினார்.ஏற்பாட்டை வேலூர் கேரளா சமாஜ் டிரஸ்டிராதா கிருஷ்ணன் செய்து இருந்தார்,
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்
அடிப்படை வசதிகளை வழங்குவதில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை. 2024ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் ஆராய்ச்சித் துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 114 நாட்களுக்குள் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. தேசிய விவசாய சந்தையின் மூலம் விவசாயிகள் பலன் பெற மாநிலங்களுடன் இணைந்து செயல்படநடவடிக்கை.
5.6 கோடி கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிட முறை ஒழிக்கப்பட்டுள்ளது. 0 பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை. தேசிய விவசாய சந்தையின் மூலம் விவசாயிகள் பலன் பெற மாநிலங்களுடன் இணைந்து செயல்படநடவடிக்கை.காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க ’காந்திபீடியா’ உருவாக்கப்படும்.
இந்தியாவின் உயர்கல்வியை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும். 13,000 கிராம சாலைகள் பசுமைத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களைக்கொண்டு கட்டமைக்கப்படும். கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட புதிய டிவி சேனல் தொடங்கப்படும். “விளையாடு இந்தியா” திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம். ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் நிதி உதவி.
உலக சந்தையில் இந்திய கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளை விற்க நடவடிக்கை.ரயில் நிலையங்களை தரம் உயர்த்திநவீனமயமாக்கும்திட்டம்செயல்படுத்தப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு குறைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடரும். பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் மூலம் 1.05 லட்சம் கோடி திரட்ட திட்டம்நேரடி வரிவருவாய் 78% அதிகரிப்பு; வரிவருவாய் ரூ11.37 லட்சம் கோடியாக உயர்வு. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் இல்லை; தற்போது உள்ள முறையே தொடரும். நாட்டில் உள்ள 17 சுற்றுலாத் தலங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி. உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரூ.400 கோடி நிதி நெருக்கடியால் தவித்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ.70,000 கோடி மூதலீட்டு மூலதனம் வழங்கப்படும்.
“256 மாவட்டங்களில் உள்ள 1,592 பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”. நிலையை மாற்ற ஜல் சக்தி அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும். ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வரவு, செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி தள்ளுபடி அறிவிப்பு தொடரும்.மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் ரோஜா செடியினை ஆர்வத்துடன் வாங்கும் பள்ளி மாணவிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் டிஇஎல்சி தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி அருகில் ஓசூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கோவிந்தன் (35) என்பவர் ரோஜா செடியினை விற்பனை செய்து வருகிறார். மாணவிகளுக்காக 1 ரோஜா செடி ரூ 15 க்கு விற்பனை செய்யப்படுவதால் மாணவிகள் பள்ளி முடிந்ததும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.தமிழகமே தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில் இது போன்ற ஏதாவது மரம், செடி, கொடிகளை நட்டு பராமரித்தாலே போதும் மழை வருவதற்கு ஏற்றதாக இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர். இந்த பள்ளி பருவத்திலேயே ரோஜா பூ செடிகளை வாங்கி தங்களது வீட்டில் பராமரிக்கும் மாணவிகளை கண்டு சமூக ஆர்வலர்கள் சிலரும் பெரிதும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் பட்ஜெட்- பி.ஆர்.பாண்டியன்
by mohan
written by mohan
விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் பட்ஜெட்- பி.ஆர்.பாண்டியன்
இந்திய அரசின் 2019 – 20 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததற்கு விவசாயிகளுக்கு நன்றி சொல்லிவிட்டுவிவசாயத்துறையில்தனியாரை அனுமதிக்க ப்போவதாக அறிவித்துள்ளது ஏன்?இதனை ஏற்க இயலாது.வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்க்கொலைகள் தொடரும் நிலையில் கடன் தள்ளுபடி குறித்தோ, நிவாரணம் குறித்தோ எந்தவொரு அறிவிப்பும் இடம் பெறாதது விவசாயிகளை மறைமுகமாக ஒடுக்க நினைக்கிறதோ அரசு என்று அஞ்ச தோன்றுகிறது.விவசாய உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது குறித்தோ எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இந்தியா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 350 தாலுகாக்கள் முற்றிலும் நிலத்தடி நீர் பறிபோய்விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதனை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நதி நீர் இணைப்பு திட்டம் குறித்தோ, புதிய நீர் பாசனத் திட்டங்கள் குறித்தோ அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
நதிகள் தேசிய மயமாக்குவது குறித்து அறிவிப்புகள் இடம் பெறவில்லை. உள்நாட்டு நீர் வழி சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது.காப்பீடு துறைகளில் 100% தனியாரை அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பயிர் காப்பீடு திட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பெரும் முதலாளிகளுக்கான சலுகை நிறைந்ததாக உள்ளது.நிதி ஒதுக்கீடுகள் குறித்து வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை. இதனால் மாநிலங்களுக்கு மாநிலம் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டும் நிலை ஏற்படும்.மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே பரிசாக அமைந்துள்ளது என்றார்.மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் கூடல் நகர் ரயில்வே மேம்பாலத்தில் ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு பாலம் முழுவதும் ஆயில் கொட்டியுள்ளது இதை கவனிக்காத இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து கீழே விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை தற்போது அந்த ஆயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் நடைபெற்ற சீதக்காதி புறா டோர்னமென்ட் கிளப்( Seethakathi Pigeon Tournament Club – SPTC) மற்றும்ERPC பரிசளிப்பு விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் சீதக்காதி புறா டோர்னமென்ட்கிளப் (Seethakathi Pigeon Tournament Club – SPTC) மற்றும் ERPC பரிசளிப்பு விழா04/07/2019 அன்று மாலை 07.00 மணியளவில் பழைய அப்சரா தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஈரோடு புறா யூனியன் புறா கலை சிகரம் கந்தசாமி அப்பன் தலைமை தாங்கினார். மேலும் கீழக்கரையில் சீதக்காதி புறா டோர்னமென்ட்கிளப் (Seethakathi Pigeon Tournament Club – SPTC) தலைவர் செய்யது இபுராஹிம், செயலாளர் சஃபி, துணை தலைவர் அகமது, துணைச் செயலாளர் மன்சூர், பொருளாளர் மகேந்திரன், ஆலோசகர்ஜமான், தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலியபெருமாள், சென்னை பரசு, ஏர்வாடி கலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் KING OF PIGEON என்ற நான்கு நாட்கள் போட்டியில் முதல் பரிசு ₹.30,001/-, இரண்டாவது பரிசு15,001/- மற்றும் PRINCE OF PIEGEON எனும் இரண்டு நாள் போட்டியில் முதல் பரிசு ₹.20,001/-, இரண்டாவது பரிசு10,001/- ஆகியவற்றை அஜீத் மற்றும் ஆதில் ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கீழக்கரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில்ஆஜர்-வேலூரிலிருந்து புறப்பட்டார்.
by mohan
written by mohan
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திர்க்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அதில் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் ஜீலை 5-ம் தேதி நேரில் ஆஜராகலாம் என கடந்த 25-ம் தேதி நீதிபதி அனுமதியளித்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திர்க்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் 02.15 மணிக்கு ஆஜர் படுத்தப்படுவார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதியம், பணி வரன் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவரும், மாவட்ட தலைவருமான வி.பி. தினகரன், மாநில இணை செயலர் எஸ்.மாரிமுத்து தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் பி.ஞானசேகரன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் பி.பழனீஸ்வரன், டி.பி. செல்வம், துணை செயலர் எஸ்.மாரி முத்து முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்து, என்.ஜெகன் குமார் , தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார், அரசு ஊழியர் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.ராஜமூர்த்தி, மாவட்ட செயலர் எஸ்.ரவிச்சந்திரன், வட்டத் தலைவர் ஐ.நாகேந்திரன், டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயலாளர் கே.முருகானந்தம், மாவட்ட தலைவர் ஐ.பாரதி, மாவட்ட செயலாளர் எஸ்.சந்திர மோகன், வட்டத் தலைவர்கள் கே.என்.துரை ( ராமநாதபுரம் ), ஏ.ஜெகநாதன் (திருவாடானை), எஸ்.நெடுஞ்செழியன் (கடலாடி) , கே.கோவிந்தன் ( பரமக்குடி), எம்.வாசு ( கமுதி), எம்.ஆறுமுகம் (கீழக்கரை), கே.அர்ச்சுணன் (முதுகுளத்தூர்), முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் எம..காசி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஏ.செல்வம் நன்றி கூறினார். நியாய விலை கடைக்கு தனித்துறை அமைக்க வேண்டும், தமிழ்நாடு சிவில் சப்ளை கழக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், பணி வரன் முறை படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல முறை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் பரிசீலனை குழு அறிக்கை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல்லில் வட்டார போக்குவரத்து துறை மற்றும் நகர காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி
by mohan
written by mohan
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வாகன விற்பனை நிலையத்தில் திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் துறை சார்பாக தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.மேலும், விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த காரணத்தால் கடந்த மார்ச் 16-ம் தேதி நடக்க இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வேலூர் பாராளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் 5-ம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர், கே.வி.குப்பம்.குடியாத்தம், வாணியம்பாடி | ஆம்பூர் , அணைக்கட்டு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மொத்தம் 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரத்து 553 வாக்கு சாவடிகள் உள்ளன. 133 வாக்குசாவடிகள் பதட்டமானவை.வாக்களிக்க ஆயிரத்து 880 மின்னணு இயந்திரம் உள்ளது.வரும் 11-ம் தேதி பேட்டி மனு தாக்கல் துவக்கம் . மனு தாக்கல் 18, மனு பரிசீலனை 19 தேதி நடைபெறும். மனுக்கள் திரும்ப பெற 2 2 – கடைசி நாள் வாக்கு பதிவு ஆகஸ்ட் – 5 எண்ணிக்கை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என்று வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.