Home செய்திகள் வேலூரில் பெண்கள் மேம்பாடு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்..

வேலூரில் பெண்கள் மேம்பாடு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்..

by ஆசிரியர்

வேலூர் மாநகரில் உள்ள இ.வெ.ரா.நாகம்மை மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் 25/10/18 இன்று நடைபெற்றது.

சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தமிழ்நாடு சட்ட உதவி தொண்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கமும் இணைந்து பள்ளியில் பெண்கள் மேம்பாடு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் திரு.வி.தாமோதரன் (முதன்மை சார்பு நீதிபதி,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு) தலைமையில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினராக திரு.ஆ.ரா.சிவராமன் (திட்ட இயக்குனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வேலூர் மாவட்டம்) கலந்து சிறப்புரையாற்றினார்.

மேலும் பார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக பள்ளி தலைமையாசிரியர் நன்றி உரையாற்றினார். இம்முகாமை U.முகமது ரிஸ்வான், சட்ட ஆலோசகர்,(அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கம். வேலூர் மாவட்டம்) ஒருங்கிணைத்திருந்தார்..

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!