9
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வில்லிவாக்கத்தில் இறக்கப்பட்டு அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி பின்பு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தற்சமயம் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் அதிகரித்துவந்த நிலையில் இன்றுவுடன் 8-ம் தேதி நிறுத்தப்படுகிறது.காலை 8.30 மணிக்கு இறுதியாக 159 -வது ரயில் சேவையுடன் சென்னை வில்லிவாக்கத்திற்கு சென்றது. அங்கு அதிகாரிகள் வரவேற்றனர். 159-வது ரயிலுடன் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.