தமிழகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விழா கொண்டபடப்படவுள்ளது. இதனால் பூஜைகளுக்கு தேவையான பூக்கள், பழங்களின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை, சென்டு, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வரும் நிலையில் நாளை ஆயுதபூஜைக்காக பூக்களை அறுவடை செய்து விற்பணைக்காக உசிலம்பட்டி பூ சந்தைக்கு எடுத்து வந்த நிலையில் பூக்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பணையாகுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 1கிலோ மல்லிகைப்பூ ரூ400க்கும், முல்லை ரூ300க்கும், சம்பங்கி ரூ60க்கும், சென்டுபூ ரூ30க்கும் விற்பணையாவதால் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பூக்கள் பயிர்களுக்கு செலவழித்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக உசிலம்பட்டி பூ சந்தையில் மல்லிகை 400ரூ முதல் 500ரூ வரை விற்பணையாவதால் போதிய விலை கிடைக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மல்லகைக்கு சென்டு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு நிலைக்கோட்டை, ஆண்டிபட்டி, மாட்டுத்தாவணி உள்ளிட்ட சந்தையில் 1கிலோ மல்லிகைப்பூ 2000ரூ வரை விற்பணையானது குறிப்பிடத்தக்கது.
.உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.