13
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப் பநாயக்கனூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் வெட்டுகிளிகள் தாக்குதல் உள்ளதா என வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தக்காளி, கத்திரிக்காய் , வெங்காயம் போன்ற செடிகளில் வெட்டிகிளிகள் தாக்கம் அதிகமாக காணப்படும் எனவும், விவசாயிகள் அனைவரும் வெட்டி கிளிகள் குறித்து ஏதாவது தென்பட்டால் விவசாயிகள் உடனே வேளான்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வெட்டிகிளிகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த வெட்டுக்கிளி குறித்து ஆய்வில் வேளாண்மை இனை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை துறை இனை இயக்குனர் கலைச்செல்வன், வேளாண் கல்லூரி பேராசிரியர் மணிசேகரன் உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.