Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் 5-வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி-கண்காணிப்பு தடுப்பு பணிகள் தீவிரம்..

தென்காசி மாவட்டத்தில் 5-வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி-கண்காணிப்பு தடுப்பு பணிகள் தீவிரம்..

by Askar

தென்காசி மாவட்டத்தில் 5-வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி-கண்காணிப்பு தடுப்பு பணிகள் தீவிரம்..

சென்னையிலிருந்து வந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகனுக்கும் தொற்று உறுதியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேல பொய்கையில் சென்னையில் இருந்து வந்த 8 பேர் கொண்ட குழுவில் குடும்பத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது கணவர் மற்றும் 5 வயதுடைய மகன் உட்பட அவருடன் வந்த 7 பேருக்கும் மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பொய்கை கிராமம் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணியின் 5 வயது மகனுக்கும் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து அச்சிறுவனையும் அதிகாரிகள் தென்காசி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் பொய்கையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!