18
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவனை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி எரித்து படுகொலை செய்த சங்பரிவாரின் கொடூர செயலை கண்டித்தும், தொடரும் கும்பல் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் இன்று(03.08.2019) நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும், கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.