Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் – சுகாதார துறையினருடன் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி மாணவர்கள் களமிறங்கினர்.

கீழக்கரையில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் – சுகாதார துறையினருடன் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி மாணவர்கள் களமிறங்கினர்.

by keelai

கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினருடன் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை நடத்தினர். கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 08.03.17 மாலை கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, சுகாதார துறை மலேரியா கிளினிக் அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தலைமையாசிரியை விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் நிறைவடைந்தது.

இதில் ஏராளமான மாணவ மாணவிகளுடன், 30 க்கும் மேற்பட்ட சுகாதார துறையினரும் பங்கேற்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு வாசகங்களை கூறி கோஷமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சக்தி, ஹாஜா, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!