16
மதுரை அய்யர் பங்களா அருகில் உள்ள அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வழக்கறிஞராக உள்ளார். இவர் டூவீலரில் உத்தங்குடி சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு இருசக்கர வாகனத்தில் 2பேர் பின் தொடர்ந்து வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் பூங்கொடியாள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
You must be logged in to post a comment.