12
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் கடல் பகுதியில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய சித்தாமையை வனத்துறையினர் நாட்டுப்படகில் சென்று வலையை கிழித்து மீட்டு பாதுகாப்பாக கடலில் விட்டனர். இதனால், மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் காலங்களில் மீன்பிடியின் போது நடுக்கடலில் சேதமாகும் வலைகளை கடலில் விட்டெறியாமல் கரையில் சேர்த்து, அரிய வகை கடல் உயிரினங்கள் தொடர்ந்து வாழ உதவுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.