11
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எம்கேவி செய்யது அப்பாஸ் வெற்றி பெற்றார். ஏர்வாடி மீன் மார்க்கெட் திடலில் நடந்த விழாவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.சுவாமிநாதன், ஊராட்சி செயலர் பி.எஸ்.ஜெ அஜ்மல் கnன் முன்னிலையில் ஊராட்சி தலைவராக எம்கேவி செய்யது அப்பாஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஊராட்சி உறுப்பினர்கள் 15 பேர் பதவியேற்றனர். கிட்டங்கி செய்ய து இபுறாகிம் அம்ஜத் உசேன், தெற்கு தெரு முகைதீன், அன்சாரி ,சுல்தான் சாகுல் ஹமீது, மாலிக், புரோஸ் கான், பாதுஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.