Home செய்திகள் நிலக்கோட்டையில் விவசாயிகளிடம் பூவுடன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரி முற்றுகை!..

நிலக்கோட்டையில் விவசாயிகளிடம் பூவுடன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரி முற்றுகை!..

by ஆசிரியர்

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் பைகளை பொதுமக்கள், வணிகர்கள் பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.. மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது: இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மஞ்சுளா மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் நிலக்கோட்டை நால் ரோடு,, பூ மார்க்கெட், பஸ் நிலையம்,, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கடைகளில் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் வகைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பூ மார்க்கெட்டில் சில விவசாயிகள் பாலித்தின் பைகளில் பூக்களை  வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த செயல் அலுவலர் கோட்டைச்சாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனடியாக பறிமுதல் செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் உடனே செயல் அலுவலரை முற்றுகையிட்டு பாலிதீன் பை தயாரிக்கும் கம்பெனிகளை மூடுவதை விட்டு இப்படி விவசாயிகளின் பூக்களைப் பறிப்பது எப்படி நியாயம் என கேட்டு முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் கோட்டைச்சாமி  அரசு,  பாலிதீன் மற்றும் பத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது.. மீறிப் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்  எனவே, விவசாயிகள் நாளை முதல் துணிப்பை மற்றும் சாக்குப்பை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து சில கடைகளில் பிளாஸ்டிக் கலந்த துணி பைகளை வைத்திருந்தனர். அதனையும் பறிமுதல்  செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!