மதுரையில் நீட் தேர்வால் மனம் உடைந்து- வலி நிறைந்த வார்த்தைகளால் கடிதம் எழுதி தற்கொலை செய்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா அவர்களுக்கு நீதி வழங்கக்கோரியும்! தொடர்ந்து மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை கீழ வெளிவீதி அண்ணா சிலை முன்பாக 12, செப்டம்பர் மாலை மதுரை மாவட்ட தலைவி-கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது.. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை வடக்கு தொகுதி தலைவி வரவேற்புரை நிகழ்த்தினார்.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட தலைவி சகோதரி- சிராஜ் நிஷா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட செயலாளர் சகோதரி- நஜ்மு நிஷா. ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட செயலாளர் சகோதரி-சமீமா நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர்கள் பங்கேற்றனர் மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.