Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி..

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (30/09/2019) மாலை 3.00 மணியளவில் வேலைவாய்ப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் இரண்டாமாண்டு மாணவி M.பாரீகா பர்வீன் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் மாணவிகளை தங்களது தனித்திறனை வளர்க்குமாறும் போட்டி தேர்வில் கலந்துக் கொள்ளுமாறும் கூறி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர் திரு.ஹாஜா அஷ்மீர், இராம்நாட் ஐ.ஏ.எஸ் அகடாமி பயிற்சி மையம், இராமநாதபுரம் மாணவிகளிடம் படிப்பிற்கான நோக்கமே வேலை என்றும், தனது இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் மற்றும் மாணவர்கள் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் S.சிவந்திமாலா, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியை மற்றும் வேலைவாய்ப்பு திறன் ஒருங்கிணைப்பாளர் S. ஜெர்மியா ஜென்மரசி இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி S.வீர சபரீஸ்வரி நன்றியுரை வழங்க இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!