11
இராமநாதபுரம், செப்.1-
கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் அனாஸ், 30. மனநலம் பாதித்த இவர், ஏர்வாடி தர்ஹா வில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை இவர் ஏர்வாடி வெட்டமனை அரசு மேல்நிலைபள்ளி எதிரே உள்ள நீர் தேக்கதொட்டி மீது ஏறி குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவலறிந்த ஏர்வாடி காவல் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் போலீசார், ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சண்முகவேல் ஜெயராமன் தலைமையில் ஏர்வாடி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அனாஸை பாதுகாப்பாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் மீட்ட போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.