Home செய்திகள் சோழவந்தான் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஊழியர் கூட்டம்

சோழவந்தான் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஊழியர் கூட்டம்

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட ஊழியர் கூட்டம் நடைபெற்றது.இதற்கு மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.கே.சாமி தலைமை தாங்கினார். செல்லை ஒன்றிய தலைவர் ஆனந்தன்,செயலாளர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் வரவேற்றார்.இதையடுத்து தேசியத் துணைத் தலைவரும்,மாநில பொதுச் செயலாளருமான பி.வி.கதிரவன், தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தியாக வரலாறு குறித்து,வரும் சட்டசபைத் தேர்தலில் சிங்கச் சின்னத்தை அமோகமாக வெற்றி பெறச் செய்யுமாறும் பேசினர். .இதில் மாநில தலைவர் கர்ணன், செயலாளர் பசும்பொன்,தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, மாவட்ட செயலாளர் ஆதிசேடன், பொருளாளர் அய்யப்பன்,பொதுச் செயலாளர் ராஜா,ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணனூர் தமிழரசி தமிழரசன், முதலைக்குளம் பூங்கொடி பாண்டி மற்றும் விக்கிரமங்கலம்,முதலைக்குளம்,சக்கரப்பநாயக்கனூர்,எரவார்பட்டி,பானாமூப்பன்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!