மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகன் மார்க்கண்டேயன் 57 ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று இரவு பெரியார் நிலையத்திலிருந்து விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது அவனியாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மார்க்கண்டேயன் தவறிக் கீழே விழுந்தார். அவர் மீது கண்டெய்னர் லாரியின் பின் டயர் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த ஷேர் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்கள் சிறு காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.