11
தமிழகத்தில் டோல் பிளாசா நிறுவனத்தை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் சேலம் – நாமக்கல் சாலையிலுள்ள டோல்கேட்டில் பணிபுரியும் ஏஐடியுசி தொழிற்சங்க பணியாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இன்று (10-12-19) காலை 10 மணியளவில் பேச்சுவார்த்தை நடக்க இருந்ததாகவும் அந்தப் பேச்சுவார்த்தை முடிவில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் தமிழகத்திலுள்ள அனைத்து டோல்கேட் களிலும் AITUC மற்றும் SCPL – டோல்கேட் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் அல்லது முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை கொடைரோடு அருகே உள்ள டோல்கேட்டில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.