12
உலகமெங்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு செயற்கை வளங்கள் உருவாக்கப்பட்டு வரும் வேளையில் இயற்கையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவது, அதுவும் முக்கியமாக இளைய தலைமுறைக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
இயற்கை வளத்தை பாதுகாத்தலின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம் கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் இன்று (03-03-2018) நடைபெற்றது.
இஸ்லாமியா துவக்கப் பள்ளி மற்றும் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வன உயிரினங்கள் மற்றும் வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை கீழக்கரை வனச்சரக அதிகாரி மாணவர்கள் மத்தியில் விளக்கி கூறினார்.
You must be logged in to post a comment.