பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாடு பகுதியை சேர்ந்த முகமது சரிப் (60). மனைவி ஜபின் தாஜ், 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். முகமது சரீப் கடந்த 25 வருடங்களாக துபாய் எமீரெட்ஸ் கேட்டரிங் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்து சென்றார். கடந்த ஏப்ரல் 27 தேதியன்று மாரடைப்பால் துபாயில் மரணம் அடைந்தார்.
இவரின் உடலை மீட்டு தரவேண்டும் என அவரின் உறவினர்கள் SDPI கட்சி நிர்வாகிகளை நாடினர். பின்னர் துபாயில் உள்ள துபாய் இந்தியன் சோசியல் ஃபோரம் அமைப்பினர் இந்திய வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு 01.05.2019 நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் அவரது உடல் வந்தது.
இவரின் உடலை SDPI கட்சி திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் மஜித், கிழக்கு தொகுதி செயலாளர் காதர், மாவட்ட இணையதள பொருப்பாளர் முத்தலிப், டோல்கேட் கிளை தலைவர் PKM பாஷா, செரிப், செம்பட்டு முஹம்மது அலி ஆகியோர் உடலை பெற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு இறந்தவரின் உடலை தாயகம் அனுப்பி வைத்த துபாய் இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கும், திருச்சி மாவட்ட, நகர SDPI கட்சி பொறுப்பாளர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவிப்பதாக இறந்தவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
தகவல்: SDPI திருச்சி மாவட்டம்.
You must be logged in to post a comment.