மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை ஆரம்பம் முதல் இறுதி வரை உள்நகர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். அச்சாலை வழியாகவே பல்வேறு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகூடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.
உதாரணமாக நேரு நகர் சந்திப்பு பழைய கருப்புசாமி கோவில் அருகே பாலம் இறக்கத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து, சுமார் அரை அடிக்கு மேல் பள்ளமாகவும், சில இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாகவும் உள்ளது. இதனால் பாலத்தில் இருந்து இடதுபுறம் இறங்கும் பொழுது பள்ளத்தை கவனிக்கவில்லையெனில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியும் உள்ளது, அந்த பள்ளி மாணவ, மாணவர்கள் சென்று வரும் கடினத்தை பார்த்து பள்ளி நிர்வாகமும் பாரமுகமாக இருப்பது மிகவும் வேதனையான விசயம்.
இதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்தியாளர்:- வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.