Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் 24.11.2023 அன்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 6270 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 15698 ஹெக்டேர், பயறு வகைகள் 349 ஹெக்டேர், பருத்தி – 1255, கரும்பு 1222 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1255 ஹெக்டேர், தென்னை 14130 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2023 ரபி பருவத்திற்கு காப்பீட்டுத் தொகையாக நெல்-11 க்கு ரூ.514.5/ஏக்கர், மக்கா சோளம்-III க்கு ரூ.278.25/ஏக்கர், உளுந்துக்கு ரூ.210/ஏக்கர், பாசிப் பயறுக்கு ரூ.207.80/ஏக்கர், பருத்தி -III க்கு ரூ.636.64/ஏக்கர், வாழைக்கு ரூ.3600/ஏக்கர், வெங்காயத்திற்கு ரூ.1182.51/ஏக்கர் மற்றும் மிளகாய்க்கு ரூ.1220/ஏக்கர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விபரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு காப்பீடு செய்திட கடைசி நாளாக நெல்லுக்கு 15.12.2023, உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு 15.11.2023, மக்காச் சோளம் -III மற்றும் பருத்தி -III ஆகியவற்றிற்கு 30.11.2023, வாழைக்கு 29.02.2024, வெங்காயம் மற்றும் மிளகாய்க்கு 31.01.2024 என காலவரையறை செய்துள்ள விபரமும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையினர், கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலைத் துறையினர் மற்றும் தென்காசி மாவட்ட பட்டுவளர்ச்சித் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர். வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் தேசிய பாதுகாப்புத் வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தைச் சார்ந்த இரண்டு விவசாயிகளுக்கு தலா ரூ.42000 வீதம் 84,000 மானியத்தில் சுழற்கலப்பைகளும், ஒரு பயனாளிக்கு ரூ.39,600 மானியத்தில் விசை களை எடுப்பானும், நெல் ஜெயராமன் பாராம்பரிய இயக்கம் வாயிலாக ரு.125 மதிப்புள்ள 10 கிலோ கருங்குறுவை நெல் விதைகள் ஒரு பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் முழு மானியத்திலும் வழங்கினார்.

கடையம் வட்டார தோட்டக்கலைத் துறையினர் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.150 மானியத்தில் பழச் செடிகள் தொகுப்பு இரண்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஆலங்குளம் வட்டார தோட்டக்கலைத் துறையினர் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.8325 மானியத்தில் ஒரு பயனாளிக்கு கொய்யா நாற்றுக்களும், ரூ.8000 மானியத்தில் மண்புழு உரப்படுக்கையும் வழங்கப்பட்டன. சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறையினர் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.75,000 மானியத்தில் மினி டிராக்டரும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 216 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சு.ஜெயபாரதி மாலதி, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!