9
தஞ்சை அருகே வெள்ளைப் பிள்ளையார் கோயில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிகாலையில் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தில் முகமது இக்பால் என்பவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதனுள் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 160 விலை உயர்ந்த பழைய மற்றும் புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது,
பறிமுதல் செய்த செல்போன்களை பறக்கும் படையினர் தஞ்சை கோட்டாட்சியர் சுரேஷிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து கோட்டாட்சியர் சுரேஷ் முஹம்மது இக்பாலிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
——————————
You must be logged in to post a comment.