மதுக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்ட நிலையிலும் அகற்றப்படாத தடுப்புகள்?- மீண்டும் மது கடைகளை திறப்பார்கள் என எதிர்பார்ப்பில் மது பிரியர்கள்?
அரசு உத்தரவுக்கினங்க மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு ஓரிருநாள் செயல்பட்டுவந்த நிலையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் உயர்நீதி மன்றம் மதுபானக்கடைகளை மூடி சீல்இட உத்தவிட்டதின் பேரில் தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டது. மேலும், மதுக்கடை செயல்பட்டு வந்த காலத்தில் மதுபான கடைகள் முன் மதுப்பிரியர்கள் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களால் நீண்ட தடுப்பு கட்டப்பட்டிருந்ததை பலகடைகளில் அப்புறப்படுத்தி விட்டனர். ஆனால், ஆத்தூர் தாலுகா பகுதிகளில் இயங்கி வந்த ஒருசில மதுக்கடைகள் முன்பு இன்னும் தடுப்புகள் அகற்றப்படாமல் போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதோடு மேலும், மதுபானகடைகள் மீண்டும் திறப்பதற்கு வாய்ப்புள்ளதோ! என மக்கள் மத்தியில் சிந்தனை நிலவி வருகிறது.
திண்டுக்கல், பக்ருதீன்
You must be logged in to post a comment.