Home செய்திகள் மண்டபம் வட்டார கலைத்திருவிழா போட்டிகள்…

மண்டபம் வட்டார கலைத்திருவிழா போட்டிகள்…

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.22- இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, வட்டார வள மையம் சார்பில் மண்டபம் வட்டார கலைத்திருவிழா போட்டிகள் உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் 3 நாள் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ் கர்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், நேஷனல் அகாடமி பள்ளி முதல்வர் வசுந்தாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உச்சிப்புளி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யலட்சுமி. வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா வரவேற்றார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், புதுராஜா. அரசு மேல்நிலைப்பள்ளி இருமேனி பள்ளி மேலாண் குழு தலைவி தீப சுரேகா. அரசு மேல்நிலைப்பள்ளி கடுக்காய்வலசை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மேக்னா, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி. தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காளிதாஸ், பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!