செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களுக்கு என ஐந்து தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..
தமிழ்நாடு மீனவர் பேரவையின் பத்தாவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் ,காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் இரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடல் மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகனார் ” கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் ஓர் இரண்டு தொகுதிகள் மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அதிலும் குறிப்பாக புதுவை மாநிலத்தில் மீனவர்களுக்கு என எந்தத் தகுதியும் ஒதுக்கப் படுவதில்லை என்றும் கூறினார் .தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் மீனவர்களுக்கு என 5 சட்டமன்ற தொகுதிகளாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார் . மீனவர்களின் பிரதிநிதிகளாக நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தங்கள் முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர்களுக்குதான் தங்கள் வாக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் சிலம்பொலி சிலம்பப் பள்ளியில் மல்லர் கம்பம் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா.
இராமநாதபுரம் மாவட்டம் சிலம்பொலி சிலம்பப் பள்ளியில் மல்லர் கம்பம் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா இன்று இராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் தலைவர் சுப்பிரமணியன்,மானில மல்லர் கம்ப பயிற்சியாளர் செல்வமொழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.சிலம்ப பயிற்சியாளர் லோகசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர் சிலம்ப பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு தகுதியுடையோா் வருகிற 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சங்கத்தின் தலைவா் எ.வ.வேலு தெரிவித்தாா்.திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில், பொங்கல் பண்டிகையையொட்டி, கலை நிகழ்ச்சிகள், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், மாணவ – மாணவிகளின் உரைவீச்சு, தெருக்கூத்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளும், நகரில் மகளிா்களுக்கு கோலப்போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்த் தொண்டாற்றியவா்களுக்கு மறைமலை அடிகளாா் விருதும், பொதுத் தொண்டு புரிபவா்களுக்கு டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி விருதும், கலைச் சேவை செய்து வருபவா்களுக்கு கலைவாணா் என்.எஸ்.கே.விருதும், ஆன்மிகச் சேவை செய்து வருபவா்களுக்கு கிருபானந்த வாரியாா் விருதும், விருது பெறும் அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, நிகழாண்டுக்கான மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுகளுக்கு விண்ணப்பிப்போா், பரிந்துரை செய்வோா் தகுந்த விவரங்கள், ஆதாரங்களோடு வருகிற 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை தலைவா், அருணை தமிழ்ச் சங்கம், நெ.54, திருக்கோவிலூா் சாலை, சாரோன், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பலாம். விருதுகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அருணை தமிழ்ச் சங்கத் தலைவா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியிலிருந்து முக.அழகிரியின் மாநாட்டிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கிளம்பிச் சென்றது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
மறைந்த திமுக தலைவரின் மகன் முக.அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களை ஜன.3ம் தேதி மாலை மதுரையில் சந்திக்க ஏற்ப்பாடு செய்துள்ளார்.இவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவரரகவும் அழகிரி ஆதரவாளருமான அலெக்ஸ்பாண்டி தலைமையில் அழகிரி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
உசிலம்பட்டி கருப்பு கோவில் அருகே தயாராக வைக்கப்பட்டிருந்த பேருந்தில் அழகிரி ஆதரவாளர்கள் தாங்களாகவே ஏறிக் கொண்டனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட மினி பேருந்திகளில் 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆம்னிவேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் மதுரை கிளம்பிச் சென்றனர்.ஒரு தனி நபருக்கு இவ்வளவு கூட்டமா என பொமுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.சமீப காலங்களில் உசிலம்பட்டிப் பகுதிகளில் பெரிய அரசியல் கட்சி மாநாட்டிற்கே இவ்வளவு பேர் கூடாத நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கூடியது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.வருகின்ற தேர்தலில் திமுவிற்கு எதிரான நிலைப்பாட்டை அழகிரி எடுத்தால் திமுக டெபாசிட் இழப்பது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் தெருவில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது .ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் தெருவில் இளைஞர் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டுபத்தாம் வகுப்பு ,பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் நாங்க சங்கர் தலைமை வகித்து பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் ஏழை எளிய முதியோர் 30 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ்,மற்றும் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் துரை முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சர்ச் தெரு இளைஞரணியினர் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சோழவந்தான் கிளை சங்கத்தின் கூட்டம் சங்கத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். இக்கூட்டத்தில் , மின் அமைப்பாளர்களுக்கு மத்திய தமிழக அரசின் மூலம் சலுகைகள் பல்வேறு நிவாரணங்கள் கிடைப்பது குறித்து அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .நலவாரியத்தில் பதிவு செய்வதால் கிடைக்கும் பயன்கள், குறித்து மதுரை அமைப்புசாரா தொழிலாளர்கள் நல மாவட்டத் தலைவர் சங்கரபாண்டி விளக்கங்கள் கூறினார் பொருளாளர் சுகுமாரன் நன்றி கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அறிவிப்பு மாரி கண்ணன் என்பவர் சிலம்புகளை பயிற்சி அளித்து வருகிறார் இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் குறிப்பாக பெண் குழந்தைகள் 7 முதல் 13 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் சிலம்பாட்டம் பயின்று வருகின்றனர் அலங்கார சிலம்பாட்டம் போர் சிலம்பாட்டம் என இரண்டு வகைப்படும்.இதில் கோவில் திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் விளையாடப்படும் சிலம்பாட்டம் அலங்கார சிலம்பாட்டம் எனப்படுகிறது ரிப்பன் ஆகியவை சிலம்பு கம்பத்தில் கட்டி பார்ப்பவர்களை கவரும் வண்ணம் சிலம்பு சுற்றுவது அலங்கார சிலம்பாட்டம் எனப்படுகிறது இதேபோல் போட்டிகள் மற்றும் தற்காப்பு கலைகளை சிலம்பாட்டத்தில் விளையாடப்படும் சிலம்பாட்டம் போர் சிலம்பாட்டம் என அழைக்கப்படுகிறது.தற்காப்பு கலை மற்றும் கதையுடன் யுடன் நவீன சிலம்பாட்டம் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு உடல் வலிமையுடன் மன வலிமையும் கற்று எதிரிகள் தாக்கும் போது தடுத்து தற்காப்uது சிலம்பம் ஆகவே ஆர்வமுடன் பயில்கிறோம் என மாணவ, மாணவிகள் கூறுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை யில்குப்பைகள் அல்லாமல் கழிவுநீர் நீராக மாறி திறந்து கிடக்கும் அவலம்.
மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஹோட்டல்களில் பயன்படுத்தும் டீ கப்புகள் மற்றும் குப்பைகள் அல்லாமல் கழிவுநீர் நீராக மாறி திறந்து கிடக்கும் அவலம்!!!!!!! மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பைபாஸ் சாலை பிரபல தனியார் உணவகம் எதிரே மழைநீர் வடிகால் கால்வாயை ஒன்று உள்ளது இந்த கால்வாயில் பொதுமக்கள் பயன்படுத்திய தீர்ப்புகளும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் மழை நீரும் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இது திறந்தவெளியில் இருப்பதால் இதில் யாரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது பேப்பர் கப்புகளை வெளியே அனுப்பி குப்பையில் முறைப்படி தொட்டியில் போடாமல் கால்வாயில் வீசி செல்வதால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டு நீர் வெளியே வந்து துர்நாற்றமும் வீசுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதனை அகற்றி வாய்க்கால்களை மூட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் உத்தரவு இட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?????
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சாதனை விளக்க தெருமுனை தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. கலந்து கொண்டார் உடன் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சி.தங்கம், எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, கு.திரவியம், சோலை ராஜா, அண்ணாநகர் முருகன், அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக பங்கேற்றனர் அதிமுக சாதனைகளைப் பற்றி பொதுமக்களிடையே விளக்கி கூறினார்கள்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக 2.1.2021 SDPI கட்சி ஆனந்தூர் கிளையின் சார்பாக ஆனந்தூர் பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நைனா முகம்மது ஆனந்தூர் கிளை தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,மகாதீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார் ,
இதில் தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் முஹம்மது ஹனீப் அவர்கள் மற்றும் தொகுதி இணைச்செயலாளர் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹிம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்,கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்ல சேதுபதி அவர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் SNKA இலக்குவன் அவர்கள் மற்றும் சிறுநாகுடி பஞ்சாயத்து ஊராட்சி மன்றத்தலைவர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் மற்றும் சிறுநாகுடி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியர்கள் அவர்கள் மற்றும் ராதாணூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்மேலும் SDPI கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்!!!2.1.2021 ஆனந்தூரில் திருவாடானை தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் தொகுதி செயலாளர் முஹம்மது ஹனீப் முன்னிலையில் தங்களை தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் பைசல்,ஜாஹிர்,அசாருதீன் அஜ்மீர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1831).
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840ல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது.
பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பையில் ஒரு மாற்று உடையை எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் குளித்து உடை மாற்றிவிட்டு பணியாற்றினார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார். விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். இந்த 21- நூற்றாண்டிலேயே மறுமணம் செய்து கொள்பவர்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சமூகம் இருக்கையில் 18-ம் நூற்றாண்டிலேயே விதவைகளுக்கு மறுமணம் செய்துவைத்தார். 1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். 1897ல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர்.
புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். அக்கால கட்டத்தில் தீண்டாமையின் கொடுமை அதிகம் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் மறுக்கப்பட்டது. ஆகையினால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கண்டு, தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். சாவித்திரிபாய் புலே நல்ல கவிஞரும் ஆவார். மராத்தியத்தில் நவீன கவிதைப் போக்கு இவரில் கவிதைகளிலிருந்தே தொடங்குகின்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆராயும் பணி புரிந்துகொண்டிருக்கும் பேராசிரியர் டாம் உல்ப் என்பவர் ஆயிகோஸ் என்ற உலகப் பத்திரிகையில், சாவித்திரிபாய் புலேவை `இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை’ என்று குறிப்பிடுகிறார்.
1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான ‘கவிதை மலர்கள்’ என்ற நூலை வெளியிட்டார்கள். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே இருந்ததால், வரலாறு என்பது அவர்களே அவர்களுக்காக எழுதிக்கொண்டதாக அமைந்துவிட்டது. ஒவ்வோர் இந்தியரும் நினைவில் வைத்திருக்க வைத்துக்கொள்ள வேண்டியவருக்கு உன்னதமான சேவையும், தொண்டும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலேயே போய்விட்டன. கடந்த 2017 ம் ஆண்டு இவரின் பிறந்த தினத்திற்கென பிரத்தியேக `கூகுள் டூல்’ அமைத்துச் சிறப்பித்தது கூகுள். இன்று கல்வி அனைவரிடத்திலும் இருக்கிறது வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலையில் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாள் பெண் குழந்தைகளின் கல்வி தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே மார்ச் 10, 1897ல் 21, 1994ல் தனது 66வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. 2015ல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம் வில்சன் மார்கன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1906).
வில்லியம் வில்சன் மார்கன் (William Wilson Morgan) ஜனவரி 3, 1906ல் அமெரிக்காவில் பிறந்தார். மார்கன் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்திலும் இலீ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலி பயின்றாலும் இறுதி ஆண்டில் வெளியேறி விட்டுள்ளார். இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தன் பணியை தொடங்கியுள்ளார். அங்கெ மாணவருக்கு வகுப்புகளும் எடுத்துள்ளார். இந்த வான்காணகம் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த்தாகும். இவர் அப்பல்கலைக்கழகத்தில் 1927ல் பட்டப் படிப்பை முடித்து அறிவியல் இளவல் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு இவர் பயின்ற இரு பல்கலைக்கழக மதிப்புகளும் யெர்க்கேசு வான்காணக பாடங்களும் கருதப்பட்டன. இவர் சிகாகொ பல்கலைக்கழகத்தின் யெர்க்கேசு வான்ஆனகத்தில் இருந்தபோது தன் முதுவர் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். இவர் முனைவர் பட்டத்தை 1931 திசம்பரில் பெற்றார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்ததும் அப்பல்கலைக்கழகத்திலேயே இணைந்து 1936ல் உதவிப் பேராசிரியராகவும் 1947ல் பேராசிரியராகவும் 1966ல் தகைமைப் பேராசிரியராகவும் ஆனார்.மார்கன், பிலிப் சைல்ட்சு கீனான் அவர்களுடன் இணைந்து கதிர்நிரலால் விண்மீன்களை வகைபடுத்தும் (உடுக்கண வகைபாடு) கதிர்நிரல் வகைபாடு MK அமைப்பு முறையை உருவாக்கினார். இவர் பல பால்வெளிப் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கினார். ஹபிள் விரும்பிய எளிய, பண்[பியலான, கண்கோளவகை மதிப்பிடுகளுக்கு மாற்றாக, பால்வெளியின் புறநிலையான, அளக்கமுடிந்த இயல்புகளைப் பயன்படுத்தும் பால்வெளி அமைப்புகளை உருவாக்கினார். இவர் பால்வெளிக்கொத்துகளின் நடுவன் அமைந்த மீப்பொருண்மைப் பால்வெளிகளுக்கான இப்போது பரவலாகப் பயன்படுத்தும் CD வகைப்பாட்டை உருவாக்கினார். 1970 இல் இலவுரா பி. பவுட்சுவுடன் இணைந்து இன்றும் பயன்படுத்தும் பால்வெளிக்கொத்துகளுக்கான பவுட்சு-மார்கன் வகைபாட்டை உருவாக்கினார். இம்முறை CD பால்வெளிகள் தாம் செறிவான வகை ஒன்று பால்வெளிக்கொத்துகள் என இனங்கண்டது.மார்கன் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். மேலும் 1960 முதல் 1963 வரை அதன் இயக்குநராகவும் விளங்கினார். இவர் டொனால்டு ஆசுடெர்பிராக், சுட்டிவார்ட் சார்ப்ளெசு ஆகிய இருவரோடு இணைந்து, ஓ, பி வகை விண்மீன்களின் தொலைவுகளை அளந்து நம் பால்வழிப்பால்வெளியில் சுருள்கைகள் நிலவுதலை நிறுவினார். சில காலம் இவர் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராக விளங்கினார். இந்த வெளியீடு முதலில் ஜார்ஜ் எல்லேரி ஃஏல் அவர்களால் உலக அளவில் வானியற்பியலாளர்களின் கூட்டுறவை மேம்படுத்த தொடங்கியதாகும். இவர் சிகாகோ பல்கலைக்கழக வானியல் துறையின் தலைவராக 1960 முதல் 1966 வரை விளங்கினார். இவரது முதன்மை ஆய்வுக் கருப்பொருள் விண்மீன், பால்வெளி வகைபாடு ஆகும். இவர் நம் பால்வழிப் பால்வெளியில் சுருள்கைகள் அமைதலை நிறுவவும் உதவியுள்ளார்.இந்த அறிவியல் தகுதிகளைத் தவிர சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் வானியல் இயக்குநராகவும் ஜார்ஜ் ஏல் அவர்களின் வானியற்பியல் இதழின் மேலாண்மை ஆசிரியராகவும் இருந்துள்ளார். புரூசு பதக்கம் (1958), என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1961), அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (1964), அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம் (1980), எர்ழ்செல் பதக்கம் (1983) போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார். குறுங்கோள் 3180 மார்கன் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம் வில்சன் மார்கன் ஜூன் 21, 1994ல் தனது 88வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஸ்டாலின் தூண்டிவிட்ட போராட்டங்களை முறித்து தமிழக அரசு சாதனைதேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பெருமிதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கால்நடை பராமரிப்பாளர்கள், வேளாண் பெருமக்கள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், ஜமாத் நிர்வாகிகள், அதிமுக., நிர்வாகிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மரக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் பின்னர், சாயல்குடி அருகே நரிப்பையூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: உண்மையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் தொண்டர்களால் அதிமுக., மீண்டும் ஆட்சிக்கு வரும். மற்ற கட்சிகளை பிளவுபடுத்த ஸ்டாலின் நினைத்தால் உங்கள் கட்சி தவிடு, பொடி ஆகிவிடும். அதிமுக.,வை பிளவுபடுத்த நினைக்கும் திமுக., தலைவர் ஸ்டாலின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது. இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ள லட்சக்கணக்கானோர் தேர்தல் களத்தில் அதிமுக., வெற்றிக்கு உழைத்து வருகின்றனர். தீய சக்தி திமுக., வை வீழ்த்த இளைஞர்கள் சபதம் எடுத்துவிட்டனர். ஸ்டாலின் ஆசை, நிராசையாக போய் விடும். ஸ்டாலின் கணிப்பு தவறு. அன்றைய கால கட்டம் வேறு. இன்றைய கால கட்டம் வேறு. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த ஆட்சி ஒரு வாரம் நீடிக்காது. ஒரு மாதம் கூட தாங்காது என ஸ்டாலின் திட்டமிட்டு போட்ட குறுக்கு வழி பலிக்காமல் போய்விட்டது. மக்களுக்கான நலம் பயக்கும் பல்வேறு நலத் திட்டங்களால் 4 ஆண்டுகளாக இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக ஸ்டாலின் தூண்டி விட்ட போராட்டங்கள் கொஞ்சம், நஞ்சமல்ல. குடிநீர் பிரச்னை, புயல் காலங்களில் வாழ்வாதார பிரச்னை, கொரோனா பேரிடர் உள்ளிட்ட இடர்களை சமாளித்து மக்கள் விரும்பும் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறோம். மருத்துவ துறையில் வளர்ந்து விட்ட வல்லரசு நாடுகள் அமெரிக்கா, ஈரான் நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பேரிடரை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழகம் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது தமிழக அரசின் சாதனை. அரசு டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி கட்டுக்குள் கொண்டு வந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இது போன்ற பல்வேறு சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் தமிழக அரசு, அதிமுக மீது தொடர்ந்து வீண் பழி சுமத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலினுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் நினைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலை திமுக., விற்கு ஏற்படும். அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி பல்வேறு தேசிய விருதுகளை பெற்று தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 19 லட்சம் பேருக்கு மறைமுக , நேர் முக வேலை வாய்ப்புகள் தரும் ரூ.3.05 லட்சம் கோடி வெளி நாட்டு முதலீடு ஈர்த்துள்ளோம். 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச மடி கணினி வழங்கியுள்ளோம். அடுத்த நான்காண்டுகளில் பசுமையான மாவட்டமாக ராமநாதபுரம் திகழ ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கவுள்ளோம். ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒப்பற்ற தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசி பெற்ற ஏழை மக்களுக்கான அரசு இது. மக்கள் எண்ணங்களை பிரபலிக்கும் அரசு இது. பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட அரிசி அட்டை ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2,500 உடன் பொங்கல் பொருட்கள் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்க உள்ளோம். அதிமுக., வின் எஃகு கோட்டை என மீண்டும் நிரூபிக்க ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து அதிமுக ஆட்சிக்கு துணை நில்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), சிறுபான்மை பிரிவு செயலர் அ.அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி, அதிமுக., ஒன்றிய செயலர்கள் அந்தோணி ராஜ் (சாயல்குடி), என்.கே.முனியசாமி பாண்டியன் (கடலாடி), ஆர்.தர்மர் (முதுகுளத்தூர்), எஸ்.பி.காளிமுத்து(கமுதி), ஊராட்சி தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி. ஆனி முத்து, எம்.சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மற்றும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட மக்களை சந்தித்தார் தமிழக முதல்வர்………
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கீழக்கரை மட்டும் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஜமாத் மற்றும் மீனவர்களை சந்தித்து கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பேசினார்.
கீழக்கரை உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கீழக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்துத் தரவேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய அப்பாவிகள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர் ரை நீக்க கோரியும், கீழக்கரை அரசு மருத்துவமனையை நவீனமயமாக்க கோரியும், கீழக்கரை புதிய பாலத்தை மீன்பிடி துறைமுகமாக மாற்றக் கோரியும், ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை ஏர்வாடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் சேவை அமைப்பது சம்பந்தமாக சென்ற ஆண்டு மத்திய அரசு அறிவித்ததை உடனடியாக நிறைவேற்ற கோரியும், வெளிநாடு செல்பவர்களுக்கு அரசு வழிகாட்டி மையம் அமைப்பது சம்பந்தமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மீனவர்கள் சார்பில் மன்னார் வளைகுடா பகுதிகளில் துறைமுகம் அமைப்பது சம்பந்தமாகவும், கடற்கரைப் பகுதிகளில் கழிவறை வசதி செய்து தருவது சம்பந்தமாகவும், கடல் சீற்றம் புயல் போன்ற இயற்கை பேரிடர் போது கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை கருவி அனைவருக்கும் கொடுப்பது சம்பந்தமாகவும், மற்றும் பல கோரிக்கைகள் மீனவர்கள் சார்பிலும் அளிக்கப்பட்டது. அதற்கு முன் இந்த முன்னதாக கீழக்கரை நுழைவுவாயிலில் கீழக்கரை அதிமுக நகர செயலாளர் தலைமையில் தமிழக முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
“இன்றைய செய்தி நிரந்தர வரலாறு”
படியுங்கள் கீழை நியூஸ்.
S.K.V முகம்மது சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் புத்தாண்டு முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை .
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா என்றாலே நிலக்கோட்டை பூ மார்க்கெட் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு மிகவும் பிரபலமான பூமார்க்கெட் ஆகும். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை தாலுகா , உசிலம்பட்டி தாலுகா, ஆத்தூர் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவது விவசாயிகளின் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு கொண்டுவரும் பூக்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், சேலம், கேரளா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினம்தோறும் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு மற்றும் மழைப் பொழிவின் காரணமாக மல்லிகைப் பூக்களை பொருத்தவரை வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது.10 கிலோ பூக்க வேண்டிய இடத்தில் ஒரு கிலோ பூக்கள் மட்டுமே மல்லிகை பூ பூத்து வருவதாலும் அதேசமயம் நாளை மறுதினம் புத்தாண்டு வருவதால் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ 3000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோன்று மற்ற பூக்களுடன் கிலோவில் பின்வருமாறு: கலர் பிச்சி பூ 700 ரூபாய்க்கும், வெள்ளை பிச்சிப்பூ 900 ரூபாய்க்கும், அரளிப்பூ 150க்கும், சம்பங்கி 120க்கும், செவ்வந்திப்பூ மஞ்சள், ஊதா நிறம் பூக்கள் 150க்கும் , வெள்ள செவ்வந்திப்பூ 125க்கும், முல்லைப்பூ 1400 க்கும், கனகாம்பரம் பூ ரூபாய் 1500 க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் 4200 விற்பனை செய்த பூக்கள் திடீரென 3000 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் விவசாயிகள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சனாகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள எம்.எம்.கே பெட்ரோல் பங்க் எதிரில் ரஞ்சித் பஞ்சர் கடை அருகில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழக்கரை கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்த நசுருதீன் மகன் பதுரூஸ் வயது 18 அவர் இரு சக்கர வாகன கடையில் வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்ய வந்தவருக்கு தலையில் மரம் விழுந்து லேசான காயமும், இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் இன்று (02/01/2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்பகுதியில் வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மாலை வர இருப்பதால் மரத்தை அகற்ற அனைத்து அரசு துறை வருவாய்த்துறை நகராட்சி துறை காவல்துறை தீயணைப்பு மட்டும் மீட்புப்படை மின்சாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய செய்தி நிரந்தர வரலாறு படியுங்கள் கீழை நியூஸ்.
SKV முகம்மது சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே அசைவ உணவு சமைத்து சாப்பிடும் திருவிழா நடைபெற்றது. திருமங்கலம் அருகே சொரிக்காம் பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கரும்பாறை முத்தையா சுவாமி திருக்கோவிலில் விவசாயம் செழிக்கவும் மழை பொழிந்து கிராம மக்கள் நோய் நொடியின்றி இருப்பதற்காகவும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சுவாமிக்கு நேர்த்திக் கடனாக செலுத்திய ஆடுகளை வைத்து ஆண்களே சமைத்து ஆண்களுக்கு மட்டுமே அசைவ உணவு விருந்து அளித்து கிராமத்தினர் மகிழ்வது வழக்கம். அதே பேல இந்தாண்டும் 2000 கிலோ அரிசி,55 கறுப்பு நிறஆடுகளை வெட்டி வருவல், குழம்பு மற்றும் மலைபோல் சமைத்த அரிசி சாதத்தை ஆண்களே சமைத்த பின்பு அவற்றை சுவாமிக்கு படைத்து பூஜித்த பின்பு அங்கு கூடி வரும் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு ஒரே இடத்தில் மண் தரையில் அமர வைத்து இலை போட்டு அசைவ உணவினை பரிமாறி சொரிக்கான்பட்டி கிராமத்தினர் மகிழ்ந்தனர். மதுரை, திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனத்துடன் அசைவ உணவினையும் உண்டு மகிழ்ந்தனர்.
இதில் சிறு குழந்தைகள், பெண்கள் கலந்து கொள்ள முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமைத்த உணவு மற்றும் கறி எஞ்சினால் மண் தரையை தோண்டி குழியில் கொட்டி புதைத்து விடுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நகர பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஷரீப், நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முல்லை மன்னன், பச்சையப்பன், சீனு, முன்னாள் கவுன்சிலர் முருகமணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காவிரி குண்டாறு திட்டத்திற்கு 20 நாளில் அடிக்கல்.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் 3 லட்சம் பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் மானிய தொகையுடன் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் 2016 சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். இதன்படி தற்போது தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 11,35,600 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு வசதியாக ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான காவிரி -குண்டாறு இணைப்பு திட்டம் இன்னும் 20 நாளில் அடிக்கல் நட்டு தொடங்கி வைக்கப்படும். இத்திட்டம் செயல்பாட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக திகழும். பாம்பன் அருகே குந்துகாலில் ரூ.70 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் 26 பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,680 மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்படுவதால் 130 இடங்கள் அரசு பள்ளி மாணாக்கருக்கு ஒதுக்கும்போது இதன் எண்ணிக்கை 443 ஆக உயரும். கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக 8 மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்காவே உழைத்த ஒப்பற்ற தலைவர்கள்எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன் தமிழகத்தில் அதிமுக., ஆட்சி மீண்டும் அமைய ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து , நலத்திட்டங்கள் தொடர துணை நிற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
You must be logged in to post a comment.