Home செய்திகள் உசிலம்பட்டியிலிருந்து முக.அழகிரியின் மாநாட்டிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கிளம்பிச் சென்றது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டியிலிருந்து முக.அழகிரியின் மாநாட்டிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கிளம்பிச் சென்றது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

by mohan

மறைந்த திமுக தலைவரின் மகன் முக.அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களை ஜன.3ம் தேதி மாலை மதுரையில் சந்திக்க ஏற்ப்பாடு செய்துள்ளார்.இவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவரரகவும் அழகிரி ஆதரவாளருமான அலெக்ஸ்பாண்டி தலைமையில் அழகிரி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உசிலம்பட்டி கருப்பு கோவில் அருகே தயாராக வைக்கப்பட்டிருந்த பேருந்தில் அழகிரி ஆதரவாளர்கள் தாங்களாகவே ஏறிக் கொண்டனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட மினி பேருந்திகளில் 10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆம்னிவேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் மதுரை கிளம்பிச் சென்றனர்.ஒரு தனி நபருக்கு இவ்வளவு கூட்டமா என பொமுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.சமீப காலங்களில் உசிலம்பட்டிப் பகுதிகளில் பெரிய அரசியல் கட்சி மாநாட்டிற்கே இவ்வளவு பேர் கூடாத நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கூடியது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.வருகின்ற தேர்தலில் திமுவிற்கு எதிரான நிலைப்பாட்டை அழகிரி எடுத்தால் திமுக டெபாசிட் இழப்பது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com