செய்திகள்
மண்டபத்தில் மீனவர் சந்திப்பு மாநாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு: ஆயத்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்..
இராமநாதபுரம், ஆக.5 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆக.17, 18ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிவதையொட்டி, மண்டபம் முகாம் கலோனியர் பங்களா அருகே ஆக.18ல் நடைபெறும் மீனவர் சந்திப்பு மாநாடு மேடை ஆயத்த பணிகளை, மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சி துறை ஐ.பெரியசாமி, பிற்பட்டோர் நலத்துறை, கதர்வாரிய தொழில் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆகியோர் இன்று (05/07/2023) ஆய்வு செய்தனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம், மண்டபம் முகாம் வருவதை முன்னிட்டு ஆக.18ல் மண்டபம் முகாம் கலோனியர் பங்களா அருகே நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இங்கு விழா மேடை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தோம். 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார் என்றார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர்கள் கார்மேகம், நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, செயல் அலுவலர் இளவரசி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி: ஆக. 7, 8 ல் மின் தடை..
இராமநாதபுரம், ஆக.5 – ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையம் அரியமான் முதல் ராமேஸ்வரம் வரை உயர் மின்னழுத்த பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி ஆக.7, ஆக.8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இவ்விரு நாளில், மண்டபம் பகுதியில் 98 இடங்களில் உள்ள மரங்கள், ராமேஸ்வரம் பகுதியில் 230 இடங்களில் உள்ள மரங்கள் அகற்றப்பட உள்ளன. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் 58 இடங்களில் பழுதான மின் கம்பங்கள், மண்டபம் பகுதியில் 117 இடங்களில் பழுதான மின்கம்பங்கள் அப்புறப்பட உள்ளன. இத்தகைய சிறப்பு பணியின் காரணமாக அரியமான், சுந்தரமுடையான், உடையார்வலசை, நடுமனைக்காடு, இடையர்வாடி, வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், மண்டபம் முகாம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் , நீதிமன்றம், திட்டகுடி, கோவில், வேர்க்கோடு, புது ரோடு, தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்மமடம், மெய்யம்புளி, பொந்தபுளி, ராமர்தீர்த்தம் வடக்கு, தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம்.ஆர்.டி.நகர், கரையூர், மல்லிகை நகர், ரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரியான்குண்டு, மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இவ்விரு நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5:30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வடகரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் செயலாளர் ஷாஜித் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நகரத் துணை செயலாளர் சேக் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் அப்துல் பாசித் துவக்க உரை நிகழ்த்தினார்.
பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், வர்த்தக அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி , மண்டல தலைவர் சுல்பிகர் ஆகியோர் உரையாற்றினா். நகர நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் சிக்கந்தர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள், யூனிபார்ம், கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் காஜா செரீப் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை, மாநகராட்சி மேயர் வழங்கினார்…..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம், ஆக.5-
மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அளித்த கோரிக்கை மனு: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், உதவி வழங்குதல், மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்கான உதவித் திட்டம் (ADIP திட்டம்), வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தை ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக முகாம்களை நடத்தி, பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர், முருகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நாய் கடி அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு ஒரு தீர்வு இல்லாத நிரந்தர பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் பல சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களும் பல் வேறு அமைப்புகளுடன் இணைந்து போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் நாய் கடிக்கு ஆளானால் எந்த மாதிரயான உடனடி மருத்துவம் செய்ய வேண்டும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக 04/08/2023 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக பொதுமக்கள் மத்தியில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்களித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே : மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் 58 கிராமதொட்டி பாலம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.இந்த தொட்டிப்பாலத்தின் அருகே கல்குவாரி அமைத்து தினமும் வெடி வெடிப்பதால் 58 கிராம தொட்டி பாலம் விரிசலில் ஈடுபட்டு உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் தெரிவித்து வந்த நிலையில் இன்று தொட்டி பாலம் முன் அமர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் கலகுவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது.மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். அதன்படி நேற்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இதில், ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரானது என்று மசூதி கமிட்டி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாதிடப்பட்டது.இந்நிலையில், ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும், மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்தது.ஞானவாபி மசூதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆய்வை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அகழாய்வு கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பறிமுதல் ! குற்றவாளி தப்பி ஓட்டம் !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வன உயிரின காப்பாளர்களும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கீழக்கரை வனவர் கனகராஜ் கடல் சார் உயிர் இலக்கு படை வனவர் ராமச்சந்திரன் வன பாதுகாப்பு படை வனவர் சுப்பிரமணியன் மற்றும் வன பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கீழக்கரை அருகே இருக்கக்கூடிய நத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த தோப்பினை ஆய்வு செய்யும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பதப்படுத்திய கடல் அட்டை 600 கிலோ அவித்த நிலையில் இருந்த கடல் அட்டை 90 கிலோ மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து கீழக்கரை வன சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் பிடிபட்ட சட்ட விரோதமான பொருள்கள் சுமார் 70 லட்சம் மேல் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாலுக்கா கிராம உதவியாளர்கள் பணியிடமாற்றம் ! கீழக்கரை தாசில்தார் அதிரடி உத்தரவு !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்டு பணி புரியம் கிராம உதவியாளர்கள் பணியிடம் மாறுதலை கீழக்கரை தாசில்தார் பழனி குமார் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாறுதல் செய்யப்படும் வருவாய் கிராமம் உதவியாளர்கள் பணியிடம் விபரங்கள் அடங்கிய தொகுப்பு :-
பாண்டி கீழக்கரை குரூப், சரவணக்குமார் மாயாகுளம் குரூப், பி.கோவிந்தன் வண்ணான் குண்டு குரூப், நைனா முகம்மது மாணிக்கனேரி குரூப் , விஜயராணி பனையடியேந்தல் குரூப், முருகேசன் ஏர்வாடி குரூப், கலைவாணி
ஆலங்குளம் குருப், அபிநய ஈஸ்வரி பெரியபட்டினம் குருப் ,சந்தானம் குளபதம் குரூப் ,பூமிநாதன் ரெகுநாதபுரம் குரூப் ,பூமி களிமங்கொண்டு குரூப் ,ரேவதி பள்ளம் மோர்குளம் குரூப், வகிதா பானு வெள்ளாமரிச்சுகட்டி குரூப் , பாலகிருஷ்ணன் இடம் பாடல் குரூப் ,நாகசுந்தரி களரி குரூப், லட்சுமி மாலங்குடி குரூப் , நவீன் வேலனூர் குரூப் ,முனியசாமி குதக்கோட்டை குரூப் , சந்திரசேகர் உத்திரகோசமங்கை குரூப் ஆகியோர் மாறுதல் செய்து உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை தாலுகா வருவாய் கிராமம் உதவியாளர்கள் பணியிடமாற்றம் உத்தரவு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1,800 கிலோ ரேஷன் அரிசி, 120 லிட்டர் பாமாயில் பறிமுதல்.. விசாரணை் தீவிரம்..
ராமநாதபுரம், ஆக.4 –
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் கோகிலா தலைமையில் வருவாய் துறையினர் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக (03/98/2023) நேற்றிரவு 7:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த தகவல்படி ஆர்.எஸ்.மங்கலம் சிலுகைவயல் மேல் கரை ஊரணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ வீதம் 36 மூடைகளில் இருந்த ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 120 லிட்டர் பாமாயில் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி அருகே மேல பெருங்கரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பாலமுருகனை (27) கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராகுல் காந்திக்கு மீண்டும் கிடைத்தது எம்.பி. பதவி: ஜெயித்துக் காட்டிய ராகுல்!!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
“அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது;
இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?
ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அருகே தென்னந்தோப்புக்கு தீ வைப்பு… நூற்று கணக்கான மரங்கள் சேதம்..
இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையும் தீப்பிடித்து தென்னை மரங்கள் மற்றும் நாவல் மரங்கள் பூச்செடிகள் உள்ளிட்டவை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தென்னந்தோப்பிற்கு அருகில் உள்ள இவரது தாய் பேச்சியம்மாளின் சமாதியும் தீ தீவைக்கப்பட்டு இருந்தது தெரிந்து மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதில், கருப்பு ராஜா என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக கூறுகிறார். ஆகையால், மிகுந்த விரக்தியில் உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சுமார் 60க்கும் மேற்பட்ட பச்சை தென்னை மரங்களை தீவைத்து எரித்த நபர்களை கைது செய்யாத காவல்துறையினர் மீது மாவட்ட எஸ்பி உரிய விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் காவல்துறை அதிகாரியான எனக்கே , இந்த நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்னவாகும் எனவும் ஆகையால் ,இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தென்னந்தோப்பிற்கு தீ வைத்தவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆகையால் , எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட எஸ்பி இடம் வேண்டுகோள் வைத்துள்ளார்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் நாய்களின் அட்டகாசம் உள்ள நிலையில் இன்று அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமிது இப்ராஹிம் மற்றும் கௌரவ தலைவர் P.R.L சதக் அப்துல் காதர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்து கீழக்கரையில் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் குறையை தீர்க்க முடியாத கவுன்சிலர் பதவி தேவையில்லை… தீர்வு இல்லையெனில் கீழக்கரை 18வது வார்டு SDPI கட்சியை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வேன் என மனு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ சார்ந்த ஜக்கினா பேகம் உள்ளார்.
கீழக்கரையில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்தும் அச்சிறுத்தும் வரும் காரணத்தினால் அதை கட்டுப்படுத்தவில்லை எனில் நான் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நகர்மன்ற தலைவர் இடம் இன்று (04/08/2023) மனு அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்தில் வந்த ரோடு ரோலர் வாகன டிரைவர் மாரடைப்பால் மரணம்.போலிசார் விசாரணை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் காசிமாயன் மகன் அலெக்ஸ்(28).இவர் ரோடு ரோலர் வாகனத்தின் டிரைவராக உள்ளார்.தற்போது தேனியில் வேலை பார்த்து வருகின்றார்.நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து விட்டு தனியார் பேருந்தில் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அருகே வரும் போது அலெக்ஸ் அருகிலிருந்தவரிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.அவர் டிரைவரிடம் தகவல் தெரிவிக்க பேருந்து டிரைவர் உடனடியாக பேருந்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனார்.இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல்நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.ஓடும் பேருந்தில் மாரடைப்பால் மரணமானது அவர் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பாக நாய் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து நாய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கடித்துக் கொண்டிருப்பதால் நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு பல சட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இன்று (04/08/2023) மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் நாய்களை பிடிப்பது சம்பந்தமான கோரிக்கை மனு அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பிடிபட்ட 8 நீளம் உள்ள ஐந்து சாரைப்பாம்புகள்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னையா என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 சாரைப்பாம்புகள் இருப்பதாக பாம்பு பிடி வீரர் சினேக் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் பாபு தலைமையிலான அவரது குழுவினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் சுமார் 8 அடி நீளம் உள்ள ஐந்து சாரை பாம்புகளை போராடி பிடித்துள்ளனர்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றில் இறங்கி பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர் சினேக் பாபு குழுவினரை வடக்கம்பட்டி கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர். அதனை தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஐந்து சாரைப்பாம்புகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதிக்குள் அவிழ்த்து விடப்பட்டன.
You must be logged in to post a comment.